என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை வைத்தியம்"

    • ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
    • முடி வளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது.

    இன்று பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர். சருமம் வறண்டு போகுதல், சரும அரிப்பு, எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இது பொதுவான பிரச்சனையாகும். எனினும், இன்னும் சிலருக்கு கன்னங்கள், நெற்றி போன்றவற்றில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். இது முகத்தின் அழகைக் கெடுக்கும். இந்த முடி வளர்ச்சியை அகற்ற பல்வேறு அழகு சாதனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.

    முகத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது. முக முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சில எளிமையான மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் காணலாம். இந்த வீட்டு வைத்தியங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் முக முடிகளை அகற்றுவதன் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கலாம்.

    முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிப்பதற்கு கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகமாவதும் ஒரு காரணமாகும். ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக கன்னம், காதுகள், நெற்றி பகுதிக்கு அருகில் முடி வளரத் தொடங்குகிறது.

    முகத்தை சுத்தமாக மற்றும் பளபளப்பாக வைத்துக் கொள்ள ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கையான முறையில் முகத்தில் உள்ள முடிகளை அகற்றும் முறைகளைக் காணலாம்.

    பப்பாளி மற்றும் மஞ்சள்

    முகத்தில் உள்ள முடிகளை நீக்கவும், முகத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் இந்த பேக் உதவுகிறது. பப்பாளி மற்றும் மஞ்சள் பேக் தயாரிக்க முதலில் பப்பாளியை மசித்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இதன் மூலம் முகத்தை சுத்தமாக்கலாம். இதனுடன் முகத்தில் உள்ள முடிகளை அகற்றலாம்.

    கடலை மாவு மற்றும் மஞ்சள்

    கடலை மாவு மஞ்சள் பேக் முகத்தில் உள்ள முடி பிரச்சனையை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு ஒரு ஸ்பூன் அளவிலான கடலை மாவில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்க வேண்டும். இதில் அரை எலுமிச்சைச் சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தன விழுதை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கலந்து, முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். அதன் பிறகு, சாதாரண நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.

    எலுமிச்சை மற்றும் தேன்

    முகப்பொலிவுக்கு ஒரு ஸ்பூன் அளவிலான தேனில் எலுமிச்சைச் சாறு கலந்து அருந்தலாம். இப்போது முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவலாம். இவ்வாறு 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம்.

    முட்டை மற்றும் சோளமாவு

    சோளமாவு மற்றும் முட்டையைக் கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்கலாம். முட்டையின் வெள்ளைக் கருவை தலா ஒரு டீஸ்பூன் அளவிலான சோளமாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கலாம்.

    இந்த கலவையை பிரஷ் கொண்டு முகம் முழுவதும் மற்றும் முடிகள் உள்ள பகுதியில் நன்கு தடவிக் கொள்ளலாம். இதை 10 முதல் 15 நிமிடம் வரை உலர வைக்க வேண்டும். அதன் பின், முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இதன் மூலம் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கலாம்.

    சர்க்கரை மற்றும் எலுமிச்சை

    கிண்ணம் ஒன்றில் 1 தேக்கரண்டி அளவிலான சர்க்கரை மற்றும் அரை எலுமிச்சைச் சாறு கலக்க வேண்டும். இதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதை நன்கு கலந்து பேஸ்ட்டாக மாற்றி முகத்தில் தடவி பின்னர் கன்னங்கள் மற்றும் நெற்றியில் மெதுவாக தேய்க்க வேண்டும். இந்த ஸ்க்ரப் முகத்தில் உள்ள முடியை நீக்க உதவுகிறது.

    பால் மற்றும் மசூர் பருப்பு

    முகத்தை வறட்சி மற்றும் முடி பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க, 2 ஸ்பூன் அளவிலான மசூர் பருப்பை பேஸ்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு போன்றவற்றைச் சேர்த்து கலக்க வேண்டும்.

