என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிதம்பரம் தொகுதி"
- புவனகிரி அருகே ஜெயகொண்டான் கிராமத்தில் திருமாவளவன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
- திருமாவளவன் கண் முன்னே இந்த மோதல் ஏற்பட்டது.
புவனகிரி:
திருமாவளவன் பிரசாரத்தில் வாலிபர்கள் மோதலில் ஈடுப்பட்டனர்.
சிதம்பரம்(தனி) பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் காட்டுமன்னார்கோவில், சேத்தியாதோப்பு, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
புவனகிரி அருகே ஜெயகொண்டான் கிராமத்தில் திருமாவளவன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மருதூர், நத்தமேடு, ஆலம்பாடி, குமுடமூலை கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருமாவளவன் பிரசார வண்டியை தடுத்து நிறுத்தி எங்கள் ஊருக்கு மீண்டும் வர வேண்டுமென வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு திருமாவளவன் மீண்டும் நான் வருவேன் என்று தெரிவித்தார்.
ஆனாலும் வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். திருமாவளவன் கண் முன்னே இந்த மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி மோதலில் ஈடுப்பட்டவர்களை கலைத்தனர். இந்த மோதலுக்கு போதிய போலீசார் இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்