search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரிழிவு நோய் பாதிப்பு"

    • சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாது இருக்கும் போது கண் பாதிப்பு ஏற்படலாம்.
    • குண்டாக இருப்பவர்களை மட்டுமே சர்க்கரை நோய் பாதிக்கும் என்பது தவறு.

    மருத்துவ விஞ்ஞானம் என்பது தொடர்ந்து ஆய்வு செய்து பல தீர்வுகளை கண்டுபிடிக்கும் வழியில் செயல்படுகிறது. 'பென்சிலின்' என்ற ஒரு மருந்து கண்டு பிடிக்கப்படாமல் இருந்திருந்தால இன்றைய ஜனத் தொகையில் முக்கால் பங்கு அழித்திருக்கும் எனலாம்.

    கடுமையான கிருமி தாக்குதல்களை தடுக்கும் மருந்துகள், நோய்களை தவிர்க்கும் முறையாக 'வாக்சின்' (தடுப்பூசி) மருந்துகள் என மக்களை தாக்கும் நோய் என்ற அரக்கனோடு மருத்துவ விஞ்ஞான ஆய்வுகள் போராடி மனித குலத்தினை காத்து வருகின்றன.

    நோய் தாக்குதலை தவிர்க்கும் முறையினையும் இந்த ஆய்வுகள் மேற்கொள்கின்றன. அவ்வகையில் சர்க்கரை நோய் பிரிவு-2ஐ தவிர்க்கும் விதமாக பல கருத்துக்களை ஆய்வுகள் வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆய்வாளர்கள் இப்போது கூறுவது என்ன தெரியுமா?

    இரவு நேரங்களில் அதிக ஒளி கொண்ட விளக்குகளின் கீழ் பணிபுரிபவர்களுக்கு உடல் நலத்தில் அதிக பாதிப்பு ஏற்படுகின்றது என்பதுதான். இந்த ஒளி நீரிழிவு பிரிவு 2 பாதிப்பினை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்கின்றனர். இதனை பல ஆய்வுகள் உறுதியும் செய்து உள்ளன.

    இரவில் அதிக ஒளி கொண்ட மின்சார விளக்குகளை தவிர்ப்பது செலவில்லாத, எளிமையான நீரிழிவு, தவிர்ப்பு முறையாகக் கூறுகின்றனர்.

    அதிக வருடங்கள் இரவு நேர ஷிப்ட் வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருக்குமாயின்- இரவு நேர செயற்கை ஒளி காரணமாக பாதிப்பு கூடுகின்றது என்கின்றனர்.

    உடலின் Circadianrhthm முறையில் சீர்குலைவு ஏற்படுவதே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். இரவு 12.30 மணி முதல் காலை 6 மணி வரையில் பாதிப்பு கூடுதலாகவே உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

    இரவில் 7 மணி முதல் 9 மணி நேர உறக்கம் என்பதும் சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு முறையாகின்றது.

    இந்த ஒரு முறை என்பது அதாவது இரவு நேரம் தொடர்ந்து அதிக செயற்கை ஒளியில் இல்லாது இருப்பது ஒன்று மட்டுமே சர்க்கரை நோய் தவிர்ப்பு அல்லது தள்ளி போடும் என்பதாகிறது. இதுவும் ஒருவர் கடைபிடிக்க வேண்டிய ஒன்று எனலாம்.

    இரவு ஷிப்ட் பார்ப்பவர்களால் நோயாளிகள் உயிர் பிழைக்கின்றனர். பல மனித சமுதாயத்திற்கான சேவைகள் அதாவது மின்சாரம், பாதுகாப்பு என பல சேவைகள் நடைபெறு கின்றன. இவர்களை நாம் கை கூப்பி வணங்குவோம். ஆனால் இரவில் நைட் ஷோ சினிமா, கேளிக்கை பார்ட்டிகள், விடிய விடிய அரட்டை இவையெல்லாம் தவிர்த்து விடலாமே.

    மின்சாரம் என்ற ஒன்று வந்த பிறகு, மனிதனின் வாழ்க்கை வெகுவாய் முன்னேற்றம் அடைந்தது. ஆனால் பகல் செயற்கை ஒளியால் நீண்டது. இரவு சுருங்கியது. தேவையில்லாது விஞ்ஞான கண்டுபிடிப்புகளை தவறாய் பயன்படுத்துவதனை தவிர்க்கலாமே.

    ஆதிகால மனிதன் உணவைத் தேடி அலைந்தான், நடந்தான், ஓடினான். வழியில் எந்த டீ கடையும், பிஸ்கட்டும் இருக்கவில்லை. உணவில்லாத நேரங்களில் பட்டினி கிடந்தான்.

