என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94368"
ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா கடந்த 2014 ஆண்டு, பூமிக்கு அருகே உள்ள ர்யுகு (Rygu) என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக, ஹயபுஸா 2 ( Hayabusa 2) என்னும் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜீன் மாதம் 27ம் தேதி ர்யுகுவைச் சென்றடைந்தது.
இந்நிலையில், ஹயபுஸாவில் பொருத்தபட்டிருந்த MINERVA-II 1 என்று அழைக்கப்படும் 2 ஆளில்லா ரோவர் வின்கல் மீது கடந்த சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக தரையிரக்கிக்கியதாக ஜாக்ஸா அறிவித்துள்ளது. விண்கல்லில் ஆளில்லா ரோவர்களை தரையிரக்கியது இதவே முதல் முறையாகும்.
இதன் விண்கல் மீது மூலம் முதல் முறையாக ஆளில்லா ரோவர்களை தரையிறக்கிய நாடு எனும் வரலாற்று சாதனையை ஜப்பான் தனதாக்கி கொண்டது.
This is a picture from MINERVA-II1. The color photo was captured by Rover-1A on September 21 around 13:08 JST, immediately after separation from the spacecraft. Hayabusa2 is top and Ryugu's surface is below. The image is blurred because the rover is spinning. #asteroidlandingpic.twitter.com/CeeI5ZjgmM
— HAYABUSA2@JAXA (@haya2e_jaxa) September 22, 2018
Photo taken by Rover-1B on Sept 21 at ~13:07 JST. It was captured just after separation from the spacecraft. Ryugu's surface is in the lower right. The misty top left region is due to the reflection of sunlight. 1B seems to rotate slowly after separation, minimising image blur. pic.twitter.com/P71gsC9VNI
— HAYABUSA2@JAXA (@haya2e_jaxa) September 22, 2018
This dynamic photo was captured by Rover-1A on September 22 at around 11:44 JST. It was taken on Ryugu's surface during a hop. The left-half is the surface of Ryugu, while the white region on the right is due to sunlight. (Hayabusa2 Project) pic.twitter.com/IQLsFd4gJu
— HAYABUSA2@JAXA (@haya2e_jaxa) September 22, 2018
இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சில தீவு கூட்டங்களை ரஷியா கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
குரிலே தீவுகள் என்றழைக்கப்படும் இந்த தீவு கூட்டத்தை தங்கள் நாட்டு வடக்கு எல்லை என்று ஜப்பான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், பல ஆண்டுகளாக ரஷியா - ஜப்பான் இடையே சுமூக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சமீபத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ரஷியா சென்றிருந்தார். அங்குள்ள விளாடிவோஸ்ட்டோக் நகரில் ஜப்பான் பிரதமருடன் செய்தியாளர்களை சந்தித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சர்ச்சைக்குரிய தீவுகள் பிரச்சனையில் எவ்வித முன்நிபந்தனைகளுமின்றி சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திகொள்ள இருநாடுகளும் முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் இருதரப்பு கூட்டத்தில் சுமூகமான தீர்வு காணப்படலாம் என ரஷிய அதிபரிடம் நான் நம்பிக்கை தெரிவித்தேன் என்றும் அவர் தெரிவித்தார். #ShinzoAbe #JapanRussiapeace
நில நடுக்கத்தின் அளவு 6.7 ரிக்டர் ஸ்கேல் ஆக பதிவாகி இருக்கிறது. இதன் தாக்கம் அதிகமாக இருந்தாலும் ஜப்பானில் நில நடுக்கத்தால் அதிக பாதிப்பு இல்லாத வகையிலான வீடுகளே அதிகம் கட்டப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் இல்லை.
நிலநடுக்கம் மின் இணைப்புகளையும் கடுமையாக பாதித்தது. இதனால் அந்த தீவில் உள்ள 30 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன. #earthquakejapan
மும்பைக்கும்- அகமதாபாத்துக்கும் இடையே அதிவேக புல்லட் ரெயில் 2022-ம் ஆண்டு இறுதியில் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மணிக்கு 508 கி.மீ. வேகத்தில் இயங்கும் இந்த ரெயில் கட்டுமான பணிகள் ஜப்பான் உதவியுடன் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக ஜப்பானிடம் இருந்து 18 ரெயில்கள் வாங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ரெயிலிலும் தலா 10 பெட்டிகள் இருக்கும். அவற்றை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். இதற்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும். அதில் ஜப்பான் நிறுவனங்கள் பங்கேற்கிறது.
