search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராட்டிரா"

    • சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்கு காசு கொடுக்க UPI QR code ஸ்கெனரை எடுத்து வரும்படி வெயிட்டரிடம் கூறியுள்ளனர்.
    • கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குளேயே அடைத்து வைத்துள்ளனர்

    மகாராஷ்டிராவில் சாப்பிட்ட உணவுக்குக் காசு கேட்ட வெயிட்டரை காரில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு தரதரவென இழுத்து சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் பீட்[Beed] மாவட்டத்தில் மெஹ்கர் பந்த்ராபூர் பால்கி நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் காரில் வந்த மூவர் உணவருந்தியுள்ளனர். சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்கு காசு கொடுக்க UPI QR code ஸ்கெனரை எடுத்து வரும்படி வெயிட்டரிடம் கூறியுள்ளனர்.

    அவர் வருவதற்குள் நைசாக அங்கிருந்து நழுவிய மூவரும் தங்களின் காரில் ஏறி தப்ப முயன்றனர். அவர்கள் காரில் ஏறும் சமயத்தில் அவர்களை பில்லுக்கு காசு கேட்டு அந்த வெயிட்டர் தடுக்க முயன்றுள்ளார். காரின் பக்கவாட்டு கதவு வழியே வெயிட்டரின் கையை பிடித்தபடி சுமார் 1 கிலோமீட்டர் அவரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 1 கிலோமீட்டருக்கு வெயிட்டரை இழுத்துசென்ற அவர்கள் காரை நிறுத்திவிட்டு அவரை அடித்துத் துன்புறுத்தி அவரின் பாக்கெட்டில் இருந்த 11,500 ரூபாயை திருடிக்கொண்டு கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குளேயே அடைத்து வைத்து அதன்பின் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தப்பிச் சென்ற மூவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    • அவர்கள் அருகே உட்கார்ந்த பின்னர் வெளியே வந்ததும் எனக்கு குமட்டல் தான் வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் தனாஜி சாவந்த் தெரிவித்துள்ளார்.
    • தானாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவில்லை என்றால் நாங்கள் கூட்டணியை விட்டு நிச்சயம் வெளியேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் அஜித் பவார் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் அதிருப்தி அலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தில் சொந்த கூட்டணி அரசை எதிர்த்தே அஜித் பவார் தேசியவாத காங்கிரசார் போராட்டம் நடத்தியது அந்த விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இதற்கெல்லாம் மேலாக, மஹாயுதி கூட்டணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரசுடன் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா காட்சியைச் சேர்ந்த அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தனாஜி சாவந்த் தெரிவித்துள்ள கருத்து கூட்டணியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    தாராஷிவ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய தனாஜி சாவந்த், நான் அசல் சிவசேனா காரன், எனது மாணவப் பருவத்தில் இருந்தே தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசை எனக்கு பிடித்ததில்லை. இதுதான் உண்மை. அதனால் இப்போது சட்டமன்றத்தில் அஜித் பவாருடனும் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களுடன் அருகருகே அமருவதை கூட என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அருகே உட்கார்ந்த பின்னர் வெளியே வந்ததும் எனக்கு குமட்டல் தான் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    இந்த கருத்து அஜித் பவார் அணியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறுய்த்து பேசிய அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் உமேஷ் பாட்டீல் கூறுகையில், எங்களை அவமதிக்கும் வகையில் தானாஜி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதுபோன்ற பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருப்பதை விட, மஹாயுதி கூட்டணியை விட்டு வெளியேறுவதே சிறந்தது. தானாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவில்லை என்றால் நாங்கள் கூட்டணியை விட்டு நிச்சயம் வெளியேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

     

    இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அஜித் பவார், நான் மக்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன், விமர்சனங்களுக்கு செவி சாய்ப்பதில்லை. எனக்கு எதிராக பேசுபவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே சுயமரியாதையை இழந்து, இன்னும் அந்த கூட்டணியில் அஜித் பவார் நீடிக்க வேண்டுமா?' என சரத் பவார் அணி தேசியவாத காங்கிரசார் கேள்வி எழுப்பியுள்ளனர். 

    ×