search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓநாய்கள்"

    • உ.பி.யில் ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
    • உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    உத்தர பிரதேசம் மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஓநாய்களை கூண்டு வைத்து பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன. மயக்க மருத்து கொடுத்து ஓநாய்களை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அது பயனளிக்காதநிலையில் அவற்றை சுட்டு கொல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசை விட ஓநாய்கள் அதி புத்திசாலிகளாக இருப்பதால் அவற்றை பிடிப்பது எளிதான காரியமில்லை அம்மாநில பெண் அமைச்சர் பேபி ராணி மவுரியா பேசியுள்ள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "பல குழுக்கள் அமைக்கப்பட்டு ஓநாய்கள் தேடப்பட்டு வருகின்றன. நாங்கள் அவற்றைப் பிடித்து விடுவோம். ஆனால் ஓநாய்கள் அரசாங்கத்தை விட, புத்திசாலித்தனமாக இருப்பதால் பிடிப்பதற்கு நேரம் எடுக்கிறது. வனத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தேடுதலை மேற்பார்வையிட்டு வருகிறார்"என்று தெரிவித்துள்ளார். 

    • ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
    • துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஓநாய்களை கூண்டு வைத்து பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன. மயக்க மருத்து கொடுத்து ஓநாய்களை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அது பயனளிக்காதநிலையில் அவற்றை சுட்டு கொல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • 20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன.

    உத்தர பிரதேசத்தின் இந்தோ-நேபாள எல்லை மாவட்டமான பஹ்ரைச்சில் உள்ள மஹாசி தொகுதியின் 30 கிராமங்களில் ஓநாய்கள் கூட்டத்தால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளனர்.

    ஓநாய்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால், இப்பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கமின்றி தவிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் காவல் காத்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

    இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வனத்துறையினர், தெர்மல் ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களுடன் ஓநாய்களை தேடிவருகின்றனர்.

    இது தொடர்பாக பஹ்ரைச் மாவட்டத்தின் வனத்துறை அதிகாரி அஜீத் பிரதாப் சிங் கூறுகையில், "ஜூலை 17 அன்று ஓநாய் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக முதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

    தெர்மல் ட்ரோன்களின் உதவியுடன் ஓநாய்களின் கூட்டத்தை பிடிக்க அதிகாரிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். 6 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓநாய்கள் வழித்தடங்களில் 4 பொறிகள் வைத்துள்ளோம்" என்று கூறினார்.

    வன அதிகாரிகளின் மதிப்பீட்டில், மனிதர்களை மட்டுமே தாக்கும் 5-6 ஓநாய்கள் இப்பகுதியில் உள்ளன.

    20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன. 2004-ம் ஆண்டில், ஓநாய்களின் வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 32 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2020-ம் ஆண்டிலும் ஓநாய் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.

    குழந்தைகளுடன் குடும்பமாக திறந்த வெளியில் தூங்க வேண்டாம் என அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    ×