search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயக்குமார் தனசிங்"

    • ஜெயக்குமார் வழக்கில் போதிய தடயங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.
    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார்.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுமார் 2 மாதங்களுக்கு பின்னரும் அவரது மரண வழக்கில் போதிய தடயங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.

    இதற்கிடையே அவர் இறப்பதற்கு முன் அவரது கைப்பட எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே 2 முறை விசாரித்துவிட்ட நிலையில் தொடர்ந்து பல்வேறு நபர்களிடமும், தொழிலதிபர்களிடமும், அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் தனித்தனியே நேரில் அழைத்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சியிடம் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் அரைமணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

    அப்போது அவரிடம் ஜெயக்குமாருக்கும், அவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது? எத்தனை வருடங்கள் பழக்கம்? ஜெயக்குமார் தனது கடிதத்தில் முதல் நபராக குறிப்பிட்டிருக்கும் ஆனந்த ராஜாவுக்கும், ஜெயக்குமாருக்கும் எத்தனை வருட பழக்கங்கள் இருந்து வந்தது? அவர்களுக்கு இடம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    அவற்றுக்கு உரிய பதில்களை ஜோசப் பெல்சி கூறினார். அதனைத் தொடர்ந்து போலீசார் அடுத்ததாக விசாரணைக்கு அழைக்கும்போது வந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயக்குமார் சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.

    ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது.

    இந்நிலையில் நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப், சபாநாயகர் அப்பாவு-வுக்கு நெருக்கமானவராக வலம் வருவபர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜோசப் பெல்சியோடு, ஜெயக்குமாரின் ஓட்டுநர் உட்பட 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக விசாரணை மந்தமாக நடந்து வந்த நிலையில் இன்று மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    • சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் திசையன்விளையில் முகாமிட்டுள்ளனர்.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.

    ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது. இதற்கிடையே நேற்று திசையன்விளை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மாநில மனித உரிமைத்துறை நிர்வாகி விவேக் முருகன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். 2 பேரிடமும் 4 அதிகாரிகள் கொண்ட குழு தலா 2 மணி நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தியது.

    அப்போது அவர்களிடம் ஜெயக்குமாருக்கு ஏதேனும் பெண்களுடன் தொடர்பு இருந்ததா? அவருடன் யாரேனும் அடிக்கடி உடன் வருவார்களா? அவர் தனது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களுடன் ஜெயக்குமாருக்கு எந்த வகையில் பழக்கம் இருந்தது என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு 2 பேரும் கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    இதனால் கடந்த சில நாட்களாக விசாரணை மந்தமாக நடந்து வந்த நிலையில் இன்று மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனிடையே இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் திசையன்விளையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே ஒரு வேன் மற்றும் 3 ஜீப்புகளில் திசையன்விளை சென்று விசாரணையை தொடங்கினர்.

    செல்லும் வழியில் மணியன்குடி என்ற கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி விசாரித்து விட்டு பின்னர் கரைசுத்துபுதூர் நோக்கி விரைந்தனர். சுமார் 30 போலீசார் வந்துள்ளதால் திசையன்விளை சுற்றுவட்டார பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்த விசாரணையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 2 பேர் ஆஜராகினர்.
    • முழுமையாக நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னரே சி.பி.சி.ஐ.டி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையிலும் உறுதியான முடிவுக்கு வர முடியாமல் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் திணறி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜெயக்குமார் தனது கைப்பட எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்த விசாரணையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 2 பேர் ஆஜராகினர்.

    இதுவரை சுமார் 50 பேரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறுகையில், இந்த வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதே நேரத்தில் அவரது உடல் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை.

    அவை முழுமையாக நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னரே சி.பி.சி.ஐ.டி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.

    அந்த அறிக்கைகள் முழுமையாக கிடைத்த பின்னரே இறுதியாக ஒரு முடிவுக்கு வர முடியும் என்றனர்.

    • முன்னாள் ஆலய தர்மகர்த்தாவும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தராஜா ஆஜரானார்.
    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக விசரணை நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக விசரணை நடைபெற்று வருகிறது.

    இந்த விசாரணையில் ஆஜராவதற்காக தெற்கு கள்ளிகுளம் முன்னாள் ஆலய தர்மகர்த்தாவும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தராஜா ஆஜரானார்.

    அவரிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயக்குமார், மரண வாக்குமூலம் என்ற பெயரில் எழுதி இருந்த முதல் கடிதத்தில் தனது உயிருக்கு ஆபத்து இவர்களால் நேரலாம் என்று பலரது பெயரை குறிப்பிட்டு இருந்தார்.

