search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளை மாட்டு சிலை"

    • மக்கள் நடமாட்டம் 24 மணி நேரமும் இருந்து கொண்டே உள்ளது.
    • வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தவாறு சென்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு ரெயில் நிலையம் அருகே காளை மாட்டு சிலை ரவுண்டானா உள்ளது. இந்த பகுதி ஈரோட்டின் மைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு எப்போது பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த வழியாக கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பகுதியாக அமைந்துள்ளதால் பஸ்கள், கார், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது.

    அதே போல் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம், கடை வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வானங்கள் பெரும்பாலும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறது. கொல்லம் பாளையம், சோலார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் செல்லும் மக்கள் காளை மாட்டு சிலை வழியாக சென்று வருகிறார்கள். இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் 24 மணி நேரமும் இருந்து கொண்டே உள்ளது.

    மேலும் இந்த ரவுண்டானா பகுதியில் தமிழர்களின் வீர விளையாட்டை குறிக்கக்கூடிய ஜல்லிக்கட்டை நினைவு கூறும் வகையில் காளை மாட்டை வாலிபர் அடக்குவது போன்று சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிலை ஈரோட்டின் மையப்பகுதியில் மிகவும் கம்பீரமாக இருந்து வருகிறது. இந்த சிலை ஈரோட்டின் நினைவு சின்னமாகவும் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காளை மாட்டை அடக்கும் இந்த சிலையை முதியவர் ஒருவர் கயிறு கட்டி இழுத்து கொண்டு இருந்தார். தொடர்ந்து அவர் காளையை அடக்குபவரிடம் அவர் பேசுவது போன்றும் அவர் தொடர்ந்து காளை மாட்டு சிலையை கயிறு கட்டி சுற்றி கொண்டே இருந்தார்.

    இந்த வீடியோ தற்போது வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த பொதுமக்கள் ஈரோட்டில் இருக்கும் காளை மாட்டின் உரிமையாளர் கிடைத்து விட்டார் என்றது போன்ற பதிவிட்டு வருகின்றனர்.

    அந்த வீடியோவில் முதியவர் காளையை அடக்குபவரிடம் பேசுவது போன்றும்காளை மாட்டை அடக்கியதற்கு பாராட்டு தெரிவிப்பது போன்றும் காட்சி பதிவாகியுள்ளது.

    அந்த முதியவர் மது போதையில் இருந்தாரா? என தெரியவில்லை. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தவாறு சென்றனர். இதையடுத்து அந்த முதியவர் அங்கு இருந்து சென்று விட்டார்.

    ×