search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐதராபாத் எப்சி"

    • ஐதராபாத் அணி தான் மோதிய 2 போட்டியிலும் தோற்றது.
    • சென்னை அணி ஐதராபாத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறுமா ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    இந்தியன் சூப்பர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இதில் 13 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தியது. சென்னையில் நடந்த 2-வது போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் முகமதன் அணியிடம் தோற்றது.

    சென்னையின் எப்.சி. 3-வது ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.யை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது.

    சென்னை அணி ஐதராபாத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐதராபாத் அணி தான் மோதிய 2 போட்டியிலும் தோற்றது. பெங்களூர் அணியிடம் 0-3 என்ற கணக்கிலும், பஞ்சாப்பில் 0-2 என்ற கணக்கிலும் தோற்றது. ஐதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பெங்களூர், பஞ்சாப் அணிகள் தாங்கள் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தலா 9 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. ஜாம்ஷெட்பூர் அணி 6 புள்ளியும், கோவா, கேரளா, கவுகாத்தி, முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் மோகன்பகான் தலா 3 புள்ளிகளும், சென்னையின் எப்.சி. ஒடிசா தலா 4 புள்ளியும் மும்பை ஒரு புள்ளியும் பெற்றுள்ளன. ஈஸ்ட் பெங்கால், ஐதராபாத் அணிகள் புள்ளி எதுவும் பெறவில்லை.

    ×