search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை"

    • இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் உயர் பதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்தனர்.
    • தவ்பீக் மற்றும் அப்துல் தமீம் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனையிட சென்றனர்.

    சேலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 2019-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி தவ்பீக், அப்துல் தமீம் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் உயர் பதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒருங்கிணைந்த சோதனை குழுவினர் சிறையில் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினர். அதன்படி தவ்பீக் மற்றும் அப்துல் தமீம் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனையிட சென்றனர். அப்போது அவர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வார்டன்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அந்த அறை முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பேரையும் வேறு சிறைக்கு மாற்ற சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வர்தயாள் உத்தரவிட்டார். அதன்படி தவ்பீக் கடலூர் சிறைக்கும், அப்துல் தமீம் கோவை மத்திய சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர்.

    ×