search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் மோதல்"

    • தேர்தலின் போது பல்வேறு இடங்களில் கலவரம் நடந்தது.
    • வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த சகோதரர்கள் இருவரும் தலைமரைவாகி விட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலின் போது பல்வேறு இடங்களில் கலவரம் நடந்தது. கலவரத்தை அடக்க 25 கம்பெனி துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மாச்சர்லா சட்டமன்றத் தொகுதியில் ஒஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தற்போதைய எம்எல்ஏ பில்லினேனி ராமகிருஷ்ண ரெட்டி போட்டியிடுகிறார்.

    தேர்தல் நாள் அன்று நடந்த கலவரத்திற்கு பில்லினேனி ராமகிருஷ்ண ரெட்டியும், அவரது சகோதரர் வெங்கட்ராம ரெட்டியும் தான் காரணம் என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டினர். வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த சகோதரர்கள் இருவரும் தலைமரைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    • தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்குப் பிறகும் மோதலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி நேற்று பத்மாவதி பல்கலைக்கழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை பார்வையிட சென்றார்.

    அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அவரது வாகனத்தை வழிமறித்தனர். பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்கினர். இரும்பு கம்பியால் நானியை தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருடைய பாதுகாவலர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டதால் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நானி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து திருப்பதி சந்திரகிரி ஆகிய இடங்களில் தெலுங்கு தேசம் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    அப்போது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு சொந்தமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு நிலைமை மோசம் அடைந்தது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தாடிப்பட்டியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்குப் பிறகும் மோதலில் ஈடுபட்டனர். அங்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி இரு தரப்பினரையும் போலீசார் கலைத்தனர்.

    இதே போல நேற்று தாடிபத்திரி தொகுதியில் இரு கட்சியினர் இடையே கடுமையான மோதல் வெடித்தது.

    இந்த தகவல் அறிந்த இருதரப்பு ஆதரவாளர்கள் பக்கத்து கிராமங்களில் இருந்தும் தாடிபத்ரி நகரப் பகுதியில் குவிந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

    இந்த 3 இடங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஆந்திர மாநிலத்தில் அமைதியாக தேர்தல் நடத்துவதில் போலீசார் தவறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதற்கு காரணமான அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • போலீசார் ரப்பர் குண்டுகள் மூலம் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
    • தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத்திற்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    காலையில் வாக்கு பதிவு தொடங்கியதும் தாடிப்பத்திரி என்ற இடத்தில் இரு கட்சி கடுமையாக மோதி கொண்டனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    குண்டூர் அருகே உள்ள நரசராவ்பேட்டையில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

    இதனையடுத்து அங்கு வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது வாக்குப்பதிவு முடிந்து எந்திரங்கள் அனைத்தும் எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கு பிறகும் தொண்டர்கள் ஆவேசமாக காணப்பட்டனர்.

    நரசராவ்பேட்டை நகரப் பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு மாறி மாறி கோஷங்கள் எழுப்பினர். திடீரென அவர்களுக்குள் கலவரம் வெடித்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபி ரெட்டி சீனிவாஸ் எம்.எல்.ஏ. வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது பின்னோக்கி செல்வது போல சென்ற தொண்டர்கள் மீண்டும் எம்.எல்.ஏ. வீட்டு முன்பு ஓடி வந்து கற்களை வீசி தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ரப்பர் குண்டுகள் மூலம் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

    மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்நாடு பகுதியில் இரவிலும் தெலுங்கு தேசம் ஒய்எஸ்ஆர் கட்சியை காங்கிரஸ் கட்சியினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.

    நடுரோட்டில் கார் பற்றி எரிந்ததால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. இது பற்றி தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதே போல ஆந்திராவில் பல்வேறு இடங்களில் இரவிலும் மோதல் நீடித்தது. மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
    • மோதல் சம்பவம் அப்பகுதியில் வாக்காளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ரெண்டல கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

    ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டுகள் 2 பேரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால்,  ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆந்திராவில் தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் வாக்காளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    ×