search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம்.
    • புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் மா மதுரை விழா வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மதுரையில் நடக்கிறது.

    இந்த விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

    பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம்.

    ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம்.

    "தவறு செய்தவன் மன்னனே ஆனாலும்" என்று மன்னனைக் கண்ணகி கேள்வி கேட்ட மண் இது.

    நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம்.

    திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் ஆண்ட பூமி.

    புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கும் கோயில் நகரம் இது.

    அனைத்துக் கலைகளும் ஒருங்கே இருக்கும் பண்பாபாட்டுச் சின்னமாக இந்தக் கோவில் கருதப்படுகிறது.

    புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெற்று வருகிறது.

    1866-ம் ஆண்டே நகராட்சியான ஊர் இது.

    சென்னைக்கு அடுத்ததாக 2-வது மாநகராட்சியாக 1971-ம் ஆண்டு மதுரையைதான் மாநகராட்சி ஆக்கினார் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி.

    அண்ணல் காந்தி தன்னை அரையாடை மனிதராக மாற்றிக்கொண்ட இடமும் இந்த மதுரை தான்.

    ஏன் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான்.

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இத்தகைய மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல; எல்லோரும் போற்றலாம்; மதுரையைப் போற்றுவோம் என்று கொண்டாடலாம்!

    இந்த ஆண்டு மதுரை போற்றும் விழாவை ஆர்வத்துடன் முன்னெடுத்துச் செல்லும் இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. அமைப்புடன் இணைந்து உள்ள இளையோர் அமைப்பான "யங் இந்தியன்ஸ்" அமைப்பை பாராட்டுகிறேன். ஊரைப் போற்றும் இளைஞர்களாக நீங்கள் வளர்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

    ஊரைப் பாதுகாக்க வேண்டும். அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் நவீன வசதிகள் எல்லாவற்றையும் ஏற்படுத்தியும் தரவேண்டும். பழமைக்கு பழமையாக, புதுமைக்கு புதுமையாக இளைஞர்கள் இயங்க வேண்டும். பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல், பண்பாட்டுத் திருவிழாவாக இதை நீங்கள் நடத்திக்கொண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெருமையும் பெருமிதமும் உள்ளவர்களாக எதிர்காலத் தலைமுறை வளர வேண்டும்!

    இதுபோன்ற விழாக்கள் கூட்டுறவு எண்ணத்தையும், ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்ற உணர்வையும் உருவாக்கும். சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல், இதுபோன்ற பண்பாட்டு விழாக்களை எல்லோரும் கொண்டாட வேண்டும்.

    மனிதநேயம் போற்றுவோம்! மக்கள் ஒற்றுமை போற்றுவோம்! என்ற அடிப்படையில் இதுபோன்ற விழாக்கள் மாநிலம் முழுவதும் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் இந்திராணி, தளபதி எம்.எல்.ஏ., கலெக்டர் சங்கீதா, மாமதுரை விழா தலைவர் விக்ராந்த் கார்மேகம், பைசல் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
    • மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதால், இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையின் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி நடந்தது. அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபையின் மானிய கோரிக்கை விவாத கூட்டம் ஆகியவை தொடர்ந்து நடந்ததால் அமைச்சரவை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.

    இந்தநிலையில் வருகிற 13-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அதில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். மீண்டும் அவர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ம் தேதி தான் சென்னை திரும்புகிறார். எனவே தான் இந்த அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த கூட்டத்தில் அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் அங்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தேவையான திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதால், இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    • பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    • உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

    இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இந்த நிலையில் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    வினேஷ், நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன்.

    உங்கள் திறன், வலிமை மற்றும் இறுதிப் போட்டிக்கான குறிப்பிடத்தக்க பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

    தகுதி நீக்கத்தால் மனதையும் சாதனைகளையும் குறைத்துவிட முடியாது.

    நீங்கள் ஒரு பதக்க வாய்ப்பை இழந்தாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.
    • கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு கீழ் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது. பேரணியில் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, எல்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பேரணியை தொடர்ந்து மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • கலைஞர் சிலைக்கு கீழ் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு கீழ் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, எல்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • காட்டூரில் மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
    • கருணாநிதியின் நினைவு நாளில் சிலை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    சென்னை:

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவெறும்பூரை அடுத்த காட்டூரில் மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சென்னையில் இருந்தபடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவருடன் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர்.

