search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூடியூபர் சுபாங்கர் மிஸ்ரா"

    • ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று ஒருமுறை நான் டோனியிடம் கேட்டேன்.
    • இந்த விளையாட்டு மகிழ்ச்சியை தரவில்லை என்றால் அப்போது ஓய்வு பெறுவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

    காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்து வந்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் அவர் இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அண்மையில் முகமது ஷமி, யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    அவ்வகையில் எம்.எஸ்.டோனியின் ஓய்வு முடிவு குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். "ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று ஒருமுறை நான் டோனியிடம் கேட்டேன். அதற்கு அவர், இந்த விளையாட்டு உனக்கு சோர்வை தந்தால் ஓய்வு பெறலாம் அல்லது அணியிலிருந்து நீ ஓரம் கட்டப்பட்டால் ஓய்வு பெறலாம். ஆனால் இறுதியாக உனக்கு இந்த விளையாட்டு மகிழ்ச்சியை தரவில்லை என்றால் அப்போது ஓய்வு பெறுவதுதான் சரியான முடிவாக இருக்கும்" என்று டோனி கூறியதாக ஷமி தெரிவித்தார்.

    2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி 2020 ஆம் ஆண்டில் சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் டோனி ஓய்வு அறிவித்தது அந்த சமயத்தில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும்.
    • நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்.

    ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.

    வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி 55 விக்கெட்களை முகமது ஷமி வீழ்த்தியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் அவர் உள்ளார்.

    ஆனால், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் காயம் காரணமாக முகமது ஷமி இடம்பெறவில்லை.

    இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு முகமது ஷமி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

    அதில், 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் முதல் சிலபோட்டிகளில் நான் விளையாடவில்லை. அடுத்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்களையும், பின் ஐந்து மற்றும் 4 என அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட்களை எடுத்தேன். 2023 ஆம் ஆண்டும் இதே போன்று நடந்தது. முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. பின் அதிகமான விக்கெட்களை வீழ்த்தினேன்.

    நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு அணிக்கும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் தேவைதான். மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளேன். என்னிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள். என்னிடம் அதற்கான கேள்விகளும் இல்லை, பதில்களும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும். நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்" என தெரிவித்துள்ளார்.

    2019 உலகக் கோப்பையில் விராட் கோலியின் தலைமையில் முகமது ஷமி விளையாடினார். அப்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.

    ×