search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கிரவாண்டி இடைத்தேர்தல்"

    • வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
    • ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.

    இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

    இதனிடையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று முன்தினம் இரவு, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள பாதுகாப்பு அறையில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டனர்.

    பின்னர் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறையை விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், பூட்டி சீல் வைத்தார்.

    இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை காலை 6 மணிக்கெல்லாம் வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்படும். காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

    சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படும். இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

    இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின.
    • நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து காலியாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.

    இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் இருந்த 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களுக்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.

    நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் ஸ்ட்ராங் ரூமிற்கு இன்று காலை 11.45 மணிக்கு சீல் வைக்கப்பட்டது. தேர்தல் பொது பார்வையாளர் அமித் சிங் பன்சால், மாவட்ட கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச், தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. மாவட்ட தலைவர் பழனிவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

    தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூமிற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    • மாதந்தோறும் மின் கட்டணத்தை செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தவேண்டும், இதனை தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    • தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் அத்துமீறலையும், தேர்தல் ஆணையத்தின் பாராமுகத்தையும் கடந்து பா.ம.க. வெற்றி பெறும். கப்பியாம்புலியூரில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தொரவியில் டி.எஸ்.பி. ஒருவர் பா.ம.க.வினர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். காவல்துறையினர் தி.மு.க.வினருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையும் கடந்து பா.ம.க. 25,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும்.

    தமிழகத்தில் அரசியல் படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு என்றால் கிலோ எவ்வளவு என கேட்கும் நிலை உருவாகியுள்ளது. சென்னையில் காவல் அதிகாரிகள் பணிமாறுதல் செய்யப்பட்டது மட்டும் போதுமானதல்ல. 15 நாட்களுக்கு ஒருமுறை உள்துறை மற்றும் காவல்துறையினருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்தவேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதியில் உள்ள காவல் அதிகாரிதான் பொறுப்பு என அறிவிக்கவேண்டும்.

    மாதந்தோறும் மின் கட்டணத்தை செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தவேண்டும், இதனை தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி, மதுரை சிங்காநல்லூர் கொலைகளுக்கு மதுதான் காரணம். இந்திய குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது. குடியரசு என்றால் மக்களை குடிக்கத்தூண்டும் அரசு. குடியரசு என்றால் குழந்தைகள் வரை குடிக்கப் பழக்கத்தை ஏற்படுத்தும் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவானது.
    • 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவானது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பின்னர், 276 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி, இன்று மாலை 6 மணி வரை நடைபெற்றது.

    இதையடுத்து, வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    தொடர்ந்து, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவானது.

    5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவானது.

    இதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 மணிக்கு முடிவடைந்தது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மொத்தம் 1,95,495 லட்சம் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

    • பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.
    • இன்று இரவில் இருந்து 13-ந்தேதி காலை வரை சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    வாக்குப்பதிவு தொடங்கியதும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தினார். பாமக வேட்பாளர் சி. அன்புமணியும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட மாம்பழப்பட்டு வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியபோது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு செய்வது தாமதமானது. அதன்பிறகு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இந்நிலையில், இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 29.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன.

    இன்று மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது. பின்னர் பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. இன்று இரவில் இருந்து 13-ந்தேதி காலை வரை சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • கஞ்சனூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.
    • வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே அன்னியூரை அடுத்த கொசப்பாளையத்தை சேர்ந்தவர் கனிமொழி (வயது42) இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் ஏழுமலை என்பவருடன் கனிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் திருமணம் செய்யாமலேயே இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே கனிமொழிக்கு மற்றொருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஏழுமலை கனிமொழியை கண்டித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் கனிமொழி தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் கனிமொழி மீது ஏழுமலை ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி கனிமொழி கொசபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று 11.30மணியளவில் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏழுமலை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனிமொழியை கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கனிமொழிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போலீசார் கனிமொழியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கனிமொழிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழுமலை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாக்குப்பதிவு தொடங்கியதும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தினார்.
    • இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    வாக்குப்பதிவு தொடங்கியதும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தினார். பாமக வேட்பாளர் சி. அன்புமணியும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    இந்நிலையில், இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன.

    • திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவரது குடும்பத்தினருடன் அன்னியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வாக்களித்தார்.
    • மாண்புமிகு முதலமைச்சரின் சாதனைகளின் அடிப்படையில் நான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவரது குடும்பத்தினருடன் அன்னியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வாக்களித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் என்ற முறையில் நான் வாக்களித்துள்ளேன்.

    * விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    * மாண்புமிகு முதலமைச்சரின் சாதனைகளின் அடிப்படையில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.

    • மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

    ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

    அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்காக தயார் செய்யப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 44 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருக்கிறது.

    தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவுக்கு தலா ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொகுதி முழுவதுமாக 552 வாக்குப்பதிவு எந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் கருவிகள் (வி.வி.பேட்) 276-ம் பயன்படுத்தப்படுகின்றன.

    தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,355 பேர் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று அவர்கள் பணிபுரிய உள்ள இடங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்தார்.

    மதியம் 2 மணிக்கு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து, வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்ட வேன்களில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். அப்போது வாக்குச்சாவடிக்கு தேவையான 66 பொருட்கள் அடங்கிய பையையும் உடன் எடுத்து சென்றார்கள்.

    இந்த வாகனங்களில் ஏற்கனவே ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அந்த கருவியின் மூலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக வாக்குச்சாவடிகளுக்கு சென்றடைந்ததா? என்பதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தனர்.

    வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர 110 வாக்குச்சாவடிகளில் வெளிப்பகுதியிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன்நாயர் மேற்பார்வையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் தலைமையில் மத்திய துணை ராணுவப்படையினர் 220 பேர் உள்பட 2,651 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

    அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    • 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • பதற்றமான வாக்குச்சாவடி 45 உள்ளதால் அங்கு பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    * 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.

    * 276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit). 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    * பதற்றமான வாக்குச்சாவடி 45 உள்ளதால் அங்கு பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார் அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்

    • தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற போலீசார், துணை ராணுவத்தினர், சிறப்பு காவல் படையினர் என 2 ஆயிரம் பேர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    • வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நா.புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை கடந்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி வெளியிட்டது. அதன்படி நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இடைத்தேர்தல் போட்டியில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆனாலும், ஆளும் கட்சியான தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் இடையே தான் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தி.மு.க.வில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ம.க.வை பொறுத்தவரை அதன் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தொகுதியிலேயே முகாமிட்டு தினசரி வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

    அதேவேளை தமிழக சட்டசபையில் பிரதான எதிர்கட்சியாக உள்ள அ.தி.மு.க. இடைத்தேர்தலை புறக்கணித்தது. இதனால் அவர்களது வாக்கு வங்கியை பெறுவதில் பா.ம.க., நாம் தமிழர் கட்சியும் மல்லுகட்டுகிறார்கள்.

    இதனால் இடைத்தேர்தல் களம் வழக்கத்தை விட மாறுபட்டு, தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. தேர்தல் விதிமுறைப்படி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். அதன்படி நேற்று மாலை 6 மணியுடன் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது.

    நேற்றைய இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொகுதிக்கு உட்பட்ட தும்பூர், நேமூரில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். மாலையில் ராதாபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், விக்கிரவாண்டி பேரூராட்சியில் தனது பிரசாரத்தை முடித்தார்.

    அதேபோல் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சூரப்பட்டு, வாழப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு மாலையில் கெடாரில் முடித்துக்கொண்டார்.

    இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்களும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று வெவ்வேறு இடங்களில் இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்தனர். இதையடுத்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூர்களை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க அங்கிருந்து வெளியேறினார்கள்.

    பிரசாரம் ஓய்ந்த நிலையில் நாளை(புதன்கிழமை) வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக வாக்குச்சாவடிகள் மும்முரமாக தயார் படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்களில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 பேர் ஆண்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 29 பேர் ஆவார்கள்.

    இந்த தேர்தலில் 552 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகள் 276-ம், வி.வி.பேட் கருவிகள் 276-ம் ஆக மொத்தம் 1,104 எண்ணிக்கையிலான எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    தேர்தலுக்கு இன்று ஒரு நாளே இருப்பதால் பணப்பட்டுவாடாவை முற்றிலும் தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற போலீசார், துணை ராணுவத்தினர், சிறப்பு காவல் படையினர் என 2 ஆயிரம் பேர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. பின்னர் வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி (சனிக்கிழமை) பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
    • வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம..க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இங்கு தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் பிரசாரம் செய்தார். மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய மனைவி சவுமியா அன்புமணி மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதா கூட்டணி தலைவர்களும் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல இடங்களில் வாக்குகளை சேகரித்தார்.

    கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, திறந்த வாகனத்தில் நின்றபடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட திருவாமாத்தூர், காணை, பனமலைப்பேட்டை, அன்னியூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.

    பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று மாலை அய்யூர்அகரம், தென்னமாதேவி, திருவாமாத்தூர், சோழகனூர், கொசப்பாளையம், சங்கீதமங்கலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

    தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

    இன்று தும்பூர், நேமூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாலை விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் பிரசாரத்தை முடித்தார்.

    இதனிடையே வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது.

    தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளை போலீசார் துணையுடன் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.

    ×