    இந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைக்கலாம். இந்த பேக் பயன்படுத்துவது முகத்தில் உள்ள முடிகளை நீக்கி, முகத்தில் உள்ள கறைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

    இந்த ஃபேஸ் பேக்குகளின் உதவியுடன் முகத்தில் தோன்றும் முடியை எளிமையான மற்றும் இயற்கையான முறையில் நீக்கலாம். எனினும், உணர்திறன் மிகுந்த சருமம் என்பதால், புதிய பொருட்களைத் தேர்வு செய்யும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

    • இளம் தலைமுறையினர் பலரும் இளநரை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.
    • கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கியமான இலை கருவேப்பிலை.

    முடி உதிர்தல் பிரச்சனை எந்த அளவுக்கு கவலையை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு இள நரை பிரச்சனையும் நிம்மதியை தொலைத்துவிடும். அதற்கேற்ப இளம் தலைமுறையினர் பலரும் இளநரை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.


    இன்றைய ஐ.டி. யுகத்தில் இளம் தலைமுறையினர் பலரும் இணையதளத்திலேயே கண்ணும், கருத்துமாக மூழ்கி இருப்பதும், நேர மேலாண்மையை கடைப்பிடிக்காமல் விரும்பிய உணவுகளை இஷ்டப்பட்ட நேரத்தில் ருசிப்பதும், முதுமையில் வர வேண்டிய நரை இளமையிலேயே வந்துவிடுவதற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.

    திருமணம் செய்ய வேண்டிய வயதில் இப்படி இள நரையுடன் காட்சி அளிப்பது, இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைப்பதற்கு பெருந்தடையாக அமைந்துவிடுகிறது.

    இள நரையை இயற்கையான முறையில் போக்குவது எப்படி? அதனை தடுப்பதற்கான எளிமையான வழிமுறைகள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும், அது பற்றிய இணையதள தேடலும் அதிகரித்திருக்கிறது.

    இளநரை வந்த பிறகு தடுப்பதற்கு முயற்சிப்பதை விட, இளநரை வராமல் காப்பதுதான் புத்திசாலித்தனம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...


    கூந்தலை இளமையாக வைத்துக்கொள்ள, இளநரை இல்லாமல் பாதுகாத்து கொள்ள, நெல்லிக்காய் சிறந்த தேர்வாக அமையும். நெல்லிக்காயை நன்கு அரைத்து சாறு பிழிந்து அதே அளவுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இவை மூன்றையும் சேர்த்து காய்ச்சி தினமும் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவினால் இளநரை வராமல் தடுக்கலாம். தலையில் ஆங்காங்கே ஓரிரு இள நரை முடிகள் இருந்தால் அதன் மீதும் தடவி வரலாம்.

    இள நரை பாதிப்புக்குள்ளானவர்களின் அடுத்த கேள்வி, எதையாவது சாப்பிட்டால் இளநரை சரியாகுமா என்பது தான். இவர்கள் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கியமான இலை கருவேப்பிலை.


    தம் பெயரிலேயே "கரு" (மை) சேர்ந்த இந்த இலை நம் கூந்தலையும் நிச்சயம் கருமையாக மாற்றும். சிலருக்கு பித்தத்தினால் கூட தலையில் நரை தோன்றும். இவர்கள் காலையில் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறில் இரண்டு துளி தேன் சேர்த்து பருகி வந்தால் பித்த நரை வந்த சுவடே தெரியாமல் மறைந்து விடும்.

    நிறைய வீடுகளில் இப்பொழுதெல்லாம் மூங்கில் மரத்தை வாஸ்துவுக்காக வளர்க்கிறார்கள். மூங்கில் இலையும் சரி, அது தரும் அழகும் சரி நம்மை என்றுமே இளமையாக வைத்திருக்க உதவும்.


    மூங்கில் இலைகளை தேங்காய் எண்ணெய்யில் இரண்டு வார காலம் வரை ஊற வைத்து, அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தடவி வந்தால், நரை இல்லாத முடி நிச்சயம் கிடைக்கும்.

    வெந்தயம், சீரகம், வால்மிளகு இந்த மூன்று பொருட்களையும் எடுத்து பொடி செய்து அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால் இள நரையால் வந்த மனக்குழப்பம் காணாமலேயே போய்விடும்.


    தினமும் பல வகையான கீரை உணவுகளை சாப்பிடணும். கரிசலாங்கண்ணி கீரை நம் கண்ணுக்கு குளுமை தந்து, கூந்தலுக்கு இளமை தரக்கூடிய கீரை.


