search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலாத்"

    • யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.
    • ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பினர்.

    மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டார். மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் இந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.

    ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    மேலும் ஐஸ் கிரீமை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறையினர், அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இது குறித்து விசாரணை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர், ஐஸ் கிரீம் உற்பத்தியாளருக்கு வழங்கியிருந்த உரிமத்தை ரத்து செய்தனர். சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் உற்பத்தியாளர் பூனேவை சேர்ந்த நிறுவனம் என்றும், மத்திய அரசு உரிமம் பெற்று இயங்கி வந்ததாகவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கிறது.

    தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. 

    • ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.
    • சுவைத்துக் கொண்டிருந்த போது நாக்கில் ஏதோ தட்டுப்பட்டது.

    மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக உடலையும் மனதையும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆன்லைனில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட முடிவு செய்தார். மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் இந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.

    ஐஸ் கிரீம் ஆர்டர் செய்து, அதனை ருசிக்க காத்திருந்த பெண்ணுக்கு சிறிது நேரத்தில் குளு குளு ஐஸ் கிரீம் டெலிவரி செய்யப்பட்டது. கொளுத்தும் வெப்பத்தில் ஐஸ் கிரீம் நம்மை காப்பாற்றிவிடும் என்ற எண்ணத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட துவங்கினார்.

     


    ஐஸ் கிரீம் ருசியில் மெய்மறந்த பெண், அதனை சுவைத்துக் கொண்டிருந்த போது நாக்கில் ஏதோ தட்டுப்பட்டது. ஐஸ் கிரீமில் என்ன இருந்துவிட போகிறது என அதை உற்று நோக்கியவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தான் ஆசை ஆசையாய் வாங்கி சுவைத்த ஐஸ் கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது.

    அதிர்ச்சியுடன் துரிதமாக செயல்பட்ட பெண், தான் சுவைத்த ஐஸ் கிரீம் உருகுவதற்குள் அதனை புகைப்படம் எடுத்துக் கொண்டு, உடனடியாக மலாத் காவல் நிலையம் விரைந்தார். அங்கு தான் ஆர்டர் செய்து சுவைத்த ஐஸ் கிரீமில் கைவிரல் இருந்தது குறித்து புகார் அளித்தார்.

    புகாரை எடுத்துக் கொண்ட மலாத் காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, ஐஸ் கிரீமை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ×