search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சி"

    • வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி.
    • செப்டம்பர் 1-ந்தேதி பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடக்கிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மேலும் செப்டம்பர் 1-ந்தேதி நெல்கட்டும்செவல் கிராமத்தில் வீரவணக்க நிகழ்ச்சி நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளூர் மற்றும் தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டத்தில் இருந்தும் வருவார்கள்.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் 18-ந்தேதி (இன்று) மாலை 6 மணி முதல் 21-ந்தேதி காலை 10 மணி வரைக்கும், 30-ந்தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ந்தேதி காலை 10 மணிவரை ஊரடங்கு தடை உத்தரவு அமலில் இருக்கும்.

    இந்தநாளில் அனைவரும் கூட்டமாக செல்லாமல், 4 பேர் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×