    திருச்சியில் காணொளி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இனிகோ இருதய ராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று இருந்தனர்.

    கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளில் இந்த சிலை திறக்கப்பட்டதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் கழக நிர்வாகிகளும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது.
    • சட்டம் ஒழுங்கை காத்திடவும், தொழில் முதலீட்டை தக்க வைக்கவும் , உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    "இதை விட மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது" என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான ஒரு நிகழ்வு இந்த விடியா திமுக ஆட்சியில் ஏற்படுகிறது.

    காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது. சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கைக் காக்க தவறியதால், தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை காத்திடவும், தொழில் முதலீட்டை தக்க வைக்கவும் , உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு பஸ்களில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரித்து உள்ளது.
    • வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் 5-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, திட்டக்குழு துணைத் தலைவர் பேரா சிரியர் ஜெயரஞ்சன் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இதில் மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்களான விடியல் பயணம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்கள் மக்களை சென்றடைந்தது தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆட்சி சக்கரத்தை இயக்குபவர்களாக நாங்கள் இருந்தாலும், அதற்கு வழிகாட்டுபவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். நாங்கள் செல்லும் பாதையை தீர்மானிப்பவர்களாக மட்டுமல்லாமல், அதில் உள்ள நிறை குறைகளை எடுத்துச் சொல்பவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள்.

    நீங்கள் ஒவ்வொரு துறையிலும் பல்லாண்டு கால அனுபவம் கொண்டவர்கள். தங்களது அனுபவங்களையும், சிந்தனைகளையும் எங்களுக்கு தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறீர்கள்.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது. அரசு பஸ்களில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரித்து உள்ளது.

    புதுமைப் பெண் திட்டம் மூலம் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை உணவுத் திட்டத்தால் மாணவர்கள் வருகையும் பள்ளியில் அதிகரித்துள்ளது.

    வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்ட மும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்தும் திட்டமாக உள்ளது.

    மாநில திட்டக் குழுவின் அறிக்கைதான் தி.மு.க. அரசின் மதிப்பெண் சான்றிதழ் ஆகும். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். அதற்கு உங்கள் ஆலோசனைகளையும் வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தக் கூட்டத்தில் வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், திட்டம் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராம.சீனுவாசன், பேராசிரியர் விஜயபாஸ்கர், தீபைந்து, எழிலன் எம்.எல்.ஏ., மருத்துவர் அம லோற்பவநாதன், சித்த மருத்துவர் சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    • காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ள செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    • புதிய புதிய திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைகளை திட்டக்குழு வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் மாநில திட்டக்குழு தயாரித்த வரைவு கொள்கைகள், அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கடந்த மார்ச்சில் துறை சார்ந்த 16 அறிக்கைகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் என்னிடம் வழங்கினார்.

    * பொருளாதார சமூக நீதி அளவில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம்.

    * மாநில திட்டக்குழுவின் அறிக்கைதான் திமுக ஆட்சியின் மார்க் ஷீட்.

    * காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

    * அரசின் திட்டங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு மனிதரையும் உயர்த்தி உள்ளது.

    * தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும் மக்களை சென்றடைந்து வருகின்றன.

    * காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ள செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    * விடியல் பயணம் மூலம் பெண்கள் முன்னேற்றம், புதுமைப்பெண் திட்டம் மூலம் பெண்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    * மக்களை நேரில் சந்தித்து தகவல் பெற்றாலும் புள்ளி விவரங்கள் மூலம் திட்டக்குழுவினர் வழங்குகின்றனர்.

    * கவனம் பெறாத துறைகளையும் சரிபார்த்து திட்டங்களை தயாரித்து தருமாறு மாநில திட்டக்குழுவினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

    * ஆலோசனையுடன் நிறுத்திக்கொள்ளாமல் திட்டங்கள் செயல்படுவது குறித்தும் ஆய்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    * புதிய புதிய திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைகளை திட்டக்குழு வழங்க வேண்டும்.

    * ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் இருக்க கூடாது என்பதன் அடிப்படையில் திட்டங்கள் வகுக்க வேண்டும்.

    * பசியில்லை, வறுமையில்லை, பள்ளிகள், குடிநீர் இல்லாத இடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க உள்ளோம்.

    * சாலை, மின்சாரம், பள்ளிகள் இல்லாத இடங்கள் இல்லை என்ற தன்னிறைவு பெற்றதாக தமிழகத்தை உருவாக்கினோம்.

    * நிதிவளம் இருக்குமானால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் நிதிவளம் பெருக்க ஆலோசனை தாருங்கள் என்று கூறினார்.

    • பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
    • பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் சென்று அங்கு நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நிருபர்கள் பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- பருவமழைக்கு முன்பே சென்னையில் மழை பெய்து வருகிறது. நேற்று ஒருநாள் மட்டும் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்னும் மழை அதிகம் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதே?

    பதில்:- எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது. பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

    கேள்வி:- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண் டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வலுத்துள்ளது. நீங்கள் (முதலமைச்சர்) பரிசீலிப்பீர்களா?

    பதில்- கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லையே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பதால் அமைச்சரவை மாற்றத்திற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.

    முன்னதாக கொளத்தூர் வீனஸ் நகர் சென்று தமிழ்நாடு மின்சார மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையம் மற்றும் குடிநீர் வழங்கல் கழிவுநீர கற்று வாரியத்தின் கழிவுநீர் வெளியேற்று நிலையத்தை பார்வையிட்டார்.

    அதன்பிறகு அங்குள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியில் கூடுதல் கட்டிடம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மையம், ஜி.கே.எம். காலனி 27-வது தெருவில் உள்ள தொடக்கப் பள்ளி, 10 உயர் கோபுர மின் விளக்குகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சீனிவாச நகர் 3-வது பிரதான சாலையில் புதிய சென்னை தொடக்கப்பள்ளிக்கு அடிக் கல் நாட்டினார். அங்குள்ள நேர்மை நகரில் சி.எம்.டி.ஏ. மூலம் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

     

    தணிகாசலம் நகரில் ரூ.91 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் உபரி நீர் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பருவ மழை காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ரூ.91.36 கோடி மதிப்பில் தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயினை திறந்தவெளி கால்வாய் மற்றும் மூடிய வடிவிலான கால்வாயாக மேம்படுத்தும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

    பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு ரூ.109 கோடியே 89 லட்சம் செலவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமான பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கொளத்தூர் தொகுதியில் மொத்தம் ரூ.8.45 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். ரூ.3.25 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

    அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் சென்றிருந்தனர்.

    • கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.
    • அமைதிப் பேரணி புறப்பட்டு காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்றடைகிறது.

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சித்தலைவர்கள், பொது மக்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கருணாநிதியின் நினைவு நாளையொட்டி வரும் 7ம் தேதி திமுக அமைதிப் பேரணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை அண்ணாசாலையில் இருந்து கடற்கரை வரை நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெறுகிறது.

    அன்றைய தினம் காலை 7 மணிக்கு அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்றடைகிறது.

    அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட தி.மு.க. முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.

    கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

    • திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
    • தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    ஆடிப்பெருக்கன்று காவிரி ஆற்றங்கரையில் கொலை நடப்பது என்பது, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு அத்தாட்சி.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.

    விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

    வாரந்தோறும் ராசிப் பலன்கள் போடுவது போல கொலைப் பட்டியல்களை நாளிதழ்கள் பிரசுரிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்? எப்படி தினந்தோறும் அச்சமின்றி வேலைக்கு செல்ல முடியும்? எப்படி நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்? எப்படி புதிய தொழில் முதலீடுகள் வரும்?

    "தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது நீங்கள் உங்களுக்காக செய்துகொள்ளும் செய்திதாள் அல்லது தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக வராது; சீரான சட்டம் ஒழுங்கு தான் அதற்கு அடிப்படை" என்பதை உணர்ந்து, அஇஅதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டும் செலுத்தும் கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் இனியாவது செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    ×