என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டெஸ்லா நிறுவனம்"
- மோடி தென்னிந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்கள் என எண்ணுகிறார்.
- டெஸ்லா நிறுவனம் தெலுங்கானாவில் தொழிற்சாலை அமைக்க விரும்புகிறது.
திருப்பதி:
தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரதமர் மோடியும் அமித்ஷாவும் குஜராத் மட்டுமே இந்தியா என்று நினைக்கிறார்கள். அது தவறு இந்தியாவில் மற்ற மாநிலங்களும் உள்ளன. அவர்களுக்கும் உரிமைகள் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களை புறக்கணித்து வருகின்றனர்.
மத்திய மந்திரி சபையில் தெலுங்கானாவை சேர்ந்த எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது. 42 தெலுங்கு பேசும் எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் ஒரே ஒரு மத்திய மந்திரி மட்டுமே உள்ளார்.
குஜராத்தில் உள்ள 26 எம்.பி.க்களில் 7 பேர் மத்திய மந்திரிகளாகவும், உத்தரபிரதேசத்தில் 12 பேர் மத்திய மந்திரிகளாகவும் உள்ளனர்.
அமித்ஷா மற்றும் நரேந்திர மோடியின் பார்வையில் தென்னிந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்கள் என எண்ணுகிறார்கள். இதை நான் தெளிவாக கூறுகிறேன்.
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் தெலுங்கானாவில் தொழிற்சாலை அமைக்க விரும்புகிறது.
ஆனால் அந்த நிறுவனத்தை குஜராத்திற்கு வர வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நான் முதல் மந்திரி நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். இந்த விவகாரத்தில் எப்படி செயல்படுவது என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்