    அதில் முதல் நபராக ஆனந்த ராஜாவின் பெயரை குறிப்பிட்டு இருந்ததார். இந்நிலையில் இன்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • 500 எண்கள் கண்டறியப்பட்டு சந்தேகப்படும்படியாக தற்போது 25 செல்போன் எண்களை கண்டறிந்துள்ளனர்.
    • ஜெயக்குமாரின் மர்மச்சாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நேற்று ஏடிஜிபி வெங்கட்ராமன், சி.பி.சி.ஐ.டி . ஐ.ஜி. அன்பு, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நெல்லைக்கு வருகை தந்து ஜெயக்குமார் இறந்து கிடந்த அவரது தோட்டம், அவரது வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்தனர். அவர்களது மகன்கள் கருத்தையா, மார்ட்டின் மற்றும் ஜெயக்குமாரின் மனைவி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. முன்னதாக இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் 'டம்ப் டவர்' மூலமாக ஜெயக்குமார் மரணம் அடைந்த நாளன்று அந்த பகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.

    இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் சிக்னல்கள் காட்டப்பட்ட நிலையில் அதனை நேற்று கவனத்துடன் பகுப்பாய்வு செய்தனர். அதில் 500 எண்கள் கண்டறியப்பட்டு சந்தேகப்படும்படியாக தற்போது 25 செல்போன் எண்களை கண்டறிந்துள்ளனர். அந்த 25 செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அந்த நபர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த எண்கள் அனைத்தும் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய நாள் மற்றும் கொலை செய்யப்பட்ட நாள் அன்று அந்த பகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த சந்தேக செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அதன் உரிமையாளர்களிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரிக்கும் பட்சத்தில் இதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதுகின்றனர்.

    இதனால் ஜெயக்குமார் வழக்கு சூடு பிடித்துள்ளது. இதன் மூலமாக ஜெயக்குமாரின் மர்மச்சாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி இன்று 2-வது நாளாக நெல்லையில் முகாமிட்டு இந்த விசாரணையை துரிதப்படுத்தி வருகிறார்.

    மேலும் அவர் விசாரணை குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி அதன்படி விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளார்.

    • ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் நாளன்று 5 மணி நேரம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் விபரம் எடுக்கப்பட்டுள்ளது.
    • இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளின் விபரங்களை கேட்டறிந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக நேற்று திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பல ஏக்கர் நிலப்பரப்பை பல கிலோ மீட்டர்களுக்கு துல்லியமாக ஆராய்ந்து முப்பரிமாணத்தில் படம் எடுத்துக் கொடுக்கும் திறன் கொண்ட முப்பரிமாண 3-டி லேசர் ஸ்கேனர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த கேமராவை பயன்படுத்தி ஜெயக்குமார் தோட்டத்தின் 7 ஏக்கர் நிலப்பரப்பையும் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தனர்.

    தொடர்ந்து 'டம்ப் டவர்' மூலமாக சம்பவம் நடந்த நாளன்று ஜெயக்குமாரின் தோட்டத்தை சுற்றிலும் அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை அறியும் சோதனை நடைபெற்றது. அதில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் நாளன்று 5 மணி நேரம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் விபரம் எடுக்கப்பட்டுள்ளது.

    அதில் லட்சக்கணக்கான செல்போன் எண்கள் வந்திருப்பதாகவும், சந்தேகப்படும் நபர்களின் எண்களை எடுத்து அவர்களிடம் விசாரிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி இன்று நெல்லை வந்தார். அவர் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு நவ்ரோஜ், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளின் விபரங்களை கேட்டறிந்துள்ளார். மேலும் அந்த விசாரணை அறிக்கையையும் அவர் படித்து அது தொடர்பான விளக்கங்களை கேட்டார்.

    இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு நெல்லைக்கு வர உள்ளதாகவும், அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் தியைன்விளை கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமாரின் வீடு மற்றும் தோட்டங்களில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஜெயக்குமாரின் நண்பர்கள், உறவினர்கள், என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
    • வாக்குமூலங்களை போலீசார் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், வேலையாட்கள், ஊர் மக்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஜெயக்குமார் உடல் கிடந்த தோட்டத்தில் சிக்கியுள்ள ஆதாரங்கள், சாட்சியங்களின் வாக்குமூலங்களை போலீசார் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர். கடந்த 4-ந்தேதி ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு முந்தைய நாள் மற்றும் அதற்கு அடுத்த நாள் வரை கரைசுத்துபுதூர் சுற்றுவட்டாரத்தில் அதிகம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் பட்டியலை எடுத்துள்ளனர். அதன் மூலம் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் ஒரு திருப்பம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஜெயக்குமார் வழக்கில் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்களிடம் ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படையினர் எழுத்து பூர்வமாக வாங்கிய தகவல்களை ஆராயும் பணி நடக்கிறது.

    1,500 பக்கங்கள் கொண்டதாக ஒப்படைக்கப்பட்ட அந்த தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் கவனமாக படித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஜெயக்குமார் அரசு மற்றும் தனியார் வங்கிகள் என 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார்.
    • வங்கிகளை நாடுவதற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் தலைமையில் 2 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜெயக்குமார் உடல் கிடந்த இடம், அவரது தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள், பணிப்பெண்கள், உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடதப்பட்டுள்ளது.

