search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.108 கோடி வசூல்"

    • பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
    • சாமி தரிசனத்துக்கு 24 மணி நேரமானது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அங்குள்ள உண்டியலில் தங்கம், வெள்ளி, பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    கடந்த மே மாதம் ரூ.108.36 கோடி உண்டியல் பணம் வசூலாகி உள்ளது.

    இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் கடந்த ஜனவரி மாதம் ரூ.116.46 கோடியும், பிப்ரவரி மாதம் ரூ.11.71 கோடியும், மார்ச் மாதம் ரூ.118.49 கோடியும், ஏப்ரல் மாதம் 101.63 கோடியும் உண்டியல் வருவாய் வசூலாகி சாதனை படைத்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 67,873 பேர் தரிசனம் செய்தனர். 33,532 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.93 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. சாமி தரிசனத்துக்கு 24 மணி நேரமானது.

    ×