புல்லட் ரெயில் மூலம் மும்பை- அகமதாபாத்துக்கு தினமும் 18 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும். அதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்துக்கும் கீழ் நிர்ணயிக்கப்படும். விமானத்தில் இருப்பது போன்று புல்லட் ரெயிலிலும் முதல் வகுப்பு வசதி இருக்கும். #India #Railways #BulletTrain #Japan
ஜப்பானில் மேற்கு கடற்கரை பகுதியில் ‘ஜெபி’ என பெயரிடப்பட்டுள்ள புயல் கடுமையாக தாக்கியது. இதனால் மணிக்கு 216 கி.மீ வேகத்தில் சூறாவளியுடன் கூடிய காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது.
இதன்காரணமாக மத்திய இஷிகவா, ஒசாகா, நகோயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலத்த காற்று காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருளில் தவித்தனர். காற்று பலமாக வீசியதால் ரோடுகளில் சென்று கொண்டிருந்த மற்றும் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தலைகீழாக புரட்டி போடப்பட்டு கவிழ்ந்தன.
ஒசாகா வளைகுடாவில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ஒரு லாரி தூக்கி வீசப்பட்டது. கயோடோ ரெயில் நிலையத்தில் மேற்கூரை சரிந்தது.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியில் உள்ள பாலம் உடைந்துவிட்டது. இதனால் அங்கிருந்து 3 ஆயிரம் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இதேபோன்று ஜப்பானில் உள்ள பல விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
புல்லட் ரெயில் சேவையும், பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. கடலில் ராட்சத அலைகள் எழும்புவதால் படகு மற்றும் கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் ஷின்சோ அபே அவசர கூட்டம் கூட்டி விரைவான மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்தார். பொதுமக்களின் உயிரை காப்பாற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடும்படி அறிவுறுத்தினார்.
இதற்கிடையே புயல் மழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். 200 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜப்பானில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய கடும் புயல் தாக்கியுள்ளதாக வானிலை ஆய்வுமைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். #Japan #typhon
ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் இன்று கடந்த 25 ஆண்டுகால வரலாறு காணாத அதிவேக ‘ஜெபி’ புயல் வீசியது. மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் பல பகுதிகளை துவம்சம் செய்த இந்த புயலால் பல வீடுகளின் மேற்கூரை நெடுந்தூரத்துக்கு பறந்து சென்று விழுந்தன.
பாலங்களின் மீது சென்ற வாகனங்களை தலைகுப்புற கவிழ்த்துப்போட்ட இந்த பெரும்புயல், ஓசாகா கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சி இருந்த எண்ணெய் கப்பலையும் நிலைகுலையச் செய்தது.
அந்த கப்பல் நகர்ந்து சென்று பாலத்தின் அடிப்பக்கத்தில் மோதியதால் இசுமிஸானோ நகரில் இருந்து கன்சாய் நகர விமான நிலையத்துக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்குள் கடல்நீர் புகுந்து ஆறுபோல் காட்சி அளிக்கிறது.
நகோயா மற்றும் ஓசாகா நகரில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சுமார் 800 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், புல்லட் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
வீரியத்துடன் நகர்ந்துவரும் புயலால் மரத்திலான வீடுகள் மற்றும் விளக்கு கம்பங்கள் சாய்ந்து விழக்கூடும் என்பதால் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மழை வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்படும் என அஞ்சப்படுவதால் மக்கள் தங்களது உயிரை காத்துகொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், புயல் சார்ந்த விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகவும், 150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பான் தூதரகத்தின் முதன்மை செயலாளர் கென்ஜி அயா தலைமையிலான குழுவினர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கே.கே. நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை மற்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இக்குழுவில் சர்வதேச பல்கலைகழகத்தைச் சார்ந்த இணைப் பேராசிரியர் மெகுமி கொடைரா, யசுனோரி யவாட்டா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
பின்னர், அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஜப்பான் குழுவினர் பேசுகையில், “அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் தாய்ப்பால் வங்கித் திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டமாகும். மேலும், தமிழக அரசின் சீரிய திட்டங்களால் அதிக அளவில் ஏழை எளிய மக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் தரமான சிகிச்சை பெற்றுவருவது பாராட்டுக்குரியது. ஜப்பான் அரசு, தமிழகத்தில் மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எல்லாவிதமான ஒத்துழைப்பையும் நல்கும். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த உதவி செய்வோம்’ என்றனர்.
