search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஜேபி"

    • கடத்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர பண்டாரி மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு தாவினார்.
    • வீடியோ ஒன்றை பகிர்ந்து, 'அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்தில் இருந்து பாஜகவுக்கு மீண்டும் செய்தி வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது

    ஏழு மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேரத்ல் நடைபெற்றது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. மக்களவை தேர்தலைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக இந்தியா கூட்டணி கட்சிகள் கருதுகின்றன.

    1800 கோடி செலவில் பாஜக ராமர் கோவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகர் உள்ள பைசாபாத் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியிடம் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வி பாஜகவுக்கு பேரிடியாக அமைந்த நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

    முன்னதாக பத்திரநாத் தொகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்தது. ஆனால் கடத்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர பண்டாரி மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு தாவினார். இதனால் அங்கு இடைத்தேர்தல் தற்போது நடந்துள்ள நிலையில் கட்சி தவியதால் பண்டாரி மீதிருந்த மக்களின் நம்பிக்கை குலைந்து மீண்டும் காங்கிரஸ் அங்கு வென்றுள்ளது. இந்த வெற்றியை குறிப்பிட்டு காங்கிரஸ் தற்போது பாஜகவை விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் தனது அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, 'அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்தில் இருந்து பாஜகவுக்கு மீண்டும் செய்தி வந்துள்ளது. இப்போதாவது உங்களின் வெறுப்பு அரசியலை நிறுத்திக்கொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளது.

    தற்போது காங்கிரஸ் சார்பில் நின்ற லக்பத் புடோலா பாஜக சார்பில் நின்ற பண்டாரியை 5,224 என்ற வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • ஆர்எஸ்எஸ், பாஜக நடத்தும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
    • ராமர் கோவில் கட்டும் முயற்சியை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பாராட்டு.

    அயோத்தி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதில்லை என காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியின் இமாச்சல பிரதேச தலைவர் பிரதீபா சிங், கோவில் கட்டும் முயற்சியை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது. எனது கணவரும் முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங், கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு ஆலயங்களை அவர் புதுப்பித்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நானும் எனது மகன் விக்ரமாதித்ய சிங்கும் இணைந்து பெற்றுள்ளோம். ஆனால், வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கு செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ராமர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் எங்கள் மதம் முன்னேற வேண்டும் என நாங்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங் கூறுகையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க போவதாக தெரிவித்தார். மேலும் "அயோத்தி ராமர் கோவில் இயக்கத்துக்கு எனது தந்தை ஆதரவாக இருந்துள்ளார். எங்களை பொறுத்தவரை இது அரசியல் விவகாரம் கிடையாது. இந்து மதத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் திசையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் என கூறினார்.

    தேர்தல் ஆதாயத்துக்காக முழுமையடையாத கோவிலை திறந்து வைக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தி, உள்ளிட்டோர் அழைப்பிதழை நிராகரித்தது குறிப்பிடதக்கது

    ×