search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94368"

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி 3 - 2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #BELJPN #BelgiumvJapan
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தி இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார்.

    மேலும், ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் டகாஷி இனுல் ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜியம் அணியின் ஜேன் வெர்டோகன் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.  

    அதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 74 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதியில் இரு அணிகளும் சமனிலை வகித்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

    இறுதியில், ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup #BELJPN #BelgiumvJapan #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    பெல்ஜியம் - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 0-0 என சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #BELJPN #BelgiumvJapan
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன. #WorldCup #BELJPN #BelgiumvJapan #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #WorldCup2018 #JAPSEN
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் செனகல் அணியின் சாடியோ மானே ஒரு கோல் அடித்தார்.

    இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டகாஷி இனுல் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-1 என சமனிலை வகித்தன.



    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 71-வது நிமிடத்தில் செனகல் அணியின் மூசா வேக் ஒரு கோல் அடிக்க 2-1 என முன்னிலை பெற்றது.

    ஆனால், ஜப்பான் அணியினர் அடுத்த சில நிமிடங்களில், அதாவது 78-வது நிமிடத்தில் கைசுகே ஹோண்டா ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமனிலை பெற்றது. அதன்பின், ஆட்டம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    கூடுதலாக கிடைத்த நிமிடங்களிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளன.
    ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். #JapanEarthquake #EarthquakeOsaka
    டோக்கியோ:

    ஜப்பானின் ஒசாகா, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 அலகாக பதிவாகியிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் வீடுகள் குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் பீதி அடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர்.

    இந்த கடுமையான நிலநடுக்கத்திற்கு  குறைந்தபட்சம் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தின்போது பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் முதியவர் ஒருவரும், வீட்டிலுள்ள புத்தக அலமாரியில் சிக்கி ஒருவரும் உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.



    மக்கள் அதிகமாக நடமாடும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்குள்ள விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டது. ரெயில் சேவைகள் தடைப்பட்டன. தொழிற்சாலை பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பலர் நகரும் படிக்கட்டுகளில் சிக்கிக்கொண்டனர். சாலைகளின் கீழே செல்லும் தண்ணீர் குழாய்கள் உடைந்து சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அருகில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. #JapanEarthquake #EarthquakeOsaka

    ஏழை மக்களின் சுகாதாரத்துக்காக தொண்டாற்றிவரும் சுலப் இண்டர்நேஷனல் நிறுவனருக்கு ஜப்பான் நாட்டின் உயரிய நிக்கி ஆசியா பரிசு வழங்கப்பட்டது. #SulabhInternational #JapanNikkeiAsiaawards
    டோக்கியோ:

    ஆசிய நாடுகளில் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, கலாச்சாரம் மற்றும் சமூகத்துக்கு சேவையாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜப்பான் நாட்டில் நிக்கி ஆசியா பரிசு அளிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பரிசை இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி ஆகியோருக்கு இந்த பரிசு அளிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், இந்தியாவில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், பொதுமக்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படவும் தொண்டாற்றிய சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் இந்த ஆண்டுக்கான நிக்கி ஆசியா பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற விழாவில் கலாச்சாரம் மற்றும் சமூகத்துக்கான நிக்கி ஆசியா பரிசை பிந்தேஷ்வர் பதக்(75) பெற்று கொண்டார். இந்த பரிசை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்து கொண்டார். #SulabhInternational #JapanNikkeiAsiaawards

    ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தில் 5 வயது பெண் குழந்தையை தாயே பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் யூரி (வயது 25). இவர், வாலிபர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார்.

    அவர்களுக்கு யுவா என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் யூரி அந்த வாலிபரை பிரிந்து புனாட்டோ (33) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    முதல் கணவருக்கு பிறந்த யுவாவையும் தன்னுடன் வைத்து வளர்த்து வந்தார். நாளடைவில் அந்த குழந்தை மீது யூரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. 2-வது கணவர் புனாட்டோவும் வெறுப்பை காட்டினார்.

    அவர்கள் இருவரும் குழந்தை யுவாவை கொடுமைப்படுத்தினார்கள். தற்போது அவளுக்கு 5 வயது ஆகி இருந்தது. தொடர்ந்து கொடுமைப்படுத்தியதுடன் உணவும் கொடுக்காமல் பட்டினி போட்டனர். இதில், அந்த குழந்தை இறந்து விட்டது.

    இதன் பிறகு போலீசுக்கு புனாட்டோ போன் செய்து தனது குழந்தை திடீரென மயங்கி விழுந்து விட்டதாகவும், இதய துடிப்பு இல்லை என்றும் கூறினார்.

    போலீசார் அங்கு வந்து பார்த்தனர். அந்த குழந்தை இறந்து கிடந்தது. 5 வயதில் குழந்தைகள் 20 கிலோ வரை எடை இருக்கும். ஆனால், இந்த குழந்தை 12 கிலோதான் எடை இருந்தது. மிகவும் ஒல்லியாக இருந்தது. எனவே, சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    யுவாவின் நோட்டு புத்தகத்தை பார்வையிட்டனர்.

