search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்கள் மோதல்"

    • மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தகராறு.
    • 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை.

    கோவை:

    தேனி மாவட்டம், பங்களா மேடு, பழைய டி.வி.எஸ். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராகுல் (வயது 18). இவர் நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கோவை சவுரி பாளையம் ரோட்டில் அண்ணா நகர் பகுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி வருகிறார்.

    இந்த நிலையில் ராகுலுக்கும், அதே கல்லூரியில் பி.பி.ஏ.முதலாம் ஆண்டு படிக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் ராகுல்காந்தி என்பவருக்கும் சீனியர்-ஜூனியர் பிரச்சனை தொடர்பாக மோதல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கல்லூரியில் கடந்த 19-ந் தேதி தனியார் டி.வி. நிகழ்ச்சி அங்கு உள்ள ஆடிட்டோரியத்தில் நடந்தது. அப்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படடது. சக மாணவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    நேற்று முன்தினம் ராகுல் அங்கு உள்ள டீக்கடை அருகில் நின்ற போது மீண்டும் ராகுல்காந்தி மற்றும் அவரது நண்பர்கள் அவரிடம் தகராறு செய்தனர். அப்போது ராகுலுடன் தங்கி படிக்கும் மாணவர் கதிர் என்பவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அப்போது ராகுல் காந்தியின் நண்பர்கள் அவரது மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு சென்றனர்.

    அந்த மோட்டார் சைக்கிளில் ஜிபிஎஸ் கருவி வசதி இருந்ததால் அதன் மூலம் மோட்டார் சைக்கிள் ராம நாதபுரம் ஒலம்பஸ், பாரதி நகரில் இருப்பதை கண்டு பிடித்து நேற்று மாலை கதிர் மற்றும் நண்பர்கள் மீண்டும் எடுத்துக் கொண்டு திரும்பி வந்தனர்.

    நேற்று மாலை ராகுல் காந்தி, தனது நண்பர்கள் சிலருடன் ராகுல் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கிருந்த ராகுல் மற்றும் கதிர் அவரது நண்பர்களை அடித்து உதைத்து கத்தியால் குத்தினர்.

    இதில் ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ் பாண்டியன், ரோஷன் ராஜா ஆகியோருக்கு தலை, கை, மார்பு, கழுத்து பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது.

    அதோடு நிற்காமல் ராகுல் காந்தி மற்றும் அவரது நண்பர்கள் அவர்கள் தங்கியிருந்த அறையையும் அடித்து நொறுக்கினர். அதன் பிறகு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதை பார்த்த மற்ற மாண வர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். காயம் அடைந்த மாண வர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகி ச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ராகுல் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர் ராகுல்காந்தி, கெவின் சதீஷ் மற்றும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×