search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி விஜில் செயலி"

    • நடத்தை விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்தது.
    • சி-விஜில் செயலி மூலமாக பொதுமக்கள் புகார் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    நடத்தை விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 'சி-விஜில்' என்ற செல்போன் செயலியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த செயலி மூலமாக பொதுமக்கள் புகார்களை வழங்கலாம் என அறிவித்தது. அதன்படி இந்த செயலி வழியாக தொடர்ந்து புகார்கள் வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்நிலையில், இதுவரை 4.24 லட்சத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதில் 409 புகார்கள் விசாரணையில் உள்ளன.

    இதுவரை வந்துள்ள புகார்களில் 100 நிமிடங்களுக்குள் 89 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது என தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

    ×