    இந்த கீரையை நன்றாக அரைத்து, அதிலிருந்து சாறும் எடுத்து அதை அப்படியே தேங்காய் எண்ணெய்யில் கலந்து காயவைத்து தேய்த்து பாருங்கள். பசுமை மாறா இந்த கீரை, கருமை மாறா கூந்தலை பரிசளித்ததை எண்ணி பாராட்டுவீர்கள்.

    முருங்கைகீரையும் முடி வளர்ச்சிக்கும், இளநரைக்கும் தீர்வு தரக்கூடியது.

    • உடலுழைப்பு, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணம்.
    • இனப்பெருக்கம் சார்ந்த கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

    உடல் பருமன் என்பது உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் மருத்துவ பிரச்சனையாகும். இது குழந்தைகள், நடுத்தர வயதுள்ளவர்கள், பெரியவர்கள் என அனைவரிடமும் காணப்படுகின்றது.


    உடல்பருமனுக்கான காரணம்:

    நொறுக்குத் தீனி மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்பது, சோம்பலான வாழ்க்கை முறை, புகை-மதுப்பழக்கம், குறைந்த உடலுழைப்பு, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணம் ஆகும். இதுதவிர சில உடல் குறைபாடுகளும் இதற்கு காரணமாக அமைகின்றன.

    அதில் ஒன்று ஹார்மோன் குறைபாடுகள். குறை தைராய்டு நோய் உள்ளவர்கள் மற்றும் பெண்களுக்கு புரோலாக்டின், புரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களில் உள்ள குறைபாடுகளால் இயல்பாகவே உடல்பருமன் அதிகமாக இருக்கும்.


    மனச்சோர்வுகள், தூக்கமின்மை இவைகளுக்காக எடுக்கப்படும் மருந்துகள் மற்றும் பரம்பரையும் சில காரணங்களாகும்.

    உடல்பருமனால் டைப் 2 சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், கால்களில் வரும் நாள வீக்கங்கள், தூங்கும் போது குறட்டை விடல், திடீரென்று மூச்சு நின்றுவிடுவது போலிருத்தல், ஆண், பெண் இருபாலருக்கும் இனப்பெருக்கம் சார்ந்த கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வரலாம்.


    தீர்வுகள்:

    * மனதில் நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) மற்றும் உடற்பயிற்சிகள் செய்யலாம்.

    * தேயிலையுடன் லவங்கப்பட்டை சேர்த்து குடிக்க வேண்டும். பூனை மீசையிலை (ஜாவா டீ) என்ற டீ காலை, மாலை என இருவேளை குடித்து வரலாம். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

    * தோல், விதை நீக்கிய வெண்பூசணி சாறு காலையில் 60 மில்லி வீதம் குடிக்கலாம்.


    * மடல் நீக்கிய சோற்றுக் கற்றாழைச்சாறு எடுத்து அதை ஏழுமுறை தண்ணீரில் கழுவி அதனுடன் இஞ்சி, சிறிதளவு பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மோரில் கலக்கி குடிக்கலாம்.

    * நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நத்தைச்சூரி விதையை வாங்கி, இளவறுப்பாக வறுத்து பொடி செய்து காப்பி போல போட்டுக் குடிக்கவும்.

    * சிறிதளவு கொள்ளு (கருப்பு, சிவப்பு, வெள்ளை ஏதாவது ஒன்று) அதனுடன் ஒரு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், மிளகுத்தூள் இவை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவு தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் வீதம் குடிக்கலாம்.


    * இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு (பூண்டை சிதைத்து வெண்ணிற துணியில் வைத்து நெருப்பில் வாட்டி எடுத்து பிழிய சாறு வரும்), எலுமிச்சை சாறு, புதினாச்சாறு இவையாவும் 2.5 மில்லி வீதம் எடுத்து தேன் 5 மில்லி கலந்து காலை, இரவு சாப்பிட கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனைக் குறைக்க உதவும். (நீரிழிவு நோயாளிகள் தேனை தவிர்க்கவும்).

    * எலுமிச்சம் பழச்சாறு, தேன் இவற்றை வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

    ×