search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி தியானம்"

    • பிரதமர் மோடி 45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறார்.
    • ஜூன் 1-ந்தேதி மாலை தியானத்தை முடித்துக் கொள்ள இருக்கிறார்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கன்னியாகுமரி வந்து தியானத்தை தொடங்கியுள்ளார்.

    ஜூன் 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை வரை 45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு டி.கே. சிவகுமார் பதில் அளிக்கையில் "கடவுள், பக்தி போன்றவை அவருடைய (பிரதமர் மோடி) தனிப்பட்ட விசயம். நாம் ஏன் தலையிட வேண்டும்?. அவருடைய பிரார்த்தனை மற்றும் தியானத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும்?" என்றார்.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது இதுபோன்று தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கேதர்நாத்தில் உள்ளி குகையில் தியானம் மேற்கொண்டார். தற்போது இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.

    • பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.
    • ஜூன் 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை வரை அவர் தியானம் மேற்கொள்வார்.

    மக்களவை தேர்தலின் சூறாவளி பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்தார்.

    இன்று தேர்தல் பிரசாரத்தை முடித்த அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரி வந்தடைந்த அவர், பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் சென்றார். பின்னர் தனது தியானத்தை தொடங்கினார். இன்று தியானத்தை தொடங்கிய அவர் ஜூன் 1-ந்தேதி மாலை தியானத்தை நிறைவு செய்கிறார்.

    ஜூன் 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்போது, மோடி தியானம் செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும். இதனால் தியானத்தை தடைவிதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார்.
    • இன்று முதல் ஜூன் 1-ந்தேதி வரை மாலை வரை தியானம் செய்கிறார்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஆறு மணியுடன் ஓய்வடைந்தது.

    பிராசரம் ஓய்ந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் இருப்பதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தார்.

    கன்னியாகுமரி வந்த அவர் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். ஜூன் 1-ந்தேதி மதியம் வரை இவர் தியானத்தில் ஈடுபடுகிறார்.

    பிரதமர் வருகையொட்டி கன்னியாகுமரில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×