search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ருத்ரகோடிதலம்"

    • பறவைகள் உண்டு எஞ்சிய உணவை தேசிகர் குடும்பத்தை சேர்ந்தவர் கொண்டு வந்து மண்டபத்தில் வைப்பார்.
    • முன்னமே மண்டபத்தில் வைத்திருந்த சோற்றோடு, கொண்டு வந்த சோற்றைக் கொட்டிக் கலந்து விடுவார்.

    மலையேறி உச்சியை அடைந்ததும் இரு வழிகள் பிரிகின்றன. ஒன்று கோவிலுக்குச் செல்கிறது.

    மற்றொன்று கழுகுகள் உணவு கொள்ளும் காட்சியைக் காணச் செல்கிறது.

    இவ்வழி ஓர் மண்டபத்தருகே நின்று விடுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் இம்மலைக்கு இருகழுகுகள் வந்து உணவு சாப்பிட்டு செல்லும்.

    அதை காண மண்டபத்திலும், அதைச் சுற்றியும் பன்னூறுக்கு மேற்பட்ட மக்கள் கொளுத்தும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நான்கு புறமும் சுற்றி சுற்றி வானத்தை நோக்கியபடி காத்திருப்பார்கள்.

    11 மணியிலிருந்து 1 மணிக்குள் கழுகுகள் வரும் அதற்கு ஏற்ப ஒருவர் தூய்மையாக அகன்ற ஓர் தட்டில் நெய் கலந்த உணவை வைத்துக் கொண்டு தயாராக இருப்பார்.

    உச்சிப் பொழுதுக்குச் சற்று முந்தியும் பிந்தியும் இரண்டு கழுகுகள் வந்து தமக்கென்று காத்திருக்கும் உணவில் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிடும்.

    பிறகு வான்வழியே சென்று விடும். அதைக் கண்டதும் மக்கள் கூட்டமும் கலைந்துவிடும்.

    பறவைகள் உண்டு எஞ்சிய உணவை தேசிகர் குடும்பத்தை சேர்ந்தவர் கொண்டு வந்து மண்டபத்தில் வைப்பார்.

    முன்னமே மண்டபத்தில் வைத்திருந்த சோற்றோடு, கொண்டு வந்த சோற்றைக் கொட்டிக் கலந்து விடுவார். அவ் உணவை மக்களுக்கு வழங்குவார்.

    • பல புவனங்களையும் துன்புறுத்தி வந்த அரக்கர்களை அழிக்க சிவபெருமான் தம் மேனியினின்று ருத்திர கோடியரைத் தோற்றுவித்தார்.
    • அவர்கள் சிவபெருமான் தோற்றத்துடன் விளங்கினர்.

    ஆதியில் பரமசிவனாரிடம் இருந்து தோன்றிய வேதங்கள் கயிலாய மலையை அடைந்து தாங்கள் தேவர்கள் பிரம்மன் மற்றும் முனிவர்கள் பலரால் பலவாறு துன்பப்பட்டு வருந்துவதாகவும் பூவுலகில் தாங்கள் தங்கள் ஆறங்கங்களோடு மலையாக இருக்கவும் அம்மலையின் கொழுந்துபோன்று ஈசனே எழுந்தருளும்படியும் வேண்டித் துதித்தன.

    அவ்வாறே பரமசிவம் அருள்புரிய வேதங்கள் தங்கள் சகல பிரிவுகளுடன் மலையாயின.

    அம்மலையின் உச்சியில் சிவபெருமான் மலைக் கொழுந்தாய் எழுந்தருளினார். அந்த இடமே திருக்கழுக்குன்றம் ஆகும்.

    ருத்திர கோடியர் வரலாறு

    பல புவனங்களையும் துன்புறுத்தி வந்த அரக்கர்களை அழிக்க சிவபெருமான் தம் மேனியினின்று ருத்திர கோடியரைத் தோற்றுவித்தார்.

    அவர்கள் சிவபெருமான் தோற்றத்துடன் விளங்கினர். அவர்கள் சிவபெருமான் கட்டளையிட்டருளியபடி அரக்கர்களை அழித்து அண்டங்களைக் காத்து வந்தனர்.

    திருமால் தேவர்களுக்குப் பாற்கடலைக் கடைந்து அமுதம் தருதற்கு மத்தாக மந்திரகிரியைப் பெயர்த்தனர்.

    பெயர்த்த பாதாளத்திலிருந்து பலமுகம் பல வடிவங்களுடன் அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் எங்கும் பரவி யாவரையும் துன்புறுத்தினர்.

    தேவர்கள் அஞ்சி சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமான் ருத்திரகோடியரை அழைத்து அரக்கர்களைக் கொன்று ஒழிக்குமாறு கட்டளையிட்டருளினார்.

    ருத்திர கோடியர் சிவபெருமானைப் பணிந்து 'பெருமானே! இவர்கள் இப்பிறப்பில் அரக்கர்களாயினும் முற்பிறவியில் பெருந்தவம் செய்தவர்கள்.

    இவர்களைக் கொல்வதால் உண்டாகும் பாவத்திற்கு அஞ்சுகிறோம்' என்றார்.

    பரமசிவனார் 'இவர்களை கொல்லும் பாவம் வேதகிரியைப் பூசித்தால் நீங்கும்' என்றருளிச் செய்தார்.

    உருத்திர கோடியர் அரக்கர்களை அழித்து வேதகிரித் தலமான திருக்கழுக்குன்றத்தை நாடிவந்தனர்.

    பரமசிவம் அவர்கள் முன் கோடி சிவலிங்கங்களாக இருந்தனர். உருத்திர கோடியர் மகிழ்ந்து வணங்கி நன்னீராலும் மலர்களாலும் பூசித்தார்கள்.

    பரமசிவனார் ரிஷபம் மீது பார்வதி தேவியாருடன் காட்சி தந்தனர்.

    உருத்திரகோடியர் இறைவனை வணங்கி 'இறைவா! இந்த மலையும் தலமும் எங்கள் பெயருடன் விளங்க அருள்செய்ய வேண்டும்' என்றனர்.

    சிவபெருமான் 'இந்த வேதகிரி உருத்திரகோடிகிரி என்றும் இத்தலம் உருத்திர கோடித்தலம் என்றும் எம் பெயர் உருத்திரகோட்டீசுவரர் என்றும் பார்வதி தேவியாரின் பெயர் பெண்ணினல்லாள் எனும் உருத்திர கோட்டீசுவரி என்றும் தீர்த்தம் உருத்திர கோடி தீர்த்தம் என்றும் வழங்கப்பெறும்' என்றருளினார்.

    அவர்கள் பாவம் நீங்கித் தம்பதம் எய்தினர். அன்றுமுதல் திருக்கழுக்குன்றம் பகுதிக்கு ருத்திரகோடித்தலம் எனும் பெயருண்டாகிறது.

    ×