என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அனந்த்நாக் ரஜோரி"
- வானிலை காரணமாக தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தல்.
- மெகபூபா முப்தி உள்பட 21 பேர் போட்டியிடுகிறார்கள்.
ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதிக்கு மே 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மோசமான வானிலை காரணமாக தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என பா.ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தின. அதேவேளையில் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் இது தொடர்பாக உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.
இந்த நிலையில் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ந்தேதிக்குப் பதிலாக மே 25-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மெகபூபா முப்தி போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மியான் அல்டாஃப் போட்டியிடுகிறார். 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதனால் அனந்த்நாக்-ரஜோரி தொகுதி 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இருந்து 6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்