என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெல்போர்ன்"

    • மன்ப்ரீத் கவுர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்க சென்றுள்ளார்.
    • காசநோயின் காரணமாகத்தான் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    24 வயதான இந்திய வம்சாவளி பெண்ணான மன்ப்ரீத் கவுர் பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்க சென்றுள்ளார். படிக்கும் போதே வேலை செய்து தனது செலவுகளை அவர் கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். அதன்படி மெல்போர்னில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் எறியுள்ளார். ஆனால் விமானத்தில் ஏறி அவள் சீட் பெல்ட்டை அணிய முயன்றபோது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

    காசநோயின் காரணமாகத்தான் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. காசநோய் நுரையீரலை பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும்.

    • கவுரவ விருதுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தேர்வாகியுள்ளார்
    • இந்திய கலை மற்றும் கலாச்சாரத்துக்கான தூதுவராக தெலுங்கு நடிகர் ராம் சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

    70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2022 ஆம் ஆண்டு திரைப்படங்களுக்கு நேற்று டெல்லியில் வைத்து அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மலையாளம், கண்டனம் உள்ளிட்ட தென் இந்திய படங்கள் அதிக விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. இதற்கிடையில் மறுபுறம் ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் வைத்து இந்திய திரைப்பட விருது விழா நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15 தொடங்கிய இந்த விழா ஆகஸ்ட் 25 வரை நடைபெறும். இந்நிலையில் நேற்று சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில்,

    சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்கு '12-த் ஃபெயில்' படம் தேர்வாகியுள்ளது . ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மாவின் வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

     

    ◆சிறந்த இயக்குனருக்கான விருது விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாத மற்றும் கார்த்திக் ஆர்யன் நடித்த சந்து சாம்பியன் படத்தின் இயக்குனர் கபீர் கான் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    ◆எக்ஸலென்ஸ் இன் சினிமா [Excellence in Cinema] கவுரவ விருதுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தேர்வாகியுள்ளார்

    ◆சிறந்த சீரிஸ் நடிகையாக 'போச்சர்' சீரிசில் நடித்த கேரள நடிகை நிமிஷா சஜயன் தேர்வாகியுள்ளார்

    ◆இந்திய கலை மற்றும் கலாச்சாரத்துக்கான தூதுவராக தெலுங்கு நடிகர் ராம் சரண்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்

     

     

    ◆சிறந்த நடிகருக்கான விருது 'சந்து சாம்பியன்' படத்தில் ஹீரோ கார்த்திக் ஆரியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

    ◆சிறந்த நடிகைக்கான விருது 'உள்ளொளுக்கு' [ Ullozhukku ] படத்தில் நடித்த மலையாள நடிகை பார்வதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

    ◆சிறந்த சீரிஸ் ஆக ' கோஹ்ரா' Kohrra [இந்தி] தேர்வு செய்யப்பட்டுள்ளது

    ◆விமர்சகர்கள் தேர்வில்[ Critics Choice] சிறந்த நடிகராக '12த் ஃபெயில்' நடிகர் விக்ராந்த் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்

    ◆விமர்சகர்கள் தேர்வில்[ Critics Choice] சிறந்த படமாக 'லாபாட்டா லேடிஸ்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ◆சமத்துவ சினிமாவாக [Equality in Cinema] ஷாருக் கான் நடிப்பில் ராஜ் குமார் ஹிராணி இயக்கத்தில் வெளிவந்த 'டன்கி' [Dunki] படம் தேர்வாகியுள்ளது

    ◆துணைக்கண்டத்தின் [இந்தியா] சிறந்த படமாக [Best Film from the Subcontinent] - 'தி ரெட் சூட்கேஸ்' படம் தேர்வாகியுள்ளது

    ◆பீபுள்ஸ் சாய்ஸ் படமாக [People's Choice] ஆலியா பட், ரன்வீர் சிங் நடித்த 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் [Rocky Aur Rani Kii Prem Kahaani] தேர்வாகியுள்ளது 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் நிதிஸ் குமார் சதம் விளாசி அசத்தினார்.
    • 2 ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் இன்னும் மீதமுள்ளதால் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 8 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய இந்திய வீரர் நிதிஸ் குமார் சதம் விளாசி அசத்தினார்.

    இதனையடுத்து மெல்போர்ன் மைதானத்தில் உள்ள HONOURS BOARD-ல் நிதிஷ் குமார் பெயர் இடம் பெற்றது.

    மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட் எடுக்கும் வெளிநாட்டு வீரர்களை கௌரவிக்கும் விதமாக இப்பலகையில் அவர்களின் பெயர்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக மெல்போர்ன் டெஸ்டில் சதமடித்து அசத்திய நிதிஷ் குமாருக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
    • இந்த டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்களில் 2.99 லட்சம் ரசிகர்கள் மைதானத்தில் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் இன்னும் மீதமுள்ளதால் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    மெல்போர்னில் நடந்து வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்களில் 2.99 லட்சம் ரசிகர்கள் மைதானத்தில் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர். பாக்சிங் டே டெஸ்ட் வரலாற்றில் இத்தனை ரசிகர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ×