search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி"

    சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்திருந்த மத்தியக் குழுவிடம், புதுச்சேரிக்கு போதுமான நிதியை வழங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியதாக துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதுவையில் 104.72 செ.மீ. மழை பெய்துள்ளது. நேற்று காலை 237.6 செ.மீ மழை பெய்துள்ளது. இது ஆண்டு சராசரியை விட 75 சதவீதம் அதிகமாகும். தொடர் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாமில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மதிய உணவு பரிமாறினார். மேலும்,  உணவின் தரத்தை அறிவதற்கு குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்தினார். மேலும் குழந்தைகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், எழுது பொருட்களை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் காரைக்கால் மக்களுக்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்கும் என உறுதி அளித்தார்.

    குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

    ‘சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்திருந்த மத்தியக் குழுவிடம், புதுச்சேரிக்கு போதுமான நிதியை வழங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியது. புதுச்சேரிக்கு போதுமான நிதியை உறுதி செய்வதற்காக, உள்துறை மந்திரி அமித் ஷாவையும் தொடர்பு கொண்டு பேசினேன். நிலைமையைச் சமாளிக்க போதுமான நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறேன். மழையினால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளும் சீரமைக்கப்படும்’ என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    இடைக்கால நிவாரணமாக புதுச்சேரிக்கு 300 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    கடும் வெயிலால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையில், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய வெப்பம்  நேரடியாக தாக்கும் வகையில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.



    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பகுதியில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது. தேனி மாவட்டம் பெரியார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தலா 3 செமீ மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பிளஸ்-1 தேர்வில் புதுச்சேரியில் 94.78 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 5.43 சதவீதம் அதிகமாகும். #Plus1Result
    புதுச்சேரி:

    கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வினை புதுவை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 6 ஆயிரத்து 949 மாணவர்களும், 7 ஆயிரத்து 906 மாணவிகளும் ஆக 14 ஆயிரத்து 855 பேர் எழுதினார்கள். அதில் 6 ஆயிரத்து 465 மாணவர்களும், 7 ஆயிரத்து 615 மாணவிகளுமாக 14 ஆயிரத்து 80 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    அதாவது 94.78 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 5.43 சதவீதம் அதிகம் ஆகும். அரசு பள்ளிகளை பொருத்தவரை புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 88.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 9.97 சதவீதம் அதிகம் ஆகும்.

    காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த 90.87 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 13.72 சதவீதம் அதிகமாகும். புதுச்சேரி பகுதியில் 5 அரசு பள்ளிகளும், 55 தனியார் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. காரைக்காலில் 4 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளது.

    வேதியியல், பொருளியல் பாடத்தில் தலா 2 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 5 பேரும், வணிகவியலில் ஒருவரும், கணக்குப்பதிவியலில் 18 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 9 பேரும், வணிக கணிதத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.  #Plus1Result

    தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Summer #Rain
    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே சூரியன் கோரதாண்டவம் ஆடி வருகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் சாலையில் தண்ணீர் கிடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கானல் நீர் தோன்றி மறைகிறது.



    அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடுமையான அவதியடைந்து வருகின்றனர். சாலையோரங்களில் உள்ள மரத்தின் அடியிலும், மேம்பாலங்களின் கீழேயும் வாகனங்களை நிறுத்தி அவர்கள் இளைப்பாறி செல்கின்றனர். கோடையின் வரவாக பெரும்பாலான வீடுகளில் மின் விசிறிகள் ஓய்வின்றி இயக்கப்படுகின்றன.

    இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அப்போது ஈரப்பத காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    தமிழகத்தின் மற்ற பகுதிகளை விடவும் நெல்லை, தேனி, கோவை மற்றும் வேலூரில் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் வெயிலின் அளவு தற்போது இருப்பதை விடவும் 2 டிகிரி செல்சியஸ் குறையும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #Summer #Rain
    பாராளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. #LokSabhaElection2019 #Tamilnadu #Puducherry #Polling
    சென்னை:

    தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

    வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.

    இந்த பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.



    தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் 18 பேரும், அங்குள்ள ஒரு சட்டசபை தொகுதியில் 8 பேரும் மல்லுக்கு நிற்கின்றனர்.

    கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் அல்லாத வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.  மதிய உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும்.

    இதற்காக தமிழகம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை பாராளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது அந்த தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் ‘விவிபாட்’ கருவியும் இணைக்கப்பட்டு இருக்கும். தான் அளித்த வாக்கு உரிய வேட்பாளருக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா? என்பதை வாக்காளர் அந்த கருவியில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

    ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர்கள் கையில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால், வாக்காளர்கள் வீட்டிலேயே செல்போனை வைத்துவிட்டு செல்வது நல்லது.

    மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தாலும், அதற்கு முன்பாக வாக்குப்பதிவு மையத்துக்குள் வாக்காளர்கள் வந்துவிட்டால், அவர்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப்படுவார்கள். கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு முதல் 2 மணி நேர இடைவெளியில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்படும்.

    ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டு ‘சீல்’ செய்யப்படும். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி, தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடைகிறது.

    மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து இருக்கிறது. மாநில போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    63,951 போலீசார், 27,400 துணை ராணுவ படை வீரர்கள், 13,882 ஊர்க்காவல் படையினர், 14 ஆயிரம் தேசிய மாணவர் படையினர், 20 ஆயிரம் ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் ராணுவத்தினர் என மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 233 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடி என்று கண்டறியப்பட்ட 8,293 ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்படுகிறார்கள்.

    இவர்கள் தவிர மாநிலம் முழுவதும் 1,500 வாகனங்களில் அதிவிரைவு படையினர் ரோந்து சுற்றி வருவார்கள்.

    மேலும், கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுவதுடன் வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சுமார் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். #LokSabhaElection2019 #Tamilnadu #Puducherry #Polling
    புதுச்சேரி முன்னாள் முதல் மந்திரியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #NRCongress #Rangasamy #ECFlyingSquad
    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.
    தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல் மந்திரியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    பணம் பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனை நடத்தினர்.

    நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று நடைபெறும் சோதனையால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #NRCongress #Rangasamy #ECFlyingSquad
    புதுச்சேரியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு மு.க.ஸ்டாலின், 3டி யால் மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்படுகிறது என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    புதுச்சேரி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து  பேசியதாவது:



    இந்த புதுச்சேரிக்கு நான் புதிதானவன் அல்ல. புதுச்சேரியும் எனக்கு புதிதல்ல. நான் இங்கு வாக்கு கேட்க மட்டும் வரவில்லை. இந்த மாநிலத்தில் புரட்சி முதல்வராக இருக்கும், இங்கு வந்திருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி கூறவும் தான்  வந்தேன். கழக தலைவர் கலைஞர் மறைவிற்கு பின்னர், அவரை கவுரவிக்கும் வகையில் பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

    கலைஞருக்கு வெண்கல சிலை, காரைக்காலில் முக்கிய சாலைக்கு கலைஞர் பெயர், மற்றும் பட்டமேற்படிப்பு மையத்திற்கு கலைஞர் பெயர் என  கூறினார். எனவே அவருக்கு என் நன்றியை இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தின் முன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுவை மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர் கலைஞர்.  

    ஆனால், அதிமுக - பாஜக கூட்டணியால் புதுச்சேரி மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. பாஜக தேர்தல் அறிக்கை பொய்யானது. எனவே தான், பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மோடியை மோசடி என்றே கூப்பிடுங்கள் என கூறி வருகிறேன்.  வெளிநாடு பிரதமர் போல் மோடி செயல்படுகிறார். மக்கள் விருப்பப்படி நீங்கள் நடக்க விரும்புவதாக கூறுகிறீர்கள். அப்படி செய்யவேண்டுமென்றால்  ஆட்சியை விட்டு விலகுங்கள். அதுவே மக்கள் விருப்பம்.

    நாட்டுக்கு மோடி, தமிழகத்திற்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண் பேடி ஆகிய 3 ‘டி’ யினால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்  என்பதே உண்மை.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MKStalin #DMK #LoksabhaElections2019  
    வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். #makkalneedhimaiamparty #PuducherryCandidate
    புதுச்சேரி:

    நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல், கடந்த 20ம் தேதி வெளியிட்டார். இதில் புதுச்சேரி தொகுதியில் டாக்டர். எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், புதுச்சேரி தொகுதி வேட்பாளர் டாக்டர். எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    புதுச்சேரியில் தனி மாநில அந்தஸ்து, கடன்களை தள்ளுபடி செய்தல் மற்றும் மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரியை இணைத்தல் ஆகியவை தான் முக்கிய பிரச்சனையாக உள்ளன. ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைத்து கட்சியினரும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என கூறி வருகின்றனர். ஆனால், பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுவது கூட இல்லை. எனக்கு ஒரு வாய்ப்பளித்தால், நிச்சயம் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.



    மேலும் எனது தேர்தல் பிரச்சாரத்தினை மார்ச் 27 அன்று கலாபேட்டிலிருந்து துவங்க உள்ளேன். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் ஏஎப்டி மைதானத்தில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்வார்.

    இவ்வாறு அவர் பேசினார். #makkalneedhimaiamparty #PuducherryCandidate
    பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது என்று ஆம்ஸ்ட்ராங் கூறியுள்ளார். #BSP

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தலைமையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார்.

    அவரிடம் தமிழகம்- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகவும். 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துமாறும் மாயாவதி கேட்டுக் கொண்டார்.

     


    மேலும் தமிழகத்தில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி தமிழகத்ல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் ஆம்ஸ்ட்ராங்கிடம் உறுதி அளித்தார்.

    இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பும் பகுஜன் சமாஜ் கட்சியினர் பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், துணை தலைவர் மணிவண்ணன், பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். #BSP

    கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதுச்சேரியில் அதிவிரைவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். #Puducherry #Narayanasamy #KiranBedi
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். ஆனால் கவர்னர் கிரண்பேடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார்.