    அப்போது ஒரு இடத்தில் தனது தாயும், வளர்ப்பு தந்தையும் தன்னை தினமும் கொடுமைப்படுத்துகிறார்கள். இதை யாராவது தடுத்து நிறுத்துங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, கணவன் - மனைவி இருவருமே அந்த குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொன்றதாக கூறினார்கள். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். #Tamilnews
    உலக புகழ்பெற்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோகோ-கோலா, ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து முதன்முறையாக மதுபானத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. #LemonDo #firstalcoholicdrink #CocaCola

    கோகோ-கோலா, உலக புகழ்பெற்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் குளிர்பானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கோகோ-கோலா நிறுவனம் முதன்முறையாக மதுபானத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானின் சூ கி என்ற நிறுவனத்துடன் இணைந்து கோகோ-கோலா நிறுவனம் மதுபான விற்பனையை துவக்கியுள்ளது.

    ஜப்பானில் அறிமுகமாகியுள்ள லெமன்-டோ என்ற இந்த மதுபானம் லேசான எலுமிச்சையின் சுவையைக் கொண்டிருக்கிறது. அதில் ஆல்கஹாலின் அளவு 3 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குளிர்பானத்தை இளம் பெண்கள் அதிகம் விரும்புவார்கள் என்று அதை தயாரித்த நிறுவனம் கூறியுள்ளது. 



    பீருக்கு போட்டியாக இந்த பானத்தின் விற்பனை இருக்கும் எனவும், ஜப்பானுக்கு வெளியில் இந்தப் பானத்தை விற்க திட்டம் எதுவும் இல்லை எனவும் கோகோ-கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    ஜப்பானில் 350 மில்லி லீட்டர் கேன் அளவில் கிடைக்கும் இதன் விலை 150 யென் (இந்திய மதிப்பில் 93 ரூபாய்). 125 ஆண்டுகளாக இயங்கி வரும் கோகோ-கோலா நிறுவனம் முதல் முறையாக மதுபான தயாரிப்பில் கால்பதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #LemonDo #firstalcoholicdrink #CocaCola
    அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான பேச்சுவார்த்தை நடப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜப்பான் பிரதமர் அபே தெரிவித்துள்ளார். #TrumpKimSummit #KimJongUn #DonaldTrump
    மாஸ்கோ:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

    நேற்று வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிம் உடனான ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடன் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.



    இந்நிலையில், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான பேச்சுவார்த்தை நடப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜப்பான் பிரதமர் அபே தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜப்பான் பிரதமர் அபே கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே நடக்கவுள்ள இந்த சந்திப்பால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவும். எனவே, இருநாடுகளின் பேச்சுவார்த்தை தொடர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். #TrumpKimSummit #KimJongUn #DonaldTrum
    பாங்காக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரின் பெண்கள் பிரிவில் ஜப்பான் 5-0 என இந்தியாவை வீழ்த்தியது. #UberCup #INDvJPN

    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உபேர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள இந்தியா பெண்கள் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. 

    முதலில் சாய்னா நேவால், ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை 21-19 என யமகுச்சி கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய சாய்னா 21-9 என அந்த செட்டை கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் யமகுச்சி 22-20 என அந்த செட்டையும் கைப்பற்றினார். இதனால் 21-19, 9-21, 22-20 என்ற செட் கணக்கில் யமகுச்சி வெற்றி பெற்றார்.

    இரட்டையர் பிரிவில் சன்யோகிதா கோர்பாடே- பிரஜக்தா சவந்த் ஜோடி 15-21, 6-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தது. மற்றொரு ஒற்றையர் பிரிவில் வைஷ்ணவி ரெட்டி ஜக்கா - நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இதில் 21-10, 21-13 என ஒகுஹாரா எளிதில் வெற்றி பெற்றார்.

    2-வது இரட்டையர் பிரிவில் மேகனா ஜக்கம்புடி - வைஷ்ணவி பலே ஜோடி 21-8, 21-17 என தோல்வியடைந்தது. கடைசி ஒற்றையர் பிரிவில் அனுரா பிரபுதேசாய் 21-12, 21-7 என ஜப்பான் வீராங்கனை தகாஹாஷியிடம் தோல்வியடைந்தார். இதனால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத இந்தியா 5-0 என ஜப்பானிடம் வீழ்ந்தது. #UberCup #INDvJPN
    ஜப்பான் நாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு 25 வினாடிகள் முன்னதாகவே பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றதால் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. #JapanRail
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அனைத்து போக்குவரத்து வாகனங்களும் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டுச் செல்லும். இதேபோல், குறிப்பிட்ட இடத்தையும் சரியான நேரத்தில் சென்றடைவது வழக்கம். 

    இந்நிலையில், ஜப்பான் நாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன் 25 வினாடிகள் முன்னதாகவே ரெயில் புறப்பட்டு சென்றதால் சிரமப்பட்ட பயணிகளிடம் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.

    ஜப்பான் நாட்டில் நோட்டகவா என்ற ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் காலை 7.12 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் செல்லும்.



    இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7.12 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில், சுமார் 25 வினாடிகள் முன்னதாக 7 மணி 11 நிமிடம் 35 வினாடிக்கு புறப்பட்டு கிளம்பி சென்றது. 

    இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் வழக்கமாக செல்லும் ரெயில் இல்லாததை கண்டு கோபம் அடைந்தனர். பள்ளிகள், அலுவலகங்களுக்கு காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு சிலர் ரெயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

    இதையடுத்து, பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு ரெயில்வே நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறாது எனவும் மன்னிப்பு கோரியுள்ளது. #JapanRail
    ×