search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்திமரம்"

    • அத்தி மரம் பல வகைப்பட்டது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகைகள் உள்ளன.
    • அத்திமரம் ஆற்றங்கரையினில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமானவை.

    அத்தி மரம் பல வகைப்பட்டது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகைகள் உள்ளன.

    அத்தி நடுத்தர மரமாகும். இது சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும். மரப்பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும்.

    முட்டை வடிவில் சற்று நீளமாக இருக்கும்.

    காய்கள் தண்டிலும், கிளைகளிலும். அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும்.

    குளோப் ஜாமூன் அளவில் உருண்டையாக லேசான பச்சை நிறம் கொண்டதாக இருக்கும்.

    காய் பழுத்தபின் கொய்யாப்பழம் போல் லேசான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். பழுத்ததும் கீழே உதிர்ந்து விழுந்து விடும்.

    சங்க இலக்கியத்தில் 'அதவம்' என்றும் கூறப்படும் இச்சிறுமரம், பூத்துக் காய்க்குமாயினும் மலர்கள் வெளிப்படையாகத் தெரியாது.

    'அத்தி பூத்தாற்போல' என்னும் பழமொழியினாலேயே அத்தி பூக்கும் என்பதாயிற்று.

    அத்திக்காயின் பிஞ்சு, முட்டை வடிவானது. இதற்குள்ளே அத்திப்பூக்கள் நிறைந்திருக்கும்.

    அத்திக்காயின் உள்ள 4 வகையான பூக்கள் உள்ளன. ஆண் பூ, பெண் பூ, மலட்டுப் பூ என்பன.

    அத்திமரம் ஆற்றங்கரையினில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமானவை.

    இதன் கனி மிக மென்மையானது என்றும் நண்டு மிதித்த இதன் கனி குழையும் என்றும் குறுந்தொகை கூறுகிறது.

    அத்தி மரத்தின் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கின்றன.

    ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்வார்கள்.

    ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப் படுத்தலாம்.

    • நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
    • இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்த சோகை நோய் வராது.

    தினசரி 2 அத்தி பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

    நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

    கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களை ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.

    இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள்.

    இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

    சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

    அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.

    மேலும் இவை கல்லீரல் - மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

    கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன.

    மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.

    இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்த சோகை நோய் வராது.

    இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

    சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

    மற்ற எல்லா மரங்களை விடவும் பறவைகளை ஈர்க்கும் சக்தி அத்தி மரத்திற்கு உள்ளது.

    அத்திப்பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

    நரசிம்ம அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, ஹிரண்யகசிப்புவைக் கிழித்தக் கொன்றபின், அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    அத்தி மரத்தை தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள் உண்டு.

    திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் 2 வது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது.

    • அத்திக்கள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது.
    • இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும்.

    அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும்.

    பொரியலாகவும் சாப்பிடலாம்.

    அத்தி மரப் பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடம்பு நன்றாக விருத்தியாகும்.

    ரத்த விருத்தியெல்லாம் கொடுக்கும். அத்திக்காய், அத்திக்காய் பிஞ்சு இதையெல்லாம் பொரியல் செய்து சாப்பிட்டால் எல்லா சக்தியும் கிடைக்கும்.

    குறிப்பாக தசை இறுகும். சிலருக்கு தொங்கு தசை இருக்கும். அதெல்லாம் நீங்கி, எலும்பு வலுப்பெறும்.

    வைட்டமின் ஏ, பி, சி, டி என்று எல்லாமே அத்திக்காயில் இருக்கிறது.

    அதனால் அத்தி மரம் என்பது எவ்வளவு விசேஷமான மரம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

    இலைகளை உலரவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள்.

    இதனைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

    உடலின் எந்தத் துவாரத்தில் இருந்தும் ரத்தம் வெளியேறினால் இது கட்டுப்படுத்தும்.

    வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க அத்தி மர இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

    மரத்தின் பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணமாகும். அழுகிய புண்களைக் கழுவ வெளி மருந்தாக பயன்படுத்தலாம்.

