என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விக்ரம் ரத்தோர்"
- கோலியின் ஆட்டத்திறன் குறித்து கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.
- அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்தே நன்றாக விளையாடி வருகிறார்.
லாடெர்ஹில்:
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கனடாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழையால் ரத்தான பிறகு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், '
இந்த உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலியின் (3 ஆட்டத்தில் 5 ரன்) பார்ம் குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். அவர் நன்றாக ஆடினாலும், இல்லாவிட்டாலும் நான் உங்களை சந்திக்க வரும் போதெல்லாம் அவரை பற்றி நீங்கள் கேட்க தவறுவதில்லை. அது எனக்கு பிடித்திருக்கிறது.
கோலியின் ஆட்டத்திறன் குறித்து கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்தே நன்றாக விளையாடி வருகிறார். ஓரிரு முறை ஆட்டமிழந்தது, எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. உண்மையில் இது அவரை இன்னும் கூடுதல் வேட்கையுடன் விளையாட தூண்டும். அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளார்.
இவ்வாறு ரத்தோர் கூறினார்.
சூப்பர்8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் வருகிற 20-ந்தேதி மோத உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்