search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் கட்சியின் முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தொடங்கியது.

    இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் முப்பெரும் விழா குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2026 சட்டசபை தேர்தலிலும் வெற்றி வாகை சூட திட்டம் தீட்டி வருகிறது. அந்த வகையில், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி, சென்னையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும், ஏனைய பகுதிகளில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்படும் பட்சத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயரும் என்றும் தெரிகிறது.

    • முதலீடுகளை ஈர்க்க வரும் 27ம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார்.
    • உலக முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக, வரும் 27ம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார்.

    முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.

    தமிழக முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முக்கிய குறிக்கோள் உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடுகள் என தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான் பிரான்சிஸ் கோ, சிக்காகோ உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உலக முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.

    • அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
    • பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, வி.பி.துரைசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    78வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

    பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, வி.பி.துரைசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    தேமுதிக சார்பில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் பங்கேற்றுள்ளனர்.

    தேநீர் விருந்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றார்.

    நீதிபதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இருப்பினும், ஆளுநரின் தேநீர் விருந்தை திமுகவின் தோழமை கட்சிகள் புறக்கணித்துள்ளன.

    கடந்தாண்டு நடைபெற்ற தேநீர் விருந்தை முதலமைசச்சர் புறக்கணித்த நிலையில், இந்தாண்டு திமுக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • நாமக்கல் கலெக்டர் உமா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

     

    அண்ணா விளையாட்டு அரங்கில் கடலூர் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் கொடியேற்றினார்.

     

    கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேலு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    கள்ளக்குறிச்சி கலெக்டர் பள்ளி மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

     

    நாமக்கல் கலெக்டர் உமா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    கோவை கலெக்டர் கிராந்திகுமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    புதுக்கோட்டை கலெக்டர் அருணா ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றினார்.

     

    திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வைத்து கலெக்டர் சந்திரகலா மரியாதை செலுத்தினார்.

    தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் பிரியா பங்கஜம் ஏற்றுக்கொண்டார்.

     

    நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடி ஏற்றி வைத்த கலெக்டர் ஆகாஷ் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

    திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்த கலெக்டர் பிரதீப் குமார் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

     

    • பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்-14-வது மண்ட லம் ரூ.30 லட்சம்.
    • முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்கான ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும் மற்றும் அவைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படும் ஒரு மண்டலம், சிறப்பாக செயல்படும் ஒரு மாநகராட்சி, ஒரு நகராட்சி மற்றும் ஒரு பேரூராட்சி ஆகியவற்றுக்கு முதலமைச்சர் விருது சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கீழ்க்கண்ட உள்ளாட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

    சிறந்த மாநகராட்சி-கோவை-ரூ.50 லட்சம், சிறந்த நகராட்சி-திருவாரூர் ரூ.30 லட்சம், சிறந்த பேரூராட்சி-சூலூர் (கோவை மாவட்டம்) ரூ.20 லட்சம்.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்-14-வது மண்ட லம் ரூ.30 லட்சம்.

    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்கான ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    2024-ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்காக 3 ஆண்கள் மற்றும் சிறப்பு நிகழ்வாக 4 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆண்கள் பிரிவில் நெ. கதிரவன் (ஈரோடு மாவட் டம்), ஜோஷன் ரெகோ பெர்ட் (கன்னியாகுமரி மாவட்டம்), சி.ஜெயராஜ் (கடலூர் மாவட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் செ.நிதிதா (கடலூர் மாவட் டம்), கவின்பாரதி (புதுக்கோட்டை மாவட்டம்), ச.உமாதேவி (விருதுநகர் மாவட்டம்), கா.ஆயிஷா பர்வீன் (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    • நான் முதல்வா் திட்டத்துக்காக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தோ்வு செய்யப்பட்டார்.
    • வணிக வரியைப் பெருக்கியதற்காக துறை ஆணையா் டி.ஜகந்நாதனுக்கு நல்லாளுமை விருதுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    அரசுத் துறைகளில் புதுமைகளை புகுத்தி திட்டங்களைச் செயல்படுத்திய 9 பேருக்கு நல்லாளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று நடந்த சுதந்திர தினவிழாவின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூயிருப்பதாவது:-

    கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்த தரவுகளை சரியான முறையில் பிரித்து பயனாளிகளைத் தோ்வு செய்ததற்காக, முதல்வரின் முகவரித் துறை தலைமைத் தொழில்நுட்ப அலுவலா் த.வனிதா, உயா்கல்வியில் மாணவா்கள் சோ்க்கை விகிதத்தை உயா்த்தியதற்கு விருதுநகா் மாவட்ட கலெக்டர் வீ.ப.ஜெயசீலன், உலகின் சிறந்த நூல்களைத் தமிழில் மொழிபெயா்க்க வழிவகை செய்த பொது நூலகங்கள் துறை இயக்குநா் க.இளம்பகவத், உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை சிறப்பாக நடத்தி வருவதற்காக உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் ந.கோபால கிருஷ்ணன், காலை உணவுத் திட்டத்துக்காக மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ச.திவ்ய தா்ஷினி, நான் முதல்வா் திட்டத்துக்காக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோா் நல்லாளுமை விருதுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

    மேலும், அரசுப் பள்ளி மாணவா்களைத் தலை சிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்ததற்காக, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் அமைப்பின் உறுப்பினா் செயலா் இரா.சுதன், இணைய வழியில் பட்டா மாறுதல் செய்யும் வசதியை உருவாக்கிய நிலஅளவை திட்ட இயக்குநா் ப.மதுசூதன்ரெட்டி, வரி ஆய்வுப் பிரிவு மூலம் வணிகவரியைப் பெருக்கியதற்காக துறை ஆணையா் டி.ஜகந்நாதன் ஆகியோரும் நல்லாளுமை விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

    விருதாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை கோட்டை கொத்தளத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
    • உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணனுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    சென்னை:

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    * சுதந்திர தினத்தை ஒட்டி மூத்த தமிழறிஞர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இத்துடன் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    * இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

    * துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நீலகிரி கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

    * அரசுத்துறைகளில் புதுமைகளை புகுத்தி திட்டங்களை செயல்படுத்திய 9 பேருக்கு நல்லாளுமை விருதுகள் வழங்கப்படுகிறது.

    * முதல்வரின் முகவரி துறையின் தலைமை தொழில்நுட்ப அலுவலரான வனிதாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    * உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணனுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    * காலை உணவுத்திட்டத்துக்காக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திவ்யதர்ஷினிக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    * நான் முதல்வன் திட்டத்துக்காக திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    * மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உதவியதற்காக 5 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
    • தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    சென்னை:

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி நாம் வளர்த்து வருகிறோம்.

    * ஆக.15 ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள் மட்டுமல்ல ஆனந்த இந்தியாவை உருவாக்கும் திட்டம் வகுக்கும் நாளாகும்.

    * சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது.

    * வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

    * 2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

    * கடந்த மூன்று ஆண்டுகளில் பல துறைகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    * வருகிற பொங்கல் திருநாள் முதல் முதல்வர் மருந்தகம் திட்டம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் உருவாக்கப்பட இருக்கிறது.

    * ஓய்வுபெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    * தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    * கட்டபொம்மன், வ.உ.சி., மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படுகிறது.

    * நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து பல்துறை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 300 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த சுதந்திரம் இது.
    • விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி.

    சென்னை:

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது விடுதலை நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    * விடுதலையை பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம்.

    * 300 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த சுதந்திரம் இது.

    * தியாகிகள் போராடிய நோக்கத்திற்காக உழைப்போம் என சுதந்திர நாளில் உறுதியேற்போம்.

    * நேதாஜி படை நடத்தியபோது கரம் கோர்த்தவர்கள் தமிழர்கள்.

    * அறவழியில் போராடிய காந்தியின் பின்னால் கரம் கோர்த்து நின்றது தமிழ்நாடு.

    * நாட்டின் பன்முக தன்மையின் அடையாளம் தேசிய கொடி.

    * விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
    • கோட்டை கொத்தளத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

    சென்னை:

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தலைமைச் செயலகத்துக்கு எதிரே முக்கிய விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர பந்தல்கள் போடப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.

    கோட்டை கொத்தளத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றினார்

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார்.
    • சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தலைமைச் செயலகத்துக்கு எதிரே முக்கிய விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர பந்தல்கள் போடப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். அதைத் தொடர்ந்து சுதந்திர தின உரையை நிகழ்த்துவார்.

    அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வீட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டார்.

    • சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தார்.
    • மு.க.ஸ்டாலின், நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருது வழங்க உள்ளார்.

    வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

    செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இந்நிலையில், தமிழக செவிலியர் சபீனாவுக்கு, வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    செவிலியர் சபீனாவுக்கு, விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்க உள்ளார்.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்டு சிகிச்சை அளித்தமைக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×