search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் தடை"

    • மது பிரியர்களும் பாக்கெட் சாராயத்தை குடித்து வந்ததோடு வாங்கி சென்று குடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
    • பிளாஸ்டிக் பொருட்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்துறை தடை விதித்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் 110 சாராயம், 92 கள்ளுக்கடைகள் உள்ளது.

    சாராயக்கடைகளில் பாக்கெட்டில் அடைத்து சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பாக்கெட் சாராயத்தை புதுச்சேரி மட்டுமின்றி எல்லை பகுதிகளில் உள்ள தமிழக சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மது பிரியர்களும் பாக்கெட் சாராயத்தை குடித்து வந்ததோடு வாங்கி சென்று குடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே 2019-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்துறை தடை விதித்தது.

    இதனால் பாக்கெட்டில் சாராயம் விற்பது தடை செய்யப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி, காரைக்கால் சாராயக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் மீண்டும் பாக்கெட்டில் சாராயம் விற்க அனுமதி கோரினர். இதனால் பாக்கெட் சாராயம் விற்க கலால்துறை அனுமதி வழங்கியது.

    இந்த நிலையில் சமீபத்தில் அறிவில் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை கலால்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் பிளாஸ்டிக் தடையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதித்து கலால்துறை உத்தர விட்டுள்ளது.

    இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • சாராயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது.
    • போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேல்பட்டி:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மசிகம் ஊராட்சியை சுற்றி சுமார் 9-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தின் காப்புக்காட்டில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அமோகமாக நடந்து வந்தது.

    சாராயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது. சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதால் போலீஸ் அடிக்கடி இந்த கிராமத்திற்கு ரோந்து வருவார்கள். சாராயம் குடிப்பதற்கும் அறிமுகம் இல்லாத நபர்கள் அதிகளவில் வந்து, செல்வதால் அந்த பகுதி பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    மசிகம் ஊராட்சியில் கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    அதன்படி மசிகம் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் உதவியுடன் இந்த ஊராட்சியில் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்கள் அனைவரையும் கைது செய்து, அதனை முற்றிலுமாக ஒழித்தனர்.

    மேலும் கிராமத்தில் முழுமையாக சாராயம் ஒழிக்கப்பட்டது என்று பஸ் நிறுத்தத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பு பலகை வைத்தனர்.

    மசிகம் ஊராட்சியில் சாராயம் குடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் நபர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    ×