search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏஐ தொழிநுட்பம்"

    • மதிப்பெண் போடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் எழுகிறது.
    • தேர்வு தாளில் கிறுக்குவதை தடுக்க ஏ ஐ தொழில்நுட்பம்.

    விடைத்தால் திருத்தும் பணியில் ஈடுபடும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு அவற்றை அடையாளம் காண்பதில் குழப்பம் அடைகின்றனர்.

    இந்த கேள்விக்கு மதிப்பெண் போடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் அவர்களுக்குள் ஏற்படுகிறது.

    இது போன்ற மாணவர்கள் தேர்வு தாளில் கிறுக்கி வைத்து மதிப்பெண் பெறுவதை தடுக்க ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் விடைத்தால் திருத்தும் பரிசோதனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:-

    ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு எந்திரம் மூலம் விடைத்தாள்களை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சரியான பதில்கள் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ஏ ஐ தொழில்நுட்ப எந்திரத்திற்கு அனுப்பப்படும்.

    செயற்கை நுண்ணறிவு நகலை ஆய்வு செய்து பொருத்தமற்ற பதில்களை கண்டுபிடித்து அது பேராசிரியர்களை எச்சரிக்கும். ஒவ்வொரு மாணவரின் கையெழுத்தும் வித்தியாசமாக இருக்கும்.

    ஏஐ தொழிநுட்பத்தில் இது தொடர்பாக பல்வேறு திட்டங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.

    தேர்வுத்தாள் திருத்தம் பேராசிரியர்களுக்கு ஒரு ஏஐ தொழில்நுட்ப கருவி வழங்கப்படும்.

    இதன் மூலம் அவர்கள் விடைத்தாளில் உள்ள பிழைகளை கண்டறிந்து சரியான மதிப்பெண் தர முடியும். இதற்கென பிரத்தியேக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு பாட அறிவு தொடர்பான விதிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    ஏஐ தொழில்நுட்பத்தில் விடைத்தாள்களை திருத்துவது குறித்து பேராசிரியர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் விடைத்தாள்களை திருத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த தொழில்நுட்பத்தின் செயல் திறனை சரியாக பயன்படுத்திய பிறகு விரிவான முடிவுகள் செய்து அனைத்து பல்கலைக்கழகங்களில் செயல்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது.

    இதனை மாநில திட்ட குழு முடிவு செய்யும். ஏஐ தொழில்நுட்பத்தால் கல்லூரி விடைத்தாள்களை திருத்த ஒரு எந்திரன் வந்துவிட்டது.

    இதன் மூலம் தேர்வில் ஏதாவது எழுதி கிறுக்கி வைத்தால் மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற மாணவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. சரியான விடைக்கு மட்டுமே மதிப்பெண் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×