search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதி சங்கரர்"

    • கயிலாயத்தில் ஆதிசங்கரர், சிவபெருமானை வணங்கி பொங்கிப் பொலியும் பூரண அருளோடு புறப்பட்டார்.
    • அப்போது சங்கரரிடம் ஐந்து ஸ்படிகலிங்கங்களை... உலக நன்மைக்காக இறைவன் அருளினார்.

    கயிலாயத்தில் ஆதிசங்கரர், சிவபெருமானை வணங்கி பொங்கிப் பொலியும் பூரண அருளோடு புறப்பட்டார்.

    அப்போது சங்கரரிடம் ஐந்து ஸ்படிகலிங்கங்களை... உலக நன்மைக்காக இறைவன் அருளினார்.

    சங்கரர் அந்த 5 லிங்கங்களில் முக்திலிங்கத்தையும் பதரிகாசிரமத்திலும், நேபாளத்தில் நீலகண்ட சேத்திரத்தில் வரலிங்கத்தையும்,

    மோட்சலிங்கத்தைச் சிதம்பரத்திலும், போகலிங்கத்தைச் சிருங்கேரியிலும், யோகலிங்கத்தைக் காஞ்சீபுரத்திலும் பிரஷ்டை செய்தார்.

    ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து கடமைகளையும் ஆதிசங்கரர் தமது நூல்களில் தொகுத்து அளித்துள்ளார்.

    விநாயகர், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு,சூரியன் ஆகிய 6 தெய்வங்களின் வழிபடும் முறையை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தியதால் ஆதிசங்கரருக்கு, "ஷண்மதஸ்தாபசாச்சாரியார்" என்ற பெயர் ஏற்பட்டது.

    விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை அனைத்து கடவுள்கள் மீதும் சங்கரர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அந்த பாடல்கள் அனைத்தும் எளிய முறையில், உயர்வான தத்துவங்களைக் கொண்டதாக உள்ளன.

    • தன் பரம குரு கௌட பாதர் இயற்றிய மாண்டூக்ய காரிகாவிற்கு ஒரு விளக்க நூல் இயற்றியுள்ளார்.
    • உபநிஷத்துக்களில் உருவில் சிறியதாக விருப்பினும் ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்துள்ளது இது.

    ஆதிசங்கரர் ஸ்தோத்திரங்கள் மற்றும் வேதாந்த நூல்கள் ஏராளமாக ஏழுதிஉள்ளார்.

    முக்கிய தசோபநிஷத்துக்களுடன் ச்வேதாச்வதரோபநிஷத், ந்ருஸிம்ஹ பூர்வ தாபனியோபநிஷத், ந்ருஸிம்ஹோத்தர தாபனியோபநிஷத் இவற்றிற்கும் விளக்க உரை எழுதியுள்ளார்.

    தன் பரம குரு கௌட பாதர் இயற்றிய மாண்டூக்ய காரிகாவிற்கு ஒரு விளக்க நூல் இயற்றியுள்ளார்.

    உபநிஷத்துக்களில் உருவில் சிறியதாக விருப்பினும் ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்துள்ளது இது.

    உபநிஷத்தின் முக்கிய பாகத்தில் 12 வாக்கியங்கள் தான் இடம் பெறுகின்றது இது. பிரணவத்தின் பொருளையும் சக்தியையு-ம் விளக்குகிறது.

    இவற்றைத் தவிர வியாஸரின் ப்ரஹ்ம சூத்திரத்திற்கு அரிய விளக்க உரை எழுதியுள்ளார்.

    மஹாபாரதத்தில் வரும் (1) ஸனத் ஸ§ஜாதீயம், (2) பகவத்கீதை (3) விஷ்ணு ஸஹஸ்ர நாமம் இம்மூன்று நூல்களுக்கும் சங்கரர் பாஷ்யம் எழுதியுள்ளார்.

    விவேக சூடாமணி, உபதேச ஸாஹஸ்ரீ, ஆத்ம போதம் போன்ற பிரகரணக்ரந்தங்களையும் இயற்றியுள்ளார்.

    வேதாந்த தத்துவத்தை விளக்க பல க்ரந்தங்களை இயற்றியுள்ளார். இவ்வாறு ஸ்ரீ சங்கரர் மக்கள் அக்ஞான இருளிலிருந்து ஞான ஒளிபெற பரம உபகாரம் செய்துள்ளார்.

    • ஆதி சங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவினார்.
    • அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார்.

    ஆதி சங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவி, அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார்.

    முதல் பீடாதிபதி திசை பீடம் மகாவாக்கியம் வேதம்

    பத்மபாதர் கிழக்கு கோவர்தன மடம் பிரக்ஞானம் பிரம்மம் ரிக் வேதம்

    சுரேஷ்வரர் தெற்கு சிருங்கேரி சாரதா மடம் அஹம் பிரம்மாஸ்மி யசுர் வேதம்

    அஸ்தாமலகர் மேற்கு துவாரகை காளிகா மடம் தத்துவமசி சாம வேதம்

    தோடகர் வடக்கு ஜோஷி மடம் அயமாத்மா பிரம்மம் அதர்வண வேதம்

    நிர்வாணாஷ்டகம்

    முதன்மைக் கட்டுரை: நிர்வாணாஷ்டகம்

    நிர்வாணாஷ்டகம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.

    இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம்ஆகியற்றை மறுத்து இறுதியில் பிரம்மமே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.

    ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.

    • கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று.
    • இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.

    தொன்று தொட்டு நிலவி வந்த

    சிவனை வழிபடும் சைவம்,

    திருமாலை வழிபடும் வைணவம்,

    சக்தியை வழிபடும் சாக்தம்,

    விநாயகரை வழிபடும் கணாபத்தியம்,

    முருகனை வழிபடும் கௌமாரம்,

    சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார்.

    அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.

    வாதங்கள்

    கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.

    கர்ம மீமாம்ஸா எனப்படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர்.

    மந்தன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர். சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மந்தன மிஸ்ரர், துறவறம் ஏற்று சுரேஷ்வரர் என்ற பெயருடன், சங்கரரின் சீடரானார்.

    • இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.
    • இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

    துறவறம்

    தமது எட்டாம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

    மனீஷா பஞ்சகம்

    தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற போது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.

    அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர்.

    அப்போது அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுந்து பணிகிறார் என சங்கர விஜயம் கூறுகின்றது.

    உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார்.

    இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.

    இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

    • ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது.
    • பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.

    பொதுவாக ஆத்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது.

    இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது.

    இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது.

    பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது.

    இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான்.

    நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது.

    நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது.

    நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிருக்கிறது.

    இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்தை தவிர வேறெந்த பொருளும் கிடையாது.

    உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன.

    ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் உடனடி பிரச்னைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது.

    அது தொலைவில் உள்ளது. தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார்.

    ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது.

    பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.

    • காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.
    • தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.

    சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி

    என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார்.

    காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.

    தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.

    காலம்

    கி.மு நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினை பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.

    • அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.
    • மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது.

    ஆதிசங்கரர், ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.

    இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.

    இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.

    மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது.

    சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

    ×