search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகைசால் விருது"

    • மூத்த தமிழறிஞர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
    • தாரகை கத்பர்ட், வட்டார தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரிலான விருது கடந்த 2021- ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் மூத்த தமிழறிஞர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இத்துடன் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


    இந்த வருடத்திற்கான தகைசால் விருது பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் அவர்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பைக் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தேன். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட், வட்டார தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



    தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் சுசீந்திரம் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்தோம்.

    • குமரி அனந்தன், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • விருதுடன் ரூ,10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவின்போது அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ,10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

    இதுதொடர்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-


    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ் இலக்கியவாதியுமான எனது பெரியப்பா குமரி அனந்தன் அவர்களுக்கு அவர் சேவையை பாராட்டி தகைசால் விருதினை வழங்க முடிவு செய்த தமிழக அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்

    ×