என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அன்னை தெரசா பல்கலைக்கழகம்"
- கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
- கவர்னர் வருகையை முன்னிட்டு 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக 56-வது பட்டமளிப்பு விழா இன்று மதியம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். பின்னர் கார் மூலம் காமராஜர் பல்கலைக்கழகம் சென்ற அவர் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் இன்று மாலை கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்.
இன்று இரவு கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கும் ஆர்.என்.ரவி நாளை காலை சங்கரா பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன் பின் நாளை காலை 11 மணிக்கு கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 31-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
அதன் பின் பிற்பகல் 3 மணிக்கு கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கவர்னர் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் 66 நக்சல் தடுப்பு பிரிவு படையினர் உள்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்