    இதனால் இலவச அரிசி, தீபாவளி பொருட்கள், பொங்கல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்க முடியவில்லை. இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி இலவச பொருட்களை அனைத்து தரப்பினருக்கும் தர முடியாது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தர முடியும் என்று கூறி முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதனால் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரவிழாவில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்களிடம் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால் கவர்னர் கிரண்பேடி, 2 சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தினார்.



    மேலும் இருசக்கர வாகனத்தில் சிக்குபவர்களில் பலர் உயிரிழப்பதை தவிர்க்க கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டை போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வினரும் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

    இந்த நிலையில் மாகி சென்றிருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை புதுவை திரும்பினார். அவர் சட்டசபை வளாகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து வந்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி ஆகியோர் கருப்பு துண்டும், அமைச்சர் கமலக்கண்ணன் கருப்பு சட்டையும் அணிந்திருந்தனர்.



    பின்னர் அவர்கள் மதியம் 1.30 மணியளவில் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர். அவர்களுடன் காங்கிரஸ் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் கலந்து கொண்டனர். இதற்கிடையே சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கவர்னர் மாளிகையை சுற்றி போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் செய்தி காட்டுத்தீ போல பரவியது. எனவே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கவர்னர் மாளிகை முன்பு குவியத் தொடங்கினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே தி.மு.க.வினர் பாரதி பூங்காவின் உள்ளே சென்று கவர்னர் மாளிகை எதிரே உள்ள கேட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் கவர்னரின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.

     

    இதற்கிடையே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கவர்னர் மாளிகை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்ல தொடங்கினர். அந்த பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அவர்கள், “கவர்னரே வெளியே போ, மோடியே வெளியே போ. இது எங்கள் ஊர், எங்கள் மண், எங்களை ஆள நீ யார்?” என்று கோஷங்கள் எழுப்பினர். மேலும் போலீசாரின் தடுப்பை மீறி கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல முயற்சி செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் திடீரென நூதன போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சங்கு ஊதியும், மேளம் அடித்த படியும் கவர்னர் மாளிகையை சுற்றி வந்து போராட்டம் நடத்தினர். மேலும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். 

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் போராட்டத்தின் காரணமாக நேற்று கவர்னர் மாளிகை போராட்ட களமாக மாறியது.

    ஆளுநர் மாளிகை, தொடர்ந்து இரண்டாவது நாளாக முற்றுகையிடப்பட்டுள்ளதால், வெளியே செல்ல முடியவில்லை என கிரண்பேடி கூறியிருந்தார். இதையடுத்து, சென்னை, நெய்வேலியிலிருந்து புதுச்சேரிக்கு அதிவிரைவு அதிரடிப்படை, தொழில் பாதுகாப்புப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் தடுக்கும் வகையில், தலைமைச்செயலாளரின் கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. #Puducherry #Narayanasamy #KiranBedi 

    புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மணி நேரத்துக்கு மேலாக கவர்னர் மாளிகை வாசலில் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். #KiranBedi #Narayanaswamy #RajNivas #Protest
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 11-ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறை அமல்படுத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

    பொதுமக்கள் இந்த எச்சரிக்கையை புறக்கணித்ததால் 2 நாட்களில் 30 ஆயிரம் வாகன எண்கள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கோர்ட் மூலம் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது என்ற தகவல் பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ. உள்பட பலரும் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இதற்கிடையே அரசு பயணமாக மாகி சென்றிருந்த முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை புதுவைக்கு திரும்பினார். ஹெல்மெட் விவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியிருப்பதை நாராயணசாமி அறிந்தார். இதையடுத்து உடனடியாக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், காங்கிரஸ் முதல்-மந்திரி நாராயணசாமி மற்றும் அமைச்சர்களும் கருப்பு வேட்டி, சட்டை அணிந்தனர்.

    நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், 
    எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். 



    கவர்னர் மாளிகை அருகே சாலையில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர். அதை தாண்டி முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்களை செல்லவிடாமல் தடுத்ததால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை கவர்னர் மாளிகை வாசல் வரை அனுமதித்தனர். அங்கு முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கவர்னர் மாளிகை அருகே பரபரப்பான சூழ்நிலையும், பதட்டமும் ஏற்பட்டது. 

    போராட்டம் தொடர்பாக முதல்-மந்திரி நாராயணசாமி கூறுகையில், கவர்னர் கிரண்பேடி இங்கு பதவி ஏற்றதில் இருந்தே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்தார். எந்த பணியையும் செய்ய முடியவில்லை. கவர்னரால் புதுவை மாநிலமே ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள். எனவே, வேறு வழி தெரியாமல் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து 8 மணி நேரத்துக்கும் அதிகமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #KiranBedi #Narayanaswamy #RajNivas #Protest
    தமிழகம், புதுச்சேரியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. #Rain #MeteorologicalCentre
    சென்னை:

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரி கடல் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வை பொறுத்து மழை வலுப்பெறுமா? என்பது தெரியவரும்.



    சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rain #MeteorologicalCentre
    ×