    இன்றைய மனிதனோ ரைஸ்மில் போல் சாப்பிடத்தொடங்கிய நாள் முதல் மூச்சு நிற்கும் காலம் வரை எதனையோ மெல்கிறான். கொரிக்கின்றான், குடிக்கின்றான்.

    அவனது வாய்க்கும், குடலுக்கும் ஓய்வு என்பதே இருப்பதாகத் தெரியவில்லை. உபவாசம், விரதம் என மேற்கொள்பவர்கள் எப்படியோ ஒரு கட்டுப் பாட்டினை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

    ஓயாத குடல், ஜீரண மண்டல உறுப்புகளின் உழைப்பு அவைகளை பலவீனம் ஆக்குகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு என வந்து விடுகின்றன.

    உடலுக்கு உழைப்பு இல்லை, கண்ணுக்கு ஓய்வு இல்லை, குடலின் கழிவுகள் தேக்கம் என்ற வாழ்க்கை முறை மனிதனின் உடல் நலம் மன நலம் இரண்டி னையுமே கெடுத்து விடுகின்றது.

    சர்க்கரை நோய் வரும் போது கூடவே இருதய நோய் பாதிப்பு, ரத்த குழாய்கள் பாதிப்பு என கைகோர்த்து வந்து விடுகின்றன. சிறுநீரக பாதிப்பும் ஏற்படுகின்றது. மனிதன் பூலோகத்திலேயே நரக வாழ்க்கை வாழும் நிலை ஏற்படுகிறது.


    வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிக்கு சர்க்கரை நோயா? நீங்க உஷாராயிடுங்க. Hbaic-1 சோதனை செய்து கொள்ளுங்கள். பயிற்சியாளர் ஆலோசனைப்படி உடற்பயிற்சி முறைகளை மாற்றுவது, சற்று கூடுதல் படுத்துவது போன்றவற்றினை செய்யுங்கள்.

    உணவு முறையில் சத்துணவு நிபுணரின் அட்வைஸ் வேஸ்ட் என்று நினைக்காதீர்கள். ஒரு சேர அனைத்து முயற்சிகளும் தான் ஒருவரை ஆரோக்கியமாக வைக்க முடியும்.

    ஸ்ட்ரெஸ் என்பது ஒரு எமன். தியானமும், யோகாவும் அதனை விரட்டி அடித்து விடும். வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது சரியா? தவறா? என்று இப்போது நீங்களே உணர்ந்து இருப்பீர்கள்.

    உடல் பருமன், நடுத்தர வயது (30ஐ தாண்டி னாலே போதும்) பருத்த வயிறு இவற்றோடு நாம் போராட வேண்டாம். உடனே விரட்டி அடித்து விடுவோம். ஆரோக்கியமான முறையில் வயது கூடட்டும்.

    காலை முதல் இரவு வரை 'பொத்'தென இடித்த புளி போல் ஒரே இடத்தில் அமர்ந்து வாழ்வதால் நோய்களின் கூடாரமாக ஆகி விடுகின்றீர்கள். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து ஐந்து நிமிடங்கள் சுறுசுறுப்பாய் நடக்க வேண்டும்.


    * சர்க்கரை நோய் பயத்தால் சிறிது கூட சர்க்கரை வேண்டாம் என்று இருப்பவர்களையும் பார்க்கின்றோம். அடிக்கடி ஸ்வீட், கேக் என சாப்பிடுபவர்களுக்கும் எடை கூடும் போது சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் ஆகின்றது.

    * குண்டாக இருப்பவர்களை மட்டுமே சர்க்கரை நோய் பாதிக்கும் என்பது தவறு. குண்டாக இருப்பவர்களுக்கு பாதிப்பு அபாயம் அதிகம் என்பதே ஆய்வு கூறும் கருத்து.

    * சர்க்கரை நோய் உள்ளவர்கள் வண்டி ஓட்டக்கூடாது என்பது இல்லை. நல்ல கட்டுபாடு, மருந்துகள், மருத்துவ செக்-அப் இவை இயல்பான வாழ்க்கைக்கு உதவும்.

    * சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாது இருக்கும் போது கண் பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.

    * நல்ல உடற்பயிற்சியும், முறையான உணவும் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களை சுறுசுறுப்பாக வைக்கும்.

    * நீங்கள் ஆயுர் வேதம் போன்ற மாற்று முறை சிகிச்சை எடுத்துக் கொள்பவராக இருந்தால் அதனை உங்கள் மருத்துவரிடம் மறைக்காமல் கூறுவது உங்களுக்கு பாதுகாப்பாய் அமையும்.

    * இன்சுலின் எடுத்துக் கொள்வதும் சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த உதவிதான். இதில் பல பிரிவுகள் அளவு முறைகள் உள்ளன. தேவைப்படும் போது மருத்துவர் பரிந்துரை செய்வார். முறைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    'யாரும் உங்களை கொல்வதில்லை, நீங்கள் தான் உங்களை கொன்று கொண்டு இருக்கின்றீர்கள்' என்கி றார் டாக்டர் மென்டி- தலை சிறந்த சத்துணவு நிபுணர். இவர் கூறுவது "Intermitlnt Fasting" முறைகளை பயன்படுத்து வதன் மூலம் அதிக உடல் நலத்தினை பெற முடியும் என்பதுதான்.

    ஆனால் இதனை தகுந்த பயிற்சியா ளரின் வழி காட்டுதல் மூலமே மேற்கொள்ள வேண்டும். பொதுவில் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தண்ணீர் தவிர வேறு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது முதல் படியாக மேற்கொள்ளலாம்.

    மாதம் இருமுறை பழம் தவிர வேறு எதுவும் எடுக்காது இருப்பது, மாதம் இரு முறை நீர் மட்டும் பருகி விரதம் இருப்பது போன்றவை அவரவராகவே மேற்கொள்கின்றனர். நன்மைகள் பல இருந்தாலும் தகுந்த வழிகாட்டுதல்கள் அவசியம்.

    இந்த "Intermitlent Fasting" முறையில் எடை குறைப்பு,சர்க்கரை அளவு கட்டுப்படுதல், கெட்ட கொழுப்பு குறைதல், நல்ல மனநிலை, உடலில் நச்சு நீக்கம் ஆகியவை ஏற்படுகின்றன.


    சில குறிப்புகள்:

    * வீட்டில் உள்ள தூசு, வெளியில் உள்ள தூசு, மாசு இவற்றின் காரணமாக உலக அளவில் மில்லியன்கள் எண்ணிக்கையில் இறப்புகள் ஏற்படுகின்றன. இதனால் வீட்டினை தூசு இன்றி சுத்தமாக வைத்திருங்கள். சுற்றுப்புறத்தினை சுத்தமாகவைத்திருங்கள். வெளியில் மாஸ்க் அணிந்து செல்லுங்கள்.

    * 12 முதல் 17 வயதுள்ள குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்ற னர் என வெளிநாட்டு ஆய்வுகள் கூறுகின்றன. நம் வீட்டு குழந்தைகள் மீதும் நாம் கவனம் செலுத்துவோமே.

    * இன்றைய மருத்துவ உலகில் கொழுப்பு, கல்லீரல் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. கல்லீரல் உடலில் எண்ணற்ற வேலை களைச் செய்கின்றது. இதன் பாதிப்பு கவனிக்கப்படா விட்டால் ஆபத்தான நிலை வரை கொண்டு விடலாம். ஆரம்ப நிலையில் கண்டு பிடித்து முறையான சிகிச்சை, உணவு முறை மூலம் சரி செய்ய முடியும்.

    பலருக்கு கொழுப்பு, கல்லீரல் பாதிப்பு என்பது ஆரம்ப நிலையில் அவ்வளவாகத் தெரிவதில்லை. ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் போன்றவை மூலம் இதனை கண்டுபிடிப்பர் எதேச்சையாக கண்டு பிடிப்பர்.

    * அதிக சோர்வு, குன்மம், நெஞ்செரிச்சல், வலது பக்க மார்பக கூடு கீழே லேசான வலி, அதிக காற்று, பசியின்மை, வயிற்றுப் பிரட்டல் போன்றவை இருந் தால் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    பாதிப்பு கூடும்போது உடலில் அரிப்பு, மஞ்சள் காமாலை, சிகப்பு சிறிய திட்டுகள், இரவு கண் பாதிப்பு, வெள்ளை நகங்கள் என்ற அறிகுறிகளைக் காட்டும்.

    தகுந்த மருத்துவர் ஆேலாசனை, சத்துணவு நிபுணரின் வழி காட்டுதல் போன்றவை சிறந்த நன்மை பயக்கும். கவனத்துடன் செயல்படுவோம்.

