search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகேந்திரகிரி இஸ்ரோ மையம்"

    • 5-வது கட்டமாக 1700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது.
    • மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ மையத்தில் இருந்து விண்கலம் செலுத்துவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் எஸ்.எம்.எஸ்.டி.எம். (SMSDM) என்ற என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

    அதன்படி 5-வது கட்டமாக 1700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

    இதனை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார். மேலும் திருவனந்தபுரம் திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் காணொளி காட்சி மூலமாக கண்டனர்.



    • 3-வது கட்ட மாக 1,700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது.
    • இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல் கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தில் இருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவை யான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ். 4 என்ஜின் ஆகியவை தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளில் மனிதன் விண்ணிற்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாதிரி என்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

    அதன்படி 3-வது கட்ட மாக 1,700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப் பட்டு நேற்று சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

    இந்நிகழ்ச்சியில் மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் கலந்து கொண்டு நேரில் பார்வையிட்டார். திருவனந்தபுரம் திரவ இயக்க திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக பார்வையிட்டனர்.

    சோதனை வெற்றிகரமாக நடந்ததால் இஸ்ரோ குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் முதல் கட்டமாக 725 வினாடிகளும், 2-வது கட்டமாக 350 வினாடிகளும் வெற்றிகரமாக சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×