search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு மனைப்பட்டா"

    • நீலாங்கரையில் இன்று காலை நடைபெற்றது.
    • திராவிட மாடல் அரசு எப்போதும் உங்களுடன் துணை நிற்கும்.

    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 2 ஆயிரத்து 7 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நீலாங்கரையில் இன்று காலை நடைபெற்றது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சோழிங்கநல்லூர் பகுதி யைசேர்ந்த 2 ஆயிரம் பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குகிற இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு உங்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை அளித்து கொண்டு இருக்கிறது.

    நமது அரசு ஏழை, எளிய, அடித்தட்டு, நடுத்தர மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

    தி.மு.க.வும், திராவிட மாடல் அரசும் எப்போதும் உங்களுடன் துணை நிற்கும். அதே போல் நீங்களும் கழகத்துக்கும், நம்முடைய அரசுக்கும் பக்கபலமாக இருந்து வரு கிறீர்கள்.

    தேர்தல் சமயத்தில் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தேன். சென்னையில் பட்டா பிரச்சனை பல வருடமாக இருக்கிறது. அப்படி பட்டா கிடைக்காமல இருப்பவர்களுக்கு நிச்சயம் பட்டா வழங்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தேன்.

    தேர்தல் முடிவுகள் வந்து 2 மாதங்கள் தான் ஆகிறது. இந்த 2 மாதத்திற்குள் முதலமைச்சர் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்து உள்ளார்.

    பல வருடமாக பட்டா இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது பட்டா கிடைத்து உள்ளது. திராவிட மாடல் அரசு இன்றைக்கு பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டங்கள், சாதனைகளை எல்லாம் நீங்கள் அத்தனை பேருக்கும் எடுத்து சொல்ல வேண்டும். உங்களுக்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்க தயாராக இருக்கிறது. எங்களை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன், மா.சுப்பிரமணி யன், அரவிந்த்ரமேஷ் எம்.எல்.ஏ, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், எழிலன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், 15-வது மண்டலகுழு தலைவரும், பகுதி செயலாளருமான மதியழகன், பாலவாக்கம் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×