search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவம் துபே"

    • முகமது நபிக்கு எதிராக பேசும் நசியா கான் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்ஸ்டாவில் பதிவிட்ட சிவம் துபே மனைவி.
    • பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துபேவை கண்காணிக்க வேண்டும் என பாஜக தலைவர் கோரிக்கை

    இந்திய அணியின் ஆல் ரவுண்டரான சிவம் துபே 2021 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அஞ்சும் கானை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் அஞ்சும் கான் இஸ்லாம் மதத்தையே பின்பற்றி வருகிறார்.

    இந்நிலையில், அஞ்சும் கான் பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் நசியா கானை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அந்த பதவியில், முகமது நபிக்கு எதிராக தொடர்ச்சியாக நசியா கான் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று #arrestnaziaelahikhan என்ற ஹேஸ்டேக் உடன் அவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலானதை தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.

    தற்போது அந்த பதிவிற்கு பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் நசியா கான் பதில் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், நீங்கள் ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளீர்கள். நீங்கள் இப்போது இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல. எனக்கு எதிரான வன்முறையை தூண்டும் பொய்யான தகவலை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துபேவை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

    அவர் தனது பதிவில் பிசிசிஐ, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் டெல்லி காவல்துறையை டேக் செய்துள்ளார்.

    • துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.
    • சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறக்கியுள்ள இந்திய அணியானது அயர்லாந்துக்கு எதிரான தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

    இதையடுத்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் சிவம் துபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சிவம் துபே பந்துவீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை பேட்டராக விளையாட வைக்க வேண்டும் என்பதே சரியான முடிவு. சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

    மேலும் சர்வதேச அளவில் சஞ்சு சாம்சன் இந்தியா அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். மேலும் துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.

    ஒரு பேட்டாராக அவரை நீங்கள் பயன்படுத்து உள்ளீர்கள் எனில் அவரைவிட சிறந்த பேட்டிங் உக்தியை கொண்டுள்ள சாம்சனை நீங்கள் நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். ஏனெனில் சிவம் துபே சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடினாலும், சஞ்சு சாம்சனால் பந்தை தாமதமாக விளையாடுவதுடன் டைமிங்குடனும் விளையாட முடியும்.

    மேலும் அவரால் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான புல் ஷாட்டும் விளையாட முடியும் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான அவரை பயன்படுத்துவது சிறந்த உத்தியாக இருக்கலாம்.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறினார்.

    • ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர் விளாசிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை துபே முறியடித்துள்ளார்.
    • ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்சர் விளாசியுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய சென்னை அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சிவம் துபே 13 பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர் விளாசிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை துபே முறியடித்துள்ளார்.

    ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்சர் விளாசியுள்ளார். துபே 992 பந்துகளில் 100 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளார். ஒட்டு மொத்தமாக ரஸல் மற்றும் கெய்ல் ஆகியோருக்கு அடுத்தப்படியாக துபே உள்ளார்.

    குறைந்த பந்தில் 100 சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் விவரம்:-

    சிவம் துபே -992

    ஹர்திக் பாண்ட்யா - 1046

    ரிஷப் பண்ட் - 1224

    யூசப் பதான் -1313

    யுவராஜ் சிங் - 1332

    ஒட்டுமொத்தமாக குறைந்த பந்தில் 100 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் விவரம்:-

    ரஸல் - 657 பந்துகள்

    கெய்ல் - 943 பந்துகள்

    சிவம் துபே - 992 பந்துகள்

    ஹர்திக் பாண்ட்யா - 1046 பந்துகள்

    பொல்லார்ட் - 1094

    • வாழ்க்கையில் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
    • இளைஞர்கள், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கிச் செல்லும் படியாகக் கருத வேண்டும்.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதுதான் என VIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வாழ்க்கையில் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். தாய் தந்தையரை மதிக்க வேண்டும். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்க்ஸ்-க்கு விளையாடியதுதான். இளைஞர்கள், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கிச் செல்லும் படியாகக் கருத வேண்டும்.

    இவ்வாறு துபே கூறினார்.

    இதுவரை 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி சிவம் துபே, 1106 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் அதிக பட்சமாக 95 ரன்கள் எடுத்துள்ளார். 2019 முதல் ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த இவர், பெரிதாக சோபிக்கவில்லை.

    2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகள் விளையாடிய அவர் 24 போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார். 2022, 2023-ம் ஆண்டில் சென்னை அணியில் இடம் பிடித்த இவர் 27 போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்ற அணிகள் இவரை பெரிதும் கண்டுகொள்ளாத நிலையில் சென்னை அணியின் கேப்டன் டோனி இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தார்.

    அந்த வாய்ப்புகளை அவர் சிறப்பாக பயன்படுத்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் கற்றுள்ளார்.
    • 2024 உலகக்கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளோம்.

    பெங்களூரு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஷிவம் துபே தொடர் நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில் முன்பை விட தற்போது ஷிவம் துபே நன்கு முன்னேறியுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டிராவிட் கூறியதாவது:

    இந்த தொடரில் துபே தன்னுடைய கையை உயர்த்தி, பாருங்கள் என்னிடம் திறமைகள் இருக்கின்றன. நீங்கள் எதிர்பார்ப்பதை செய்யக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது என்பதை எங்களுக்கு காண்பித்துள்ளார். குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை அவர் எங்களுக்கு காண்பித்தார்.

    அதேபோல பந்து வீச்சிலும் அவர் ஒரு சில நல்ல ஓவர்களை வீசினார். குறிப்பாக பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் கற்றுள்ளார். அதனால் 2024 உலகக்கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளோம்.

    என்று அவர் கூறினார்.

    ×