    மரப்பட்டையை இடித்து, பசுவின் மோரில் உலர வைத்து, அதைக் குடித்தால் பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும் பெரும்பாடு, மாதவிலக்கு கட்டுப்படும்.

    அத்திப்பழம், அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம். இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாதநோய்கள், மூட்டுவலி, சர்க்கரை நோய் தொண்டைப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாகும்.

    இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை.

    பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.

    அத்திக்கள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது.

    இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும்.

    • அத்திப்பழத்தை அப்படியே நாளும் 10-20 என்ற அளவில் சாப்பிடலாம்.
    • துவர்ப்பும் இனிப்பும் உடைய அத்திப் பழம் ரத்த விருத்திக்கு உறுதுணையாகும்.

    அத்தி கல்ப மூலிகைகளில் ஒன்றாகும். தெய்வ அருள் பாவிக்கும் மரமும் ஆகும். பால் வடிவச் சாறு உடையது.

    அத்தி மரத்தின் அடி பாகத்திலும் மற்றும் கிளைகளிலும் கொத்துக் கொத்தாகக் காய்க்கும்.

    துவர்ப்பும் இனிப்பும் உடைய அத்திப் பழம் ரத்த விருத்திக்கு உறுதுணையாகும்.

    தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் அத்தி மரம் வளர்கிறது.

    அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும்,

    பழம் ஜீரணியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் ஆற்றல் கொண்டது.

    சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும்.

    இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை அத்தி பழ பயன்பாட்டால் நீங்கும்.

    அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

    முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிசர்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த

    பொடியில் 5 கிராம் 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து காலை மாலையாக 20 நாள்கள் கொடுக்க

    அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

    அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சம அளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி.

    கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, ரத்தபேதி ஆகியவை தீரும்.

    அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமஅளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து

    சுண்டைக் காய் அளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு,

    மூலவாயு, ரத்தமூலம், வயிற்றுப்போக்கு தீரும்.

    அத்திப்பழத்தை அப்படியே நாளும் 10-20 என்ற அளவில் சாப்பிடலாம்.

    காலை மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம்.

    பதப்படுத்தி -5 நாட்கள் நிழலில் காயவைத்து-தேனில் போட்டு சாப்பிடலாம்.

    உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு சாப்பிடலாம்.

    தாது விருத்திக்குச் சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.

    அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும்.

    அடிமரத்தின் கீழ் வேறைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும்.

    இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை, பாளையில் பால் சுரக்கும். இதன் வேரில் பால் சுரக்கும்.

    தெளிந்த இந்த நீரை நாளும் 300 முதல் 400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும்.

    நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் அழகு பெறும்.

    • சுமூகமான சூழல் உருவாகும். தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும்.
    • அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய அதிர்வலைகள் கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும்.

    கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக,

    பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம்

    என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே அவர்களிடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும்.

    சுமூகமான சூழல் உருவாகும்.

    தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும்.

    அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய அதிர்வலைகள் கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும்.

    அதனால்தான் வாழ்க்கை வளம் பெறுவதற்கும், கணவன் மனைவிக்குள் நெருக்கம், கடைசி வரையில்

    ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் அத்தி மரம் வழிபாடு மிகவும் விசேஷமாக இருக்கும்.

    அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல்

    எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.

    இதுபோன்ற அபார சக்தியும் அத்தி மரத்திற்கு உண்டு.

    • அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
    • தமிழர் வரலாற்றில் அத்தி மரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு.

    தமிழர் வரலாற்றில் அத்தி மரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு.

    அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

    சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரமாக அத்தி மரம் உள்ளது.

    சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி.

    அதேபோல இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு.

    அதாவது அத்தி மரத்தில் காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே.

    அதை அதிகமாகப் பார்க்க முடியாது. அதனால்தான் சுக்ரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது.

    ×