என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண்கள் ஆதரவு"
- வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.
- தமிழ் மொழியை உலக அளவில் பிரபலப்படுத்த பாஜக உறுதி.
பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், போட்டிடும் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று நெல்லை வந்தடைந்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.
நெல்லை அகஸ்தியர்பட்டி பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்டோது, பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடிக்கு பாஜக நிர்வாகிகள் நினைவுப் பரிசை வழங்கினர்.
பின்னர், வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.
அப்போது அவர் பேசியதாவது:-
நெல்லையப்பர் காந்திமதி அம்பாளை வணங்கி என் உரையை தொடங்குகிறேன்.
தென் இந்தியாவின் இந்த பகுதி வீரத்திற்கும், தேசபக்திக்கும் மிகவும் பிரபலமானது.
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியர் சுதந்திரத்திற்காக போராடியவர்கள்.
முத்துராமலிக்கு தேவர் தந்த எழுச்சியால், நேதாஜியின் ராணுவத்தில் பல இளைஞர்கள் இணைந்தனர்.
இந்த கூட்டத்தை பார்த்து இந்தியா கூட்டணிக்கு தூக்கம் தொலைந்திருக்கும். இந்த புத்தாண்டு தினத்தில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
நாட்டின் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவாதம் அளித்துள்ளோம்.
திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. தென் இந்தியாவில் புல்லட் ரெயில் விடப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.
தமிழகத்தில் பாஜகவுக்கு பெண்களின் ஆதரவு பெருகியுள்ளது என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
தென் இந்தியாவில் புல்லட் ரெயில் விடப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.
பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.800 கோடிக்கு நிதியுதவி அளித்துள்ளோம்.
தமிழ் மொழியை உலக அளவில் பிரபலப்படுத்த பாஜக உறுதி.
செங்கோலாக இருக்கட்டும், ஜல்லிக்கட்டாக இருக்கட்டும், திமுக அதனை எதிர்த்துள்ளது.
பாஜக தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற விரும்புகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்