search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஷா சோபனா"

    • நான் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன், அது இறுதியாக தற்போது நடந்துள்ளது.
    • 33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன்.

    தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி ஸ்மிருதி மந்தனாவின் அபாரமான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களைச் சேர்த்தது.

    அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீராங்கனை ஆஷா சோபனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன் என ஆஷா சோபனா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னிடம் தற்போது பேச வார்த்தைகளே கிடையாது. ஏனேனில் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த போது ஒருநாள் கிரிக்கெட்டை இதுநாள் வரை டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அப்போது நான் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன், அது இறுதியாக தற்போது நடந்துள்ளது.

    இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது எனக்கு ஒரு கனவு. அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது. 33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன். எனது முதல் சர்வதேச விக்கெட்டாக மரிஸான் கேப்பின் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பு வாய்ந்த தருணம். ஏனெனில், சில நாள்களுக்கு முன் நான் என்சியாவில் இருந்த போது ஜெமிமாவிடம் உரையாடிக்கொண்டிருந்தேன்.

    அப்போது நான் அவரிடம், எனது அறிமுக விக்கெட்டாக மரிஸான் கேப்பின் விக்கெட் இருக்க வேண்டும் என்று கூறினேன். நீங்கள் எந்தப் போட்டியில் விளையாடினாலும், மரிஸான் கேப்பின் விக்கெட்டைப் பெறுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளதுடன், தற்போது விளையாடி வரும் அனுபவ வாய்ந்த வீராங்கனைகளில் ஒருவரும் கூட. அவரைது விக்கெட்டை வீழ்த்த கடவுள் கருணை காட்டியுள்ளார்.

    இவ்வாறு ஆஷா கூறினார்.

    • திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், மின்னு மணி மற்றும் எஸ் சஜனா ஆகியோருக்குப் பிறகு பெண்கள் டி20-யில் இடம் பிடித்த கேரள வீராங்கனை ஆவார்.
    • 4-வது டி20-யில் கேரளாவை சேர்ந்த சஜனா மற்றும் ஆஷா இருவரும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்களாதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் 3 டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

    இதனையடுத்து இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த போட்டியில் இந்திய அணியில் 33 வயதான ஆஷா சோபனா இடம் பெற்றார். இதன் மூலம் டி20-யில் அறிமுகமாகும் வயதான இந்தியப் பெண் என்ற பெருமையை கேரள வீராங்கனையான சோபனா பெற்றார்.

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், மின்னு மணி மற்றும் எஸ் சஜனா ஆகியோருக்குப் பிறகு பெண்கள் டி20-யில் இடம் பிடித்த கேரள வீராங்கனை ஆவார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20-யில் சஜனா அறிமுகமானார். இன்று நடக்கும் 4-வது போட்டியில் சஜனா மற்றும் ஆஷா இருவரும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்திய ஆடவர் டி20 அணிக்காக அறிமுகமான அதிக வயதானவர் ராகுல் டிராவிட். 2011-ல் இங்கிலாந்துக்கு எதிராக டிராவிட் விளையாடியபோது அவருக்கு வயது 38 வயது 232 நாட்கள். இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். 2006-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களம் இறங்கியபோது அவருக்கு வயது 33 வயது 221 நாட்கள் ஆகும்.

    ×