search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொட்டபெட்டா சிகரம்"

    • நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    • தொட்டபெட்டாவின் இயற்கை அழகை பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடந்து வருகிறது.

    கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சி ஆகியவற்றை பார்வையிடுகிறார்கள்.

    அதனை தொடர்ந்து ஊட்டியில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று சுற்றிப் பார்ப்பது வழக்கம்.

    இந்த நிலையில் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்குச் செல்லும் பகுதியில் வனத்துறை சாா்பில் சோதனைச் சாவடி அலுவலக கட்டுமான பணி தொடங்கி உள்ளது.

    இதன் காரணமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தொட்டபெட்டா காட்சி முனை 7 நாட்களுக்குப் பின் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    தொட்டபெட்டாவில் விட்டு விட்டுப் பெய்யும் சாரல் மழை, அடிக்கடி சூழ்ந்து கொள்ளும் மேக மூட்டத்தால் நிலவும் குளிரில் இயற்கை அழகை பார்க்க இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    • சோதனைச் சாவடி அலுவலக கட்டுமான பணி தொடங்கி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடந்து வருகிறது.

    கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சி ஆகியவற்றை பார்வையிடுகிறார்கள்.

    அதனைதொடர்ந்து ஊட்டியில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று சுற்றி பார்ப்பது வழக்கம்.

    இந்த நிலையில் தொட்டபெட்டா மலை சிகரத்துக்குச் செல்லும் பகுதியில் வனத்துறை சாா்பில் சோதனைச் சாவடி அலுவலக கட்டுமான பணி தொடங்கி உள்ளது.

    இதன் காரணமாக தொட்டபெட்டா மலைசிகரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பைக்காரா படகு இல்லத்தில் 1.5 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் பைக்கார படகு இல்லத்திற்கும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை சுற்றி பார்த்து விட்டு, தொட்டபெட்டா மலைசிகரம், பைக்கார படகு இல்லத்திற்கு செல்ல முடிவு எடுத்து அங்கு செல்கின்றனர்.

    ஆனால் அங்கு சென்ற பின்னர் தான் அங்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து உதகை வனத் துறை அதிகாரிகள் கூறு கையில், தொட்டபெட்டா மலை சிகரத்தில் உள்ள சோதனைச் சாவடியால் வாகன நெரிசல் ஏற்படு வதாகவும், இதனை மாற்றி தர வேண்டும் என போலீசார் கேட்டுக்கொ ண்டனர்.

    அதன் காரணமாக தற்போது பணிகள் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து சுற்றுலா பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவர். இதேபோல் பைக்காரா சாலை விரிவாக்க பணியும் விரைவில் முடிந்ததும், அங்கும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    ×