search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேத விவரங்கள்"

    • நிபுணர் குழுவினர் சேத விவரங்களை மதிப்பீடு செய்ய உள்ளனர்.
    • கட்டிட சேத விவரங்களை மதிப்பீடு செய்ய உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கி ருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    மேலும் நூற்றுக்கணக் கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் வீடு, நகைகள், பணம், சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துவிட்டனர். இந்த நிலச்ச ரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் அழிந்துவிட்டன.

    சேதமதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்று கருதப்படுகிறது. நிலச்ச ரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்காக அரசுக்கு ரூ1,000 கோடி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் வழங்கும் நிவாரண நிதி மற்றும் அரசு ஊழியர்கள் வழங்கும் சம்பள தொகை மூலமாக ரூ500 கோடி வரை கிடைக்கும் என அரசு கருதுகிறது. மீதி தொகையை எவ்வாறு திரட்டுவது? என்று அரசு ஆலோ சித்து வருகிறது.

    வயநாடு நிலச்சரிவில் காணாமல்போனவர்களை தேடும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இதையடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் மறு வாழ்வு பணிகளை அரசு மேற்கொள்ளும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டி ருக்கிறது.

    நிலச்சரிவால் பாதிக் கப்பட் பகுதிகளில் கட்டிடங்களின் சேதம் குறித்து மதிப்பீடு செய்வ தற்காக நிபுணர்கள் குழுவை அரசு நியமனம் செய்துள்ளது. 10 அதிகாரிகள் அடங்கிய அந்த குழுவில் சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் புவி யியலாளர்கள், உள்ளாட்சி சிவில் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் நில வருவாய்த்ததுறை பிரதிநிதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டிட சேத விவரங்களை மதிப்பீடு செய்ய உள்ளனர். அவர்கள் பகுதியளவு மற்றும் முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகளை பார்வையிடுவார்கள். மேலும் கடைகள், வணிக கட்டிடங்கள் மற்றும் அலுவலக கட்டிடங்களையும் ஆய்வு செய்வார்கள்.

    ஒரு வாரத்திற்குள் சேத மதிப்பீடு தொடர்பான அறிக்கையை சர்ப்பிக்குமாறு நிபுணர் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×