இதற்கு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தமிழக அரசு ஜப்பான் அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் முதன்மைச்செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #TNMinister #Vijayabaskar #Egmorechildrenhealthhospital
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஹாக்கி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டத்தில் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்றது.
இந்தோனேஷியா (8-0), கஜகஸ்தான் (21-0), தென்கொரியா (4-1), தாய்லாந்து (5-0) ஆகிய அணிகளை வீழ்த்தியது.
அரை இறுதியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
தங்கப்பதக்கத்துக்கான இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய விளையாட்டில் பெண்கள் ஹாக்கியில் இந்தியா கடைசியாக 1982-ம் ஆண்டு தங்கம் வென்றது.
1998-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் தென்கொரியாவிடம் தோற்று வெள்ளி பதக்கம் பெற்றது. 2006, 2014-ம் ஆண்டுகளில் வெண் கல பதக்கம் வென்றது.
தோல்வியே சந்திக்காமல் இந்தியா இறுதிப்போட்டியில் முன்னேறி இருக்கிறது. இதுவரை 39 கோல்கள் அடித்து இருக்கிறது.
ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டு கொடுத்து இருக்கிறது. நவ்ஜோத், நவனீத்கவுர், எக்சா, குருஜித் கவுர், மாலிக், தீபிகா, ரீனா போன்ற வீராங்கனைகள் நல்ல நிலையில் உள்ளனர்.
ஜப்பான் அணியும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்து உள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். 36 ஆண்டுக்கு பிறகு இந்தியா தங்கம் வென்று சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்கள் ஹாக்கி அரை இறுதியில் இந்தியா தோற்றது. மலேசியாவிடம் ஷிட்- அவுட்டில் 6-7 என்ற கோல் கணக்கில் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.
இதையடுத்து நாளை வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
குத்துச்சண்டை போட்டியில் இன்று மாலை நடக்கும் ஆண்களுக்கான 49 கிலோ எடை பிரிவில் அரைஇறுதியில் இந்திய வீரர் அமித்பன்ஹால் பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோவை சந்திக்கிறது.
இதேபோல் ஆண்களுக்கான 75 கிலோ எடை பிரிவு அரைஇறுதியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன்- கஜகஸ்தானின் அபில்கான் அமன்குல் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
இன்று நடந்த ஜூடோ பெண்களுக்கான 78 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ராஜ்விந்தர் கவுர் சீனதைபே வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். #AsianGames #WomensHockey
ஜப்பானில் உள்ள யமாகுச்சி பிராந்தியத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்றார்.
அங்கு சுற்றிப்பார்த்து கொண்டிருந்தபோது 2 வயது பேரக்குழந்தையான யோஷிகி புஜிமோட்டோ காணாமல் போய்விட்டான். அவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேடினார்கள். 3 நாட்கள் ஆகியும் குழந்தையை கண்டு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் 78 வயது சமூக ஆர்வலர் ஒருவர் அந்த குழந்தை காட்டுக்குள் இருப்பதை கண்டுபிடித்தார். அருகில் தண்ணீர் குட்டை ஒன்று இருக்க அதன் அருகில் உள்ள பாறையில் அந்த குழந்தை அமர்ந்திருந்தது. குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
அந்த குழந்தை 3 நாட்களும் அருகில் இருந்த குட்டையில் தண்ணீரை குடித்து உயிர்வாழ்ந்துள்ளது. ஜப்பானில் தற்போது கடுமையான வெயில் தாக்கம் உள்ளது. இந்த நிலையிலும் காட்டுக்குள் தாக்குபிடித்து 3 நாட்களாக இருந்துள்ளான்.
வெயில் காரணமாக அவனது உடலில் நீர்சத்து குறைந்து இருந்தது. காட்டுக்குள் சுற்றி திரிந்ததால் ஆங்காங்கே அவனது உடலில் கீறல்கள் ஏற்பட்டு இருந்தன. அவனை மீட்டது குறித்து சமூக ஆர்வலர் கூறியதாவது:-
நான் காட்டுக்குள் சென்று கொண்டிருந்தபோது ஒரு பாறையில் யாரோ ஒரு குழந்தை அமர்ந்து இருப்பது போல் தெரிந்தது. இந்த பகுதியில் மனிதர்கள் யாரும் நடமாடுவது இல்லை. எனவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அருகில் சென்று பார்த்தபோது அது குழந்தை என்று தெரிந்தது. அதை பார்த்ததும் என் இதயமே நின்றுவிடுவது போல் இருந்தது. உடனே நான் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #YoshikiFujimoto #westernJapan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்