search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் காதல் கடிதம்"

    • ஆனந்த அம்பானியின் திருமணத்திற்கு முன் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது.
    • சொகுசு கப்பலில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

    மும்பை:

    இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.

    இவர்களது திருமணம் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.

    திருமணத்திற்கு முன்னதாக ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது. இது அவர்களது இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டமாகும்.

    சமீபத்தில் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.


    இந்நிலையில், இந்த விழாவில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த கவுன் விசேஷமாக தயாரிக்கப்பட்டது. அது என்னவெனில், ராதிகாவுக்கு ஆனந்த் அம்பானி தனது 22 வயதில் அவருக்கு எழுதிய காதல் கடிதம் மொத்தமாக அச்சிடப்பட்டிருந்தது. இந்த கவுனை லண்டனைச் சேர்ந்த பிரபல ஆடை டிசைனர் ராபர்ட் வன் வடிவமைத்துள்ளார். ராதிகா அணிந்திருந்த கருப்பு கவுன் வெள்ளை நிற ஷிபான் துணியால் ஆனது.

    இதுதொடர்பாக ராதிகா மெர்ச்சண்ட் கூறுகையில், என் பிறந்தநாளுக்காக அவர் எனக்கு நீண்ட காதல் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்த கவுனை என் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளிடம் காட்டுவேன் என தெரிவித்தார்.

    தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    ×