    • ஒரே இடத்தில் உட்கார்ந்து கொள்வதால் கலோரிகளை எரிக்க கடினமாக உள்ளது.
    • அடிக்கடி செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

    இன்றைய காலகட்டத்தில், பலர் வீட்டில் இருந்து வேலை (வொர்க் ஃப்ரம் ஹோம்) என்ற பெயரில் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இந்த வேலைகளில் பெரும்பாலானவை 8 முதல் 9 மணிநேர ஷிப்டுகளை அடிப்படையாகக் கொண்டவை. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் 8 முதல் 9 மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இருப்பினும், இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    உட்கார்ந்து வேலை செய்பவர்கள் பல உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். உட்கார்ந்து வேலை செய்பவர்களிடையே அதிகரித்து வரும் பிரச்சனைகள் என்ன என்பத்தை இங்கே தெரிந்து கொள்வோம்..

    தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து கொள்வதால் கலோரிகளை எரிக்க கடினமாக உள்ளது. அதனால் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் சில சமயம் உடல் பருமனாக மாறுகிறார்கள். இது கெட்ட கொழுப்பாக உடலில் சேரும். உடல் பருமன் உடலில் பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

    அதுபோல், உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில், ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதால் அவை செரிமானம் ஆகாது. அத்தகையவர்களுக்கு மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் இருக்கும்.

     நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் தசைகள் பலவீனமடைகின்றன. முழங்கால் வலியும் தொல்லை தரும். இப்போதெல்லாம் 9 மணி நேரம் உட்கார்ந்திருக்கும் வேலையில் உடலில் ரத்த ஓட்டம் மிகவும் மெதுவாக உள்ளது. இதனால் கால்களில் கூச்சம் ஏற்படும்.

    மேலும் இவர்களின் உடல் செயல்பாடு மிகவும் குறைவாக இருக்கும். இதன் காரணமாக, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. அவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். அத்தகையவர்கள் முடிந்தால் தவறாமல் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும்.

    உட்கார்ந்து வேலை செய்பவர்கள் பெரும்பாலும் கணினிகள் அல்லது மடிக்கணினிகளில் வேலை செய்கிறார்கள். ஒருவர் 8 முதல் 9 மணி நேரம் கணினித் திரையைப் பார்ப்பதால், அதிலிருந்து வெளிப்படும் நீலக்கதிர்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதன் தாக்கம் கண்பார்வையை பலவீனப்படுத்துகிறது.

    தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இதை தவிர்க்க நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் மற்றும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

    • கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகும்.
    • மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

    சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகும். இதை கர்ப்பகால சர்க்கரை நோய் என்கிறோம்.

    ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது, தினமும் மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பொறுத்து கர்ப்ப கால சர்க்கரை நோயை சமாளிக்க சிலருக்கு இன்சுலின் மருந்து தேவைப்படும். இதற்கு தகுந்தசிகிச்சை அளிக்காமல் கவனக்குறைவாக இருந்தால் தாய்க்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.

    கர்ப்பகாலத்தின் 24 மற்றும் 28 வாரங்களுக்கு இடையில்தான் பல பெண்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதுவரை சர்க்கரை நோய் இல்லாத பெண்களுக்கும் கர்ப்பகாலத்தின்போது இந்த நோய் உண்டாகலாம். 2 முதல் 10 சதவீத பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

    கர்ப்பகாலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாவது, வளர்சிதை மாற்றம் குறைவது போன்ற காரணங்களால் இந்த நோய் ஏற்படுகிறது.

    உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்று 'இன்சுலின். இது நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் சர்க்கரை மூலக்கூறுகளை உடைத்து ஆற்றலாக மாற்றி செல்களுக்கு வழங்கும். இதன்மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஆரோக்கியமான அளவில் வைத்திருக்கும்.

    உடலில் உள்ள இன்சுலின் சரியாக வேலை செய்யாவிட்டாலோ, போதுமான அளவு சுரக்காவிட்டாலோ ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால்தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

     கர்ப்பகாலத்தின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் இன்சுலின் சுரப்பும் பாதிக்கப்படலாம். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ள பெண்களுக்கும். மரபுரீதியாகவும் கர்ப்பகால சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    கர்ப்பகால சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், முதல் 8 வாரங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த காலகட்டத்தில் தான் குழந்தையின் மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டால், குழந்தையின் மூளை மற்றும் நரம்பியல் வளர்ச்சி 0.003 சதவீதம் வரை குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    எனவே கர்ப்பம் தரிப்பதற்கு முன்னதாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    சத்துள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகள், முழுத்தானியங்கள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்ப்பது, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவது போன்றவற்றின் மூலம் கர்ப்பகால சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.

    ×