search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம பொதுமக்கள்"

    • வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்கின்றன.
    • பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையின் நடுவே கம்பீரமாக நின்றது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்கின்றன. இதில் குறிப்பாக இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது வனப்பகுதி உள்ளே பெட்டமுகிலாளம் மற்றும் கொடகரை ஆகிய மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் நிற்பது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் இன்று அய்யூர் வன அலுவலகத்தில் இருந்து பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையின் நடுவே கம்பீரமாக நின்றது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் காட்டு யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் காட்டு யானையிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து வந்த வழியில் திரும்பி சென்றனர். சாலையை மறித்து நின்ற காட்டு யானையால் மலை கிராமங்களுக்கு சென்ற பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    பின்னர் நீண்ட நேரத்திற்கு பின் அந்த ஒற்றை காட்டு யானை சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட கிராம மக்கள் தங்களது ஊர்களுக்கு அந்த சாலை வழியாக சென்றனர். தினந்தோறும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதும், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கிராம மக்கள் சந்திப்பதும் வாடிக்கையாக உள்ளது.

    ×