search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபல ராப் பாடகர்"

    • புளோரிடாவின் தம்பா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பூலியோ தங்கி இருந்தார்.
    • ஓட்டலின் கார் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் பூலியோ என்ற சார்லஸ் ஜோன்ஸ் (வயது 26). பிரபல ராப் பாடகரான இவரை சமூகவலைதளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். இதற்காக புளோரிடாவின் தம்பா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கி இருந்தார்.

    இந்தநிலையில் ஓட்டலின் கார் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பூலியோ ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ராப் பாடகரான பூலியோ கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

    • 37 வயதான கலைஞர் தனது பந்தய சீட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
    • போட்டியில் கொல்கத்தா வென்றதால், டிரேக்கும் தனது பந்தயத்தை வென்றுள்ளார்.

    ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது 3வது ஐபிஎல் பட்டத்தை வென்றது.

    113 ரன்களுக்கு ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஐபிஎல் போப்பையை தன் வசமாக்கியது.

    இந்த வெற்றி கொல்கத்தா அணியின் பத்து ஆண்டு கால எதிர்பார்ப்பபை பூர்த்தி செய்தது. கொல்கத்தா அணியின் வெற்றி கனடிய பாடகர்- ராப்பர் டிரேக்கிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கிராமி விருது பெற்ற ராப்பர் டிரேக், ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு ஆதரவாக 250,000 அமெரிக்க டாலர்கள் பந்தயம் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 கோடி ) வென்று இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3.73 கோடி பரிசை வென்றுள்ளார்.

    கிரிக்கெட் பந்தயத்தில் டிரேக்கின் முதல் முயற்சி இதுவாகும். இதற்கு முன்பு கூடைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் ரக்பியில் பந்தயம் கட்டியிருக்கிறார்.

    முன்னதாக, 37 வயதான கலைஞர் தனது பந்தய சீட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். டிரேக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "எனது முதல் கிரிக்கெட் பந்தயத்தை கொல்கத்தா மீது வைக்கிறேன்" என்று படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

    போட்டியில் கொல்கத்தா வென்றதால், டிரேக்கும் தனது பந்தயத்தை வென்று கோடியில் வென்றுள்ளார்.

    இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி பந்தயம் கட்டி, டிரேக் இப்போது சுமார் ரூ.3.73 கோடியை பெற்றுள்ளார். இதன் மூலம், டிரேக் சுமார் 1.7 கோடி லாபத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×