search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட்லீப் மலர்"

    • ரெட்லீப் செடிகளுக்கு விதை கிடையாது.
    • ஊட்டியில் தற்போது குளிர்காலம் என்பதால் இந்த செடிகளின் வண்ணம் தற்போது சீதோஷ்ண சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறி வருகிறது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டில் இருந்து பல்வேறு மலர்ச்செடிகள் கொண்டுவரப்பட்டு, நடவுசெய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஒரு சில மலர்ச்செடிகள் தற்போது பெரியளவில் வளர்ந்து மரங்களாக காட்சி அளித்து வருகின்றன.

    ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரெட்லீப் மலர்ச்செடிகள் தற்போது நீலகிரியில் உள்ள பெரிய பங்களாக்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோர பகுதிகளை அலங்கரித்து வருகின்றன. ரெட்லீப் செடிகளுக்கு விதை கிடையாது. பதியம் போடும் முறையில் வளர்க்க முடியும். இந்த செடியில் உள்ள இலைகள்தான், அங்கு தற்போது மலர் போல காட்சி அளிக்கின்றன.

    ரெட்லீப் செடிகளின் முதல் பருவத்தில் அவற்றின் இலைகள் பச்சைநிறத்திலும், பின்னர் சிவப்பு, இளஞ்சிவப்பு, இளம்மஞ்சள் என காலநிலைக்கு ஏற்றார்போல நிறம் மாறும். மலர்கள் பூத்துக்குலுங்குவது போல காட்சியளிக்கும் ரெட்லீப் செடிகள், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்து உள்ளது. ஊட்டியில் தற்போது குளிர்காலம் என்பதால் இந்த செடிகளின் வண்ணம் தற்போது சீதோஷ்ண சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறி வருகிறது.

    நீலகிரியில் பூத்து குலுங்கி பல்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கும் ரெட்லீப் செடிகள் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. எனவே அவர்கள் சாலையோரம் வண்ணம்-வண்ணமாக ஜொலிக்கும் பூக்களின் முன்பாக நின்று செல்பி எடுத்து நண்பர்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ×