என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாழைகள் நாசம்"
- ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து சேதமாகின.
- நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான லிங்காபுரம், காந்தையூர் மற்றும் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கதளி, நேந்திரன், பூவன், செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் வாழைப்பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர்.
நேற்று முதல் கத்தரி வெயில் தொடங்க உள்ள நிலையில் அங்கு காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து மாலை 4 மணியளவில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காந்தையூர், லிங்காபுரம், காரமடை, வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக அந்த பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து சேதமாகின.
இதுகுறித்து லிங்காபுரம் விவசாயி பிரகாஷ் என்பவர் கூறியதாவது:- எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்து வந்ததால் சிறுமுனை, லிங்காபுரம், காந்தையூர் மற்றும் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழைப்பயிர்களை விளைவித்து வந்தோம்.
இந்த நிலையில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக எங்களில் பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் முறிந்து சேதமாகி உள்ளன. எனவே தமிழக அரசு வாழை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்