    அவர் கடந்த 4-ந் தேதி பிணமாக மீட்கப்படுவதற்கு முன்பு வரை கடைசியாக 3 நாட்களுக்கு எங்கெல்லாம் சென்றார்? அவருடன் அதிக நேரம் இருந்தவர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜெயக்குமார் அரசு மற்றும் தனியார் வங்கிகள் என 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார். அவற்றை ஆய்வு செய்ய வங்கிகளை நாடுவதற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு, ஜெயக்குமார் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு சென்று கடைசி 2 ஆண்டுகள் அவரது வங்கி கணக்கில் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்கின்றனர். அவரது வங்கி கணக்கிற்கு யாரெல்லாம் பணம் செலுத்தி உள்ளனர்? ஜெயக்குமார் யாருக்கெல்லாம் பணம் அனுப்பி உள்ளார்? என்பது குறித்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே நேரத்தில் மற்றொரு குழுவினர் திசையன்விளை பஜார் பகுதியில் உள்ள விடுதிகளில் கடைசி 2 மாதங்கள் வந்து தங்கி இருந்தவர்களின் பெயர் விபரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில், அவர் கடிதத்தில் எழுதி வைத்திருந்த அவர்களுக்கு சம்மன் அனுப்பவும், தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • இதுவரை சம்பவம் நடந்த தோட்டம், ஜெயக்குமார் வீடு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
    • சிலரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்தும் விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்த ஜெயக்குமார் தனசிங் (வயது 60).

    இவர் கடந்த 4-ந்தேதி அவரது வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுவரை சம்பவம் நடந்த தோட்டம், ஜெயக்குமார் வீடு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று சாட்சியங்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே சிலரிடம் விசாரித்து இருந்தாலும், அவர்கள் நெல்லை மாவட்ட போலீசார் விசாரித்தபோது கூறிய தகவல்களும், தற்போது சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் கூறிய தகவல்களும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் மீண்டும் அந்த நபர்களிடம் விசாரணையை நடத்துகின்றனர்.

    மேலும் பல்வேறு சாட்சியங்களிடமும் இன்று நேரில் திசையன்விளைக்கு சென்றும், சிலரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்தும் விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளனர்.

    மேலும் கரைசுத்து புதூரில் ஜெயக்குமார் உடலை முதலில் பார்த்த தோட்ட தொழிலாளி, அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள், அவரது கார் டிரைவர், இறப்பதற்கு முன்பாக கடைசி 3 நாட்கள் அதிக நேரம் அவருடன் இருந்தவர்கள், அந்த நாட்களில் ஜெயக்குமார் தனது செல்போனில் அதிக நேரம் பேசியவர்களிடமும் இன்று விசாரணை நடத்தி அதனை பதிவு செய்து கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினர் மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேருக்கும் இதுவரை சம்மன் அனுப்பவில்லை.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று ஜெயக்குமாரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது தோட்டத்திலும் சென்று மீண்டும் ஆய்வில் ஈடுபட்டனர். தோட்டத்தை முழுமையாக அளவீடு செய்தனர். பின்னர் ஆய்வு நடத்தி கிடைக்கப்பெற்ற தடயங்களை சேகரித்தனர்.

    இந்நிலையில் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினர் மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 4 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. நடத்திய விசாரணை மற்றும் தோட்டத்தில் நடத்திய ஆய்வுகளில் கிடைத்துள்ள சில தடயங்களையும், ஏற்கனவே நெல்லை மாவட்ட போலீசார் தங்களது விசாரணையின்போது சேகரித்து ஒப்படைத்துள்ள தடயங்களையும் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் ஒப்பிட்டு பார்த்து அதன்மூலம் ஏதேனும் புதிய தகவல்கள் கிடைக்குமா? என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட போலீசார் விசாரணையில் என்னென்ன செய்தார்கள் என்பதை ஆய்வு செய்து, அவர்கள் செய்ய தவறியவற்றை குறிப்பெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேருக்கும் இதுவரை சம்மன் அனுப்பவில்லை. தற்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிசெய்து வருகிறோம்.

    அதன்பின்னர் அவர்களுக்கு பதிவு தபால் அனுப்புவதற்கு தேவையான பணிகள் நடக்கும். இன்னும் சில நாட்களில் சம்மன் அனுப்பப்படும். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை ஒரு வாரத்தில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 32 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    • தொழில் ரீதியில் அவருடன் பழகிய நண்பர்கள் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 4 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை தேடுதல், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் சம்பவத்தன்று நடந்தவற்றை எழுத்துப்பூர்வமாக வாக்குமூலமாக பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இன்று ஜெயக்குமார் மரண வழக்கில் ஏற்கனவே போலீசாரால் விசாரிக்கப்பட்ட அவரது உறவினர்கள், தொழில் ரீதியில் அவருடன் பழகிய நண்பர்கள் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். இதற்காக ஒரு குழு கரைசுத்துபுதூருக்கு சென்று இந்த விசாரணையை மேற்கொள்கின்றனர்.

    மேலும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய மற்றொரு குழு ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசி 2 நாட்கள் வந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் விபரங்களை கேட்டறிய முடிவு செய்துள்ளனர்.

    அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொழில் அதிபர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 32 பேருக்கும் இன்னும் ஓரிரு நாளில் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×