search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊடுருவல் பயங்கரவாதிகள்"

    • சீருடை அணியாத போலீசார் மீனவர்களோடு மீனவர்கள் போல கடலில் படகுகளில் வந்தனர்.
    • கடற்கரையோர சோதனை சாவடிகளிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்யும் ஒத்திகை நடந்தது.

    நெல்லை:

    இந்திய கடல் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் அவ்வப்போது சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும், நாளையும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என ஏற்கனவே மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த ஒத்திகையில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உவரி, கூடங்குளம் சட்டம்-ஒழுங்கு போலீசார், மீன்வளத்துறை, வருவாய்த்துறையினரும் கலந்து கொண்டனர்.

    அவர்கள் கடலுக்குள் ரோந்து சென்று சந்தேகப்படும்படியான நபர்கள், அந்நியர்கள், சந்தேகத்திற்கு இடமான படகுகள், பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்கள் சட்ட விரோதமாக கடல் வழியாக நுழைவதை தடுப்பது குறித்து ஒத்திகை நடத்தினர்.

    சீருடை அணியாத போலீசார் மீனவர்களோடு மீனவர்கள் போல கடலில் படகுகளில் வந்தனர். அவர்களை துல்லியமாக கண்டறிந்து கைது செய்யும் ஒத்திகை நடைபெற்றது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். மேலும் கடற்கரையோர சோதனை சாவடிகளிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்யும் ஒத்திகை நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாப்பன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஒத்திகை நாளையும் 2-வது நாளாக நடக்கிறது.

    இந்த பணியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். அவர்கள் கடலுக்குள் ரோந்து சென்று பயங்கரவாதிகள் வேடத்தில் வந்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். தொடர்ந்து மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மீனவர்களுக்கு எடுத்து கூறினர்.

    ×