search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதிஷ்டை தினம்"

    • ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக கடந்த 14-ந் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கோவில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். உடனடி முன்பதிவு நிறுத்தப் பட்டுள்ளதால், ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    நேற்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் சகஸ்ர கலச சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சபரிமலையில் மழை கொட்டியது. இருப்பினும் பக்தர்கள் மழையில் நனைந்த படியே காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வைகாசி மாத பூஜை நிறைவையொட்டி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது.

    ×