search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஸ்லிம் தம்பதி"

    • நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
    • ‘மதத்தை கடந்த மனம்’, ‘இந்தியாவின் கலாசார ஒற்றுமை’ போன்ற கருத்துகளை பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அன்று பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கிருஷ்ணர், ராதைபோல அலங்காரம் செய்து சந்தோஷப்படுவார்கள். இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில் முஸ்லிம் தம்பதி ஒன்று தங்களுடைய மகனை கிருஷ்ணர்போல வேடமிட வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ, 'மதத்தை கடந்த மனம்', 'இந்தியாவின் கலாசார ஒற்றுமை' போன்ற கருத்துகளை பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    • செய்வதறியாது கணவர் தவித்துக்கொண்டிருந்த போது பாத்திமாவுக்கு ரெயிலிலேயே குழந்தை பிறந்தது.
    • ரெயில் கர்ஜத் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தாயையும், குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கோலாப்பூர்- மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரெயிலில் கடந்த 6-ந்தேதி 31 வயதான பாத்திமா என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது கணவர் தயாப்பும் பயணம் செய்தார்.

    ரெயில் லோனாவாலா ரெயில் நிலையத்தை கடந்த போது பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து செய்வதறியாது கணவர் தவித்துக்கொண்டிருந்த போது பாத்திமாவுக்கு ரெயிலிலேயே குழந்தை பிறந்தது.

    இதையடுத்து ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் கர்ஜத் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தாயையும், குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.

    இந்த நிலையில், குழந்தை ரெயிலில் பிறந்ததால் ரெயிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள், மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும் போது குழந்தை பிறந்ததால் அந்த மகாலட்சுமியுடன் ஒப்பிட்டு கூறினர். இதனால் தனது மகளுக்கு மகாலட்சுமி என்று பெயரிட முடிவு செய்ததாக தயாப் தெரிவித்தார். இதையடுத்து அக்குழந்தைக்கு மகாலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ளது.

    கோலாப்பூர்-மும்பை மகாலட்சுமி விரைவு ரெயிலில் பாத்திமா தனது மகளான மகாலட்சுமியைப் பெற்றெடுத்த சம்பவம், மத நல்லிணக்கம் மற்றும் மனித இரக்கத்தின் அழகை எடுத்துக்காட்